Wednesday, October 31, 2007

படம்: சந்திரலேகா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: அருண்மொழி, <பெண் பாடகி பெயர் தெரிந்தால் சொல்லுங்களேன்>
எழுதியவர்: <தங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்>


பல்லவி
========
ஆ: அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித்தூய்மையே
மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப்பாவையே
வானாடும் மீனே நீதானே வேண்டும்
ஊனாடும் உயிரே நீதானே வேண்டும்

பெ: அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித்தூய்மையே
அரும்பும் தளிரே

சரணம்-1
========
ஆ: இனிமையான பொன்மாலை வேளை வளையோசை தூது வந்ததே
இளையராணி வரும் நேரம் என்று இனிப்பான சேதி சொன்னதே
பெ: பூமாலை நீ சூடவே பாவையாய் மண்ணில் தோன்றினேன்
ஆ: என் ஜீவன் நீயாகவே எனதெல்லை நானும் தாண்டினேன்
பெ: வானம் பூமி வாழும் காலம் நானும் நீயும் வாழலாம்

ஆ: அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித்தூய்மையே
மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப்பாவையே
வானாடும் மீனே நீதானே வேண்டும்
ஊனாடும் உயிரே நீதானே வேண்டும்


சரணம்-2
=========
பெ: தலைவனாக நீ வேண்டும் என்று திருக்கோவில் தீபம் ஏற்றினேன்
விளக்கு வைத்து உன் பேரைச் சொல்லிக் குழல் மீது பூவைச் சூடினேன்
ஆ: தேனாற்றில் நீராடவே தேடினேன் தேடி வாடினேன்
பெ: நான் சூடும் நூலாடையாய் உனைத்தானே நாளும் சூடினேன்
ஆ: ராஜராஜன் கூடும் போது ராஜயோகம் வாய்த்தது

பெ: அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித்தூய்மையே
மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப்பாவையே
வானாடும் மீனே நீதானே வேண்டும்
ஊனாடும் உயிரே நீதானே வேண்டும்

ஆ: அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித்தூய்மையே
அரும்பும் தளிரே

நன்றி: இப்பாடலை எனக்கு அறிமுகம் செய்த நண்பர் யோகேஷ் பிரபுவுக்கும், இதனைத் தரவிறக்கம் செய்யும் சுட்டியை இப்பாடல் இருக்கும் எனத் தெரியாமலே அனுப்பிய நண்பன் தனஞ்செயனுக்கும்.

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 10/31/2007 05:25:00 AM | Permalink | 0 comments
Tuesday, October 30, 2007
படம்: தமிழ் எம்.ஏ
பாடியவர்: இளையராஜா
பாடல்: நா. முத்துக்குமார்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
 
 
பல்லவி
====== 
 
பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே (பறவையே) 
 
அடி என் பூமி தொடங்கும் இடம் எது நீதானே
அடி என் பாதை இருக்கும் இடம் எது நீதானே 
 
பார்க்கும் திசைகளெல்லாம் பாவை முகம் வருதே
மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ
கண்கள் கைகள் சொல்வதுண்டோ
 
நீ போட்டாய் கடிதத்தின் வரிகள் கடலாக
அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக  

(பறவையே எங்கு இருக்கிறாய்)

 
சரணம்-1
=======
உன்னோடு நானும் போகின்ற பாதை
இது நீளாதோ தொடு வானம் போலவே
 
கதை பேசிக் கொண்டே வா காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும் உன் மெளனங்கள் போதும்
 
இந்தப் புல் பூண்டும் பறவையின் நாமம் போதாதா
இனி பூலோகம் முழுதும் அழகாய்ப் போகாதா
 
முதல்முறை வாழப் பிடிக்குதே
முதல்முறை வெளிச்சம் பிறக்குதே
முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே 
 
