Tuesday, April 24, 2007

படம்: உன்னாலே உன்னாலே
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக், ஹரிணி, கிருஷ்


பல்லவி
========
க்ரிஷ்: முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாகப் பரவசமாக வா வா வா அன்பே
ஓஹோ தனித்தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக வா வா அன்பே
கார்த்திக்: உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே
உன்முன்னே உன்முன்னே மெய்காண நின்றேனே
ஒரு சொட்டுக் கடலும் நீ ஒரு பொட்டு வானம் நீ
ஒரு புள்ளிப் புயலும் நீ பிரம்மித்தேன்
ஓ ஒளிவீசும் இரவும் நீ உயிர்கேட்கும் அமுதம் நீ
இமைமூடும் விழியும் நீ யாசித்தேன்
க்ரிஷ்: முதல் முதலாக முதல் முதலாக...

சரணம்-1
========
கார்த்திக்: ஒரு பார்வையின் நீளத்தை ஒரு வார்த்தையின் ஆழத்தை
தாங்காமல் வீழ்ந்தேனே தூங்காமல் வாழ்ந்தேனே
நதி மீது சருகைப் போல் உன்பாதை வருகின்றேன்
கரைத்தேற்றி விடுவாயோ கதிமோட்சம் தருவாயோ
மொத்தமாய் மொத்தமாய் நான்மாறிப் போனேனே
சுத்தமாய் சுத்தமாய் தூள்தூளாய் ஆனேனே
க்ரிஷ்: முதல் முதலாக முதல் முத்லாக..
கார்த்திக்: உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே
உன்முன்னே உன்முன்னே மெய்காண நின்றேனே

சரணம்-2
========
கார்த்திக்: நீயென்பது மழையாக நானென்பது வெயிலாக
மழையோடு வெயில் சேரும் அந்த வானிலை சுகமாகும்
ஹரிணி: சரியென்று தெரியாமல் தவறென்று புரியாமல்
எதில்வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான்
கார்த்திக்: என்வசம் என்வசம் இரண்டடுக்கு ஆகாயம்
இரண்டிலும் போகுதே என் காதல் கார்மேகம்
பபபபப்பப்ப பபபபப்பப்ப ..


ஹரிணி: உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே
உன்முன்னே உன்முன்னே மெய்காண நின்றேனே
கார்த்திக்: ஒரு சொட்டுக் கடலும் நீ ஒருபொட்டு வானம் நீ
ஒருபுள்ளிப் புயலும் நீ பிரம்மித்தேன்
ஹரிணி: ஒளிவீசும் இரவும் நீ உயிர்கேட்கும் அமுதம் நீ
இமைமூடும் விழியும் நீ யாசித்தேன்

Labels: , , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 4/24/2007 04:08:00 AM | Permalink | 0 comments
Monday, April 16, 2007
படம்: மொழி
பாடியவர்: யேசுதாஸ்
இசை: வித்யாசாகர்
பாடல்: வைரமுத்து

பல்லவி
======

பேசா மடந்தையே விழிபேசும் சித்திரமே
சேலைக் குழந்தையே என் செல்லக் கலவரமே
இதயம் என்னும் பூப்பறித்தேன் நரம்புகொண்டு சரம்தொடுத்தேன்
கையில் கொடுத்தேன் கண்ணே நீ காலில் மிதித்தாய் பெண்ணே (பேசா மடந்தையே)

சரணம்-1
========

ஏழுநிறங்களை எண்ணிமுடிக்கும் முன் வானவில் கரைந்தது பாதியிலே
மறுபடி தோன்றுமா பார்வையிலே
பெண்ணின் மனதினைக் கண்டுதெளியுமுன் வாழ்க்கை முடிந்தது குழப்பத்திலே
வானம் நடுங்குது மயக்கத்திலே
காதலைச் சொல்லிக் கரம்குவித்தேன் கற்புக்குப்பழி என்று கலங்குகிறாய்
பூஜைக்கு உனக்குப் பூப்பறித்தேன் பூக்களின் கொலை என்று நடுங்குகிறாய்
வார்த்தைகளால் காதலித்தேன் ஜாடைகளால் சாகடித்தாய்
மழைதான் கேட்டேன் பெண்ணே இடிமின்னல் தந்தாய் கண்ணே (பேசா மடந்தையே)

