Thursday, April 12, 2007

படம்                : தீபாவளி
பாடியவர்கள்  : யுவன்ஷங்கர்ராஜா
இசை               : யுவன்ஷங்கர்ராஜா
 
 
பல்லவி
======
ஆ: போகாதே போகாதே நீயிருந்தால் நானிருப்பேன்
      போகாதே போகாதே நீபிரிந்தால் நான் இறப்பேன்
      உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும் 
      கனவாய் எனை மூடுதடி
      யாரென்று நீயும் எனைப்பார்க்கும் போது
      உயிரே உயிர் போகுதடி
      கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து
      உந்தன் முகம் பார்ப்பேனடி (போகாதே போகாதே)
 
 
சரணம்-1
=======
ஆ: கலைந்தாலும் மேகம் அது மீண்டும் இருக்கும்
      அதுபோல தானே உந்தன் காதல் எனக்கும்
      நடைபாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதற்கு
      நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு
      உனக்காகக் காத்திருப்பேன் ஓஹோஹோ
      உயிரோடு பார்த்திருப்பேன் ஓஹோஹோ (போகாதே போகாதே)
 
 
சரணம்-2
=======
ஆ:  அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்
       அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்
       கண்தூங்கும் நேரம் பார்த்துக் கடவுள் வந்து போனதுபோல்
       என்வாழ்வில் வந்தே வானாய் ஏமாற்றம் தாங்கலையே
       பெண்ணே நீ இல்லாமல்ல்ல்ல்..
       பூலோகம் இருட்டிடுதேஏஏஏ... (போகாதே போகாதே)

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 4/12/2007 08:06:00 AM | Permalink | 0 comments
Friday, June 30, 2006
படம் : கண்ட நாள் முதல்
பாடியவர்கள்: சங்கர் மகாதேவன், சாதனாசர்கம்
இசை: யுவன்ஷங்கர்ராஜா

பல்லவி
======
ஆ: லை லை லை லை லாய் லாய் லாய்
லாஹி லாஹி லாஹிலே
மேற்கே மேற்கே மேற்கே தான்
சூரியன்கள் உதித்திடுமே
பெ: சுடும் வெயில் கோடைக்காலம்
கடும் பனி வாடைக்காலம்
இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா?
இலையுதிர் காலம் தீர்ந்து
எழுந்திடும் மண்ணின் வாசம்
முதல் மழைக்காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே
ஆ: ஓ மின்னலும் மின்னலும்
நேற்று வரை பிரிந்தது ஏனோ?
பின்னலாய்ப் பின்னலாய்
இன்றுடன் பிணைந்திடத் தானோ?
லை லை லை லை லாய் லாய் லாய்
லாயே லாயே லாய் லாய் லாய்
(மேற்கே மேற்கே தான்)

சரணம் - 1
=========
ஆ: ஓ கோபம் கொள்ளும் நேரம் வானம் எல்லாம் மேகம்
காணாமலே போகும் ஒரே நிலா
ஓ கோபம் தீரும் நேரம் மேகம் இல்லா வானம்
பெளர்ணமியாய்த் தோன்றும் அதே நிலா
பெ: இனி எதிரிகள் என்றே எவருமில்லை
பூக்களை விரும்பா வேர்களில்லை
நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே
இது நீரின் தோளில் கைபோடும்
ஒரு சின்னத் தீயின் கதையாகும்
திரைகள் இனிமேல் தேவையில்லையே
ஆ: மேற்கே மேற்கே தான்...

சரணம் - 2
=========
ஆ: வாசல் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டால்
நீதான் என்று பார்த்தேனடி சகி
பெண்கள் கூட்டம் வந்தால் எங்கே நீயும் என்றே
இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி
பெ: இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ
காற்றே சிறகாய் விரிந்திடுமோ
நிலவின் முதுகைத் தீண்டும் வேகமோ
அட தேவைகள் இல்லை என்றாலும்
வாய் உதவிகள் கேட்டு மன்றாடும்
மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ
ஆ: மேற்கே மேற்கே தான் சூரியன்கள்.....

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 6/30/2006 08:08:00 AM | Permalink | 1 comments
Wednesday, May 17, 2006
படம் : ராம்
பாடியவர் : மதுமிதா
இசை : யுவன் ஷங்கர் ராஜா

பல்லவி
-----------
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையைக் கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
(விடிகின்ற பொழுது தெரிந்திடுமா)


சரணம் - 1
-------------
உன்னாலே எனக்குள் உருவான உலகம்
பூகம்பம் இன்றி சிதறுதடா
எங்கேயோ இருந்து நீதீண்டும் நினைவே
எனை இன்னும் வாழ சொல்லுதடா
தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல்
தொடப்போகும் நேரம் மரணத்தின் வாசல்
காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடுச்சே
மெல்ல மெல்ல என்னைக் கொல்லத் துணிஞ்சிடுச்சே
தீயில் என்னை நிற்கவைச்சு சிரிக்கிறதே
தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேட்கிறதே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ


சரணம் - 2
-------------
காட்டுத்தீ போல கண்மூடித்தனமாய்
என்சோகம் சுடர்விட்டு எரியுதடா
மனசுக்குள் சுமந்த ஆசைகளெல்லாம்
வாய்பொத்தி வாய்பொத்தி நகருதடா
யாரிடம் உந்தன் கதைபேச முடியும்
வார்த்தைகள் இருந்தும் மெளனத்தில் கரையும்
பச்சைநிலம் பாலைவனம் ஆனதடா
பூவனமும் போர்க்களமாய் மாறுதடா
காலம் கூடக் கண்கள் மூடிக் கொண்டதடா
உன்னை விடக் கல்லறையே பக்கமடா
(விடிகின்ற பொழுது தெரிந்திடுமா)

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/17/2006 10:32:00 AM | Permalink | 2 comments
Tuesday, May 16, 2006
படம் : ராம்
பாடியவர் : விஜய் யேசுதாஸ் , யுவன் ஷங்கர் ராஜா
இசை : யுவன் ஷங்கர் ராஜா

பல்லவி
---------
நிழலினை நிஜமும் பிரிந்திடுமா
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா
கருவறை உனக்கும் பாரமா அம்மா
மீண்டும் என்னை ஒருமுறை சுமப்பாயம்மா...
லாஹில்லா லாஹி லல்லல்லாலல்லா லாஹில்லா லாஹி லல்லல்லால்லா (லாஹில்லா..)
(நிழலினை நிஜமும் பிரிந்திடுமா)

சரணம் - 1
-------------
நடமாடும் சவமாய் நானிங்கே இருக்க
விதிசெய்த சதியா தெரியலம்மா
கடல்துப்பும் அலையும் கடலில்தான் சேரும்
அதுபோல என்னையும் சேர்த்துக்கம்மா
உன்பிள்ளை என்று ஊர்சொல்லும் போது
எனக்கே நான் யாரோ என்றாகிப் போனேன்
ஒத்த சொந்தம் நீயிருந்தால் போதுமம்மா
மொத்த பூமி எனக்கேதான் சொந்தமம்மா
பத்துமாசம் உள்ளிருந்தேன் பக்குவமா
பூமிக்குநான் வந்ததென்ன குத்தமம்மா ...
லாஹில்லா லாஹி லல்லல்லாலல்லா லாஹில்லா லாஹி லல்லல்லால்லா

சரணம் - 2
-------------
லாஹில்லா லாஹி லலல்லலா லாஹில்லா லாஹி ஏ ஏ லாஹி
திசையெல்லாம் எனக்கு இருளாகிக் கிடக்கு
எங்கேயோ பயணம் தொடருதம்மா
என்னோட மனசும் பழுதாகிப்போச்சு
சரிசெய்ய வழியும் தெரியலம்மா
சூரியன் உடைஞ்சா பகலில்ல அம்மா
ஆகாயம் மறைஞ்சா அகிலமே சும்மா
என்னைச் சுத்தி என்னென்னமோ நடக்குதம்மா
கண்டதெல்லாம் கனவாகிப் போயிடுமா
தூக்கத்திலே உன்னநானும் தொலைச்சேனம்மா...
தேடித்தர தெய்வம் வந்து உதவிடுமா ஆ ஆ ஆ
லாஹில்லா லாஹி லல்லல்லாலல்லா லாஹில்லா லாஹி லல்லல்லால்லா

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/16/2006 11:49:00 AM | Permalink | 3 comments
Monday, May 15, 2006
படம் : ராம்
பாடியவர் : கே. ஜே. யேசுதாஸ்
இசை : யுவன் ஷங்கர் ராஜா

பல்லவி
---------
ஆராரிராரோ நானிங்கே பாட
தாயே நீ கண்ணுறங்கு
என்னோட மடி சாய்ந்து (ஆராரிராரோ)
வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் ஸ்வர்க்கமே
வேதம் நான்கும் சொன்னதே
அதை நான் அறிவேனே..
அம்மா என்னும் மந்திரமே
அகிலம் யாவும் ஆள்கிறதே (ஆராரிராரோ)


சரணம் - 1
------------
வேரில்லாத மரம் போல் என்னை
நீ பூமியில் நட்டாயே
ஊர் கண் எந்தன் மேலே பட்டால்
உன் உயிர் நோகத் துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
நீ சொல்லித் தந்தாயே
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வழிநடத்திச் சென்றாயே
உனக்கே ஓர் தொட்டில் கட்டி
நானே தாயாய் மாறிட வேண்டும் (ஆராரிராரோ)


சரணம் - 2
------------
தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம்
நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிரல்லவா
காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியின் மேலே
சுழலாத பூமியும் நீ
இறைவா நீ ஆணையிடு
தாயே எந்தன் மகளாய் மாற (ஆராரிராரோ)

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/15/2006 10:54:00 AM | Permalink | 2 comments