முதல்முறை கதவு திறக்குதே
முதல்முறை காற்று வருகுதே
முதல்முறை கனவு பலிக்குதே அன்பே
 
சரணம்-2
=======
 
ஏழை காதல் மலைகள் தனில்
தோன்றுகின்ற ஒரு நதியாகும் 
 
மண்ணில் விழுந்தும் ஒரு காயமின்றி
உடையாமல் உருண்டோடும் நதியாகிடுதோ
 
இதோ இதோ இந்தப் பயணத்திலே
இது போதும் கண்மணி வேறென்ன நானும் கேட்பேன்
பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்
 
இந்த நிகழ்காலம் இப்படியேதான்  தொடராதா
என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா
 
முதல்முறை வாழப் பிடிக்குதே
முதல்முறை வெளிச்சம் பிறக்குதே
முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே
 
முதல்முறை கதவு திறக்குதே
முதல்முறை காற்று வருகுதே
முதல்முறை கனவு பலிக்குதே அன்பே
 

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 10/30/2007 02:19:00 AM | Permalink | 4 comments
Thursday, October 25, 2007
 
பாடல்: உயிரைத் தொலைத்தேன்
எழுதியவர்: திலீப்
பாடியவர்: திலீப்
தொகுப்பு: 'காதல் வேண்டும்' மலேசிய தமிழ் ஆல்பம்
 
 
பல்லவி
======
உயிரைத் தொலைத்தேன் அது உன்னில் தானோ
இது நான் காணும் கனவோ நிஜமோ
 
மீண்டும் உன்னைக் காணும் வரமே
வேண்டும் எனக்கே மனமே மனமே
 
விழியில் விழுந்தாய் ஆஆஆஆஆ
என்னில் எனதாய் நானே இல்லை
எண்ணம் முழுதும் நீதானே என் கண்ணே 
(உயிரைத் தொலைத்தேன் அது)
 
 
சரணம்-1
========
அன்பே உயிராய்த் தொடுவேன் உன்னை
தாலாட்டுதே பார்வைகள் (அன்பே உயிராய்த்) 
 
உனைச் சேரும் நாளை தினம் ஏங்கினேனே
நானிங்கு தனியாக அழுதேன்
 
விடியும் வரை கனவின் நிலை
உனதாய் இது தினம் ஏங்குது
மனம் உருகிடும் நிலை இது எந்தன்
முதல் முதல் வரும் உயிர்க் காதலில்
 
(உயிரைத் தொலைத்தேன் அது)
 
சரணம்-2
========
 
நினைத்தால் இனிக்கும் இளமை நதியே
உன்னோடு நான் மூழ்கினேன் (நினைத்தால் இனிக்கும்)
 
தேடாத நிலையில் நோகாத வழியில்
கண் பார்க்கும் இடம் எங்கும் நீதான்
 
விடியும் வரை கனவின் நிலை
உனதாய் இது தினம் ஏங்குது
மனம் உருகிடும் நிலை இது எந்தன்
முதல் முதல் வரும் உயிர்க் காதலில் 

(உயிரைத் தொலைத்தேன் அது)

 ஓ ஓ ஓ.. ஓ ஓ ஓ...
 
நன்றி: இந்தப் பாடலை முதன்முதலில் மின்னஞ்சலில் எனக்கனுப்பிய தோழன் தனஞ்செயனுக்கு!

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 10/25/2007 03:32:00 AM | Permalink | 4 comments
Wednesday, October 24, 2007