சரணம்-2
========

மூங்கில்காட்டிலே தீயும் அழகுதான் ஆனால் அதைநான் ரசிக்கவில்லல
அய்யோ இதயம் பொறுக்கவில்லை
கோபம் மூள்கையில் நீயும் அழகுதான் ஆனால் அதைநான் சுகிக்கவில்லை
சகியே என்மனம் சகிக்கவில்லை
உன்சினம் கண்டு என் இதயம் உடம்புக்கு வெளியே துடிக்குதடி
உன்மனம் இரண்டாய் உடைந்ததென்று என்மனம் நான்காய் உடைந்ததடி
விதை உடைந்தால் செடிமுளைக்கும் மனம் உடைந்தால் புல்முளைக்கும்
தண்டனை என்பது எளிது உன் மெளனம் வாளினும் கொடிது (பேசா மடந்தையே)

Labels: , , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 4/16/2007 08:33:00 PM | Permalink | 0 comments
Thursday, April 12, 2007

படம்                : தீபாவளி
பாடியவர்கள்  : யுவன்ஷங்கர்ராஜா
இசை               : யுவன்ஷங்கர்ராஜா
 
 
பல்லவி
======
ஆ: போகாதே போகாதே நீயிருந்தால் நானிருப்பேன்
      போகாதே போகாதே நீபிரிந்தால் நான் இறப்பேன்
      உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும் 
      கனவாய் எனை மூடுதடி
      யாரென்று நீயும் எனைப்பார்க்கும் போது
      உயிரே உயிர் போகுதடி
      கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து
      உந்தன் முகம் பார்ப்பேனடி (போகாதே போகாதே)
 
 
சரணம்-1
=======
ஆ: கலைந்தாலும் மேகம் அது மீண்டும் இருக்கும்
      அதுபோல தானே உந்தன் காதல் எனக்கும்
      நடைபாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதற்கு
      நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு
      உனக்காகக் காத்திருப்பேன் ஓஹோஹோ
      உயிரோடு பார்த்திருப்பேன் ஓஹோஹோ (போகாதே போகாதே)
 
 
சரணம்-2
=======
ஆ:  அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்
       அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்
       கண்தூங்கும் நேரம் பார்த்துக் கடவுள் வந்து போனதுபோல்
       என்வாழ்வில் வந்தே வானாய் ஏமாற்றம் தாங்கலையே
       பெண்ணே நீ இல்லாமல்ல்ல்ல்..
       பூலோகம் இருட்டிடுதேஏஏஏ... (போகாதே போகாதே)

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 4/12/2007 08:06:00 AM | Permalink | 0 comments

படம்          :  அன்பே சிவம்
பாடல்        : வைரமுத்து
பாடியவர்  : கமல்ஹாசன்
இசை         : வித்யாசாகர்
 
பல்லவி
========
ஆ: யார் யார் சிவம் நீ நான் சிவம்
      வாழ்வே தவம் அன்பே சிவம்
      ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்
      நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்
குழு: அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் 
        அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்)
ஆ: யார் யார் சிவம் நீ நான் சிவம்
 
 
சரணம் -1
==========
ஆ: யார் யார் சிவம் நீ நான் சிவம்
      வாழ்வே தவம் அன்பே சிவம்
      இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்
      அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்
குழு: அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்
       அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்)
 
 
சரணம் -2
==========
ஆ:  யார் யார் சிவம் நீ நான் சிவம்
      அன்பின் பாதை சேர்ந்தவருக்கு முடிவே இல்லையடா
      மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா
குழு: அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் 
       அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்)

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 4/12/2007 06:55:00 AM | Permalink | 4 comments
Tuesday, April 10, 2007
படம் : சிவாஜி
பாடியவர்கள் : ஹரிஹரன், மதுஸ்ரீ
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
பாடல் : வைரமுத்து