படம்: க‌ருப்ப‌சாமி குத்த‌கைதார‌ர்
பாடியவர்: பாம்பெ ஜெய‌ஸ்ரீ
இசை: தினா

பல்லவி
=======

பெ: உப்புக்க‌ல்லு த‌ண்ணீருக்கு ஏக்க‌ப்ப‌ட்ட‌து
    க‌ண்ணு ரெண்டும் க‌ண்ணீருக்கு வாக்க‌ப்ப‌ட்ட‌து
    ஒத்த‌ச் சொல்லு புத்திக்குள்ள‌ மாட்டிக்கிட்ட‌து
    த‌ப்பிச் சொல்ல‌க் கூடாதுன்னு கேட்டுக்கிட்ட‌து
    தேதித் தாளைப் போலே வீணே நாளும் கிழிய‌றேன்
    நான் தேர்வுத் தாளை க‌ண்ணீரால‌ ஏனோ எழுதுறேன்
    இது க‌ன‌வா ஆஆஆஆ... இல்லை நிஜ‌மா
    த‌ற்செய‌லா தாய் செய‌லா..
    நானும் இங்கு நானும் இல்லையே (உப்புக்க‌ல்லு) 
   

சரணம்‍‍‍‍‍ 1
=========

பெ: ஏதும் இல்லை வண்ண‌ம் என்று நானும் வாடினேன்
     நீ ஏழு வ‌ண்ண‌ வான‌வில்லாய் என்னை மாத்துன‌
    தாயும் இல்லை என்று உள்ள‌ம் நேற்று ஏங்கினேன்
    நீ தேடி வ‌ந்து நெய்த‌ அன்பால நின்று தாக்கினாய்
    க‌த்தி இன்றி ர‌த்த‌ம் இன்றிக் காய்ப்ப‌ட்ட‌வ‌ள்
    உன் க‌ண்க‌ள் செய்த‌ வைத்திய‌த்தால் ந‌ன்மைய‌டைகிறேன்
    மிச்சம் இன்றி மீதம் இன்றி சேத‌ப்ப‌ட்ட‌வ‌ள்
    உன் நிழ‌ல் கொடுத்த‌ தைரிய‌த்தால் உண்மைய‌றிகிறேன்

    உப்புக்க‌ல்லு த‌ண்ணீருக்கு ஏக்க‌ப்ப‌ட்ட‌து
    ஒத்த‌ச்சொல்லு புத்திக்குள்ள‌ மாட்டிக்கிட்ட‌து
    ஓ ஓ ஓ ஓஒ


சரணம் 2
=========

பெ: மீசை வைத்த‌ அன்னை போல‌ உன்னைக் காண்கிறேன்
     நீ பேசுகின்ற‌ வார்த்தை எல்லாம் வேத‌மாகுதே
     பாழ‌டைந்த‌ வீடு போல‌ அன்று தோன்றினேன்
     உன் பார்வை ப‌ட்ட‌ கார‌ண‌த்தால் கோல‌ம் மாறுதே
     க‌ட்டிலுண்டு மெத்தை உண்டு ஆன‌ போதிலும்
     உன் பாச‌ம் க‌ண்டு தூங்க‌வில்லை என‌து விழிகளே        
     தென்ற‌லுண்டு திங்க‌ளுண்டு ஆன‌ போதிலும்
     க‌ண் நாளும் இங்கு தீண்ட‌வில்லை உன‌து நினைவிலே
     (உப்புக்க‌ல்லு த‌ண்ணீருக்கு ஏக்க‌ப்ப‌ட்ட‌து)

 

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 10/24/2007 07:58:00 AM | Permalink | 0 comments
Monday, October 22, 2007
படம்        :  வேல்
பாடியவர்: ஹரிசரண்
இசை       : யுவன்ஷங்கர்ராஜா
 
பல்லவி
======
ஒற்றைக்கண்ணால உன்னைப் பார்த்தேனடி ஒறங்கவில்லை என் மனசு
ஓரக்கண்ணால என்னைப் பார்த்தாயடி ஒறங்கவில்லை என் மனசு
புரியலையே புரியலையே நீ யாருன்னு புரியலயே
தெரியலையே தெரியலையே இது காதல் தான்னு தெரியலயே
தெரியாத பொண்ணப் பாத்தா புதுசாத் தான் காதல் பூக்குதே
காதல் பூக்குதே ஹே ஹே ஹே (ஒற்றைக் கண்ணாலே)  
 