பல்லவி
========
: பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னைகையோ வவ்வல் வவ்வல்
உன் பூவிழிப் பார்வை போதுமடி
என் பூங்கா இலைகளும் பதறுமடி
உன் கால்கொலுசொலிகள் போதுமடி
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி
பெ: வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி)
அன்பா வாளையெடு அழகை சாணையிடு
உன்ஆண் வாசனை என் மேனியில் நீ பூசிவிடு
ஆ: அடி நெட்டை நிலவே ரெட்டைத் திமிரே
நெஞ்சில் முட்டிக் கொல்லு
பெ: வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி)
ஆ: பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னகையோ வவ்வல் வவ்வல்

சரணம்-1
=========
பெ: ஹோ.. ஆ..ஆ..ஆ..
ஆ: ஒரு வெண்ணிலவை மணக்கும் மன்மதன் நான்
என் தேன்நிலவே ஒரு நிலவுடன் தான்
அவள் யாருமில்லை இதோ இதோ இவள்தான்
பெ: புன்னகைப் பேரரசே தேன்குளத்துப்
பூவுக்குள் குளிப்பீரா ஆ..(புன்னகைப் பேரரசே)
விடியும்வரை மார்புக்குள் இருப்பீரா
விழிகளுக்குள் சிறுதுயில் கொள்வீரா
ஆ: ஓ.. பெண்களிடம் சொல்வது குறைவு செய்வது அதிகம்
செயல்புயல் நானடி
பெ: வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி)
ஆ: பூம்பாவாய்..

சரணம்-2
=======
ஆ: பொன் வாக்கியமே வாய் வாத்தியமே
உன் வளைவுகளில் உள்ள நெளிவுகளில்
வந்து ஒளிந்து கொண்டேன் சுகம்சுகம் கண்டேன்
பெ: ஆனந்த வெறியில் நான் ஆடைகளில்
பூமியை முடிந்து கொண்டேன்
விண்வெளியில் ஜதிசொல்லி ஆடி
வெண்ணிலவைச் சகதியும் ஆக்கிவிட்டேன்
ஆ: அடடடா குமரியின் வளங்கள் குழந்தையின் சிணுங்கல்
முரண்பாட்டு மூட்டை நீ

பெ: வாஜி.வா வா வா வா..
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி)
ஆ: பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்....

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 4/10/2007 08:55:00 AM | Permalink | 6 comments
Wednesday, April 04, 2007

படம்: பொறி
பாடியவர்கள் : மதுபாலகிருஷ்ணன், மதுஸ்ரீ
இசை: தினா


பல்லவி
======

ஆ: பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
பெ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
ஆ: விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம்
பெ: ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே
ஆ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
பெ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்

சரணம் 1
========

ஆ: பயணத்தில் வருகிற சிறுதூக்கம்
பருவத்தில் முளைக்கிற முதல்கூச்சம்
பெ: பரீட்சைக்குப் படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும் முதல்மாலை
ஆ: புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை
அன்பே அன்பே நீதானே
அடைமழை நேரத்தில் பருகும் தேநீர்
அன்பே அன்பே நீதானே
பெ: தினமும் காலையில் எனது வாசலில்
கிடக்கும் நாளிதழ் நீதானே
ஆ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
பெ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்


சரணம் 2
========

ஆ: தாய்மடி தருகிற அரவணைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு
பெ: தேய்பிறை போல்படும் நகக்கணுக்கள்
வகுப்பறை மேஜையில் நிஜம்கிறுக்கல்
ஆ: செல்போன் சிணுங்கிட குவிகிற கவனம்
அன்பே அன்பே நீதானே
பிடித்தவன் தருகிற பரிசுப் பொருளும்
அன்பே அன்பே நீதானே
பெ: எழுதும் கவிதையில் எழுத்துப் பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீதானே
ஆ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
பெ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 4/04/2007 02:42:00 AM | Permalink | 4 comments