 
சரணம்-1
=======
ஹோ சாலையோரப் பூக்கள் எல்லாம் உன்னைப் பார்த்து விழுகிறதே
மாலை நேரப் பட்டாம்பூச்சி உன்னைப் பார்க்கத் துடிக்கிறதே
நித்தம் நித்தம் உன்னை நினைத்து ரத்தம் எல்லாம் கொதிக்கிறதே
உன்னை உன்னை நெருங்கும் போது அத்தனை நரம்பும் வெடிக்கிறதே
பெண்ணே உன் கால்தடங்கள் மண்மீது ஓவியமாய்
கண்ணே உன் கைநகங்கள் விண்மீது வெண்பிறையாய்
தெரியாத பெண்ணைப் பாத்தால் தெரியாமல் காதல் பூக்குதே
காதல் பூக்குதே (ஒற்றைக் கண்ணாலே) 
 
 
சரணம்-2
========
ஹோ கோடைக்காலச் சாரல் ஒன்று என்னை விரட்டி நனைக்கிறதே
காலை நேரம் காலைத் தொட்ட பனித்துளி கூட சுடுகிறதே
மலரே மலரே உந்தன் வாசம் எந்தன் நெஞ்சை உடைக்கிறதே
அழகே அழகே உந்தன் பார்வை என்னைக் கட்டி இழுக்கிறதே
பெண்ணே உன் வாய்மொழிகள் நான் கண்ட வேதங்களா
கண்ணே உன் ஞாபகங்கள் நான் கொண்ட சாபங்களா
அறியாத பெண்ணைப் பார்த்தால் அறியாமல் காதல் பூக்குதே
காதல் பூக்குதே (ஒற்றைக் கண்ணாலே)
 
 
நன்றி: இந்தப் பாடலின் சுட்டியை எனக்கனுப்பிய தோழி பொன்னரசிக்கு!
 

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 10/22/2007 08:46:00 AM | Permalink | 2 comments
Friday, October 05, 2007
பாடல்: ஏன் இன்னும் மெளனம்
ஆல்பம்: தென்றலாய் வந்தாய்
 
பல்லவி
======
பெ: ஏன் இன்னும் மெளனம் நீ பேசவில்லை
      ஏன் என்று சொல்லு என் கண்ணனே
      ஏன் இன்னும் என்னை நீ பார்க்கவில்லை
      ஏன் உந்தன் பாசம் நான் பெறவில்லை
      என் நெஞ்சம் அது துடிக்கின்றது
      உன் பேரை அது அழைக்கின்றது
      எனைச் சேராயோ கண்ணா ஆஆ (ஏன் இன்னும் மெளனம்) 
 
சரணம்-1
=======
பெ: நெஞ்சே ஆசை கொள்ளை இன்பம்
       நாளும் அது உன்பேரைச் சொல்லித் தாவிப்போனது
      அன்பில் உனைச் சேராது உள்ளம் உனைத் தீண்டாது
       ஏனோ மனம் எந்நாளும் உந்தன் நிழலாய்ப் போனது
       வானம் எனது பூமி ஏனோ நீயும் எனது காதல் ஏனோ
       இதயத்தில் தினம் காதல் பூக்கள் பூத்தபடி கண்ணா
       காதலை தினம் கொண்டாடச் சொல்லி சொன்னது கண்ணா
       தேவன் உனை நான் பார்த்த பின்னே நெஞ்சம் மூழ்கிப் போனேன்
       காதலில் தினம் உன்பேரைச் சொல்லி கவிதைகள் ஆயிரம் சொன்னேன்
       (ஏன் இன்னும் மெளனம் நீ பேசவில்லை)
 
சரணம்-2
=======
பெ: பூ சிறு பூ என்னை அள்ளிக் கொள்ளக் கூடாதா உன் கையில்
      தேன் துளி தேன் நான் உன்னை சேரலாகாதா என் கண்ணா
      இரவோ இனிமை நிலவோ பசுமை
      ஆனந்தம் இல்லை நான் தேடி வந்தேன் நீ வரவில்லை நான் பேசவில்லை
      கண் விழித்தால் உன் ஞாபகம் கண் மூடினால் உன் ஞாபகம்
      ஏன் ஏன் நீ வரவில்லை கண்ணா நீ வந்து நீரூற்று என் நெஞ்சிலே
      (ஏன் இன்னும் மெளனம் நீ பேசவில்லை)
 

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 10/05/2007 07:22:00 AM | Permalink | 10 comments
Monday, October 01, 2007

படம்: மலைக்கோட்டை
இசை: மணிசர்மா
பாடியவர்: விஜய் யேசுதாஸ்
பாடல்: யுகபாரதி

பல்லவி
======

தேவதையே வா என் தேவ‌தையே வா
உன் இருவிழி அசைவுக‌ள் எழுதிடும் க‌விதை நான்
பூம‌ழையே வா என் பூம‌ழையே வா
உன் விர‌ல்தொடும் தொலைவினில் விழுகிற‌ அருவி நான்
நீரில்லாம‌ல் மீன்க‌ளும் வேரில்லாமல் பூக்க‌ளும்
பாவ‌ம் தானே பூமியில்
சிலுவைளும் சிற‌கென‌ப் ப‌ற‌ந்திடு

தேவ‌தையே வா என் தேவ‌தையே வா
உன் இருவிழி அசைவுக‌ள் எழுதிடும் க‌விதை நான்

சரணம்-1
=======


விளையும் பூமி த‌ண்ணீரை வில‌கச் சொல்லாது
அலைக‌ட‌ல் சென்று பாயாம‌ல் ந‌திக‌ள் ஓயாது
சிதைவுக‌ள் இல்லை என்றாலே சிலைக‌ள் இங்கேது
வ‌ருவ‌தை எல்லாமல் ஏற்காம‌ல் போனால் வாழ்வேது
பாதை தேடும் கால்க‌ள் தான் ஊரைச் சேரும்
குழலை சேரும் தென்ற‌ல் தான் கீத‌மாகும்
சுற்றும் இந்த‌ பூமியை சுழ‌ல‌ச் செய்யும் காத‌லை
க‌ற்றுக் கொண்டேன் உன்னிட‌ம்
இருவரும் இனி ஒரு உயிர் பிரிவில்லை

ச‌ர‌ண‌ம்-2
=======

அடைம‌ழை ந‌ம்மைத் தொட்டாலே வெயிலே வாவென்போம்
அன‌லாய் வெயில் சுட்டாலே ம‌ழையே தூவென்போம்
த‌னிமைக‌ள் தொல்லை த‌ந்தாலே துணையைக் கேட்கின்றோம்
துணைவரும் நெஞ்சைக் கொள்ளாமல் தனியே தேய்கின்றோம்
ஆசை ம‌ட்டும் இல்லையேல் ஏது நாட்க‌ள்
கைக‌ள் தொட்டு சூட‌வே காத‌ல் பூக்க‌ள்
க‌ண்ணை விற்று ஓவிய‌ம் வாங்கும் இந்த‌ ஊரிலே
அன்பை வைத்து வாழ‌லாம்
சுக‌மென‌ தின‌ம் சுமைக‌ளில் ம‌கிழ்ந்திரு

தேவ‌தையே வா என் தேவ‌தையே வா
உன் இருவிழி அசைவுக‌ள் எழுதிடும் க‌விதை நான்
பூம‌ழையே வா என் பூம‌ழையே வா
உன் விர‌ல்தொடும் தொலைவினில் விழுகிற‌ அருவி நான்
நீரில்லாம‌ல் மீன்க‌ளும் வேரில்லாமல் பூக்க‌ளும்
பாவ‌ம் தானே பூமியில்
சிலுவைளும் சிற‌கென‌ப் ப‌ற‌ந்திடு

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 10/01/2007 03:54:00 AM | Permalink | 4 comments