Wednesday, November 13, 2013
படம்: யமுனா
பாடியவர்கள்: பிரசன்னா, சைந்தவி
பாடல் : வைரமுத்து
இசை : இலக்கியன்


சரணம்
--------------
ஆ:  ஓஹோஹோ ஒற்றைப் பனித்துளி உருண்டோடி உயிரில் விழுந்தது
         ஆஹாஹா அன்பின் கரம்தொட அலைமோதி நெஞ்சம் உடைந்தது
         ஓஹோஹோ ஒற்றைப் பனித்துளி உருண்டோடி உயிரில் விழுந்த்து
பெ:  ஆஹாஹா அன்பின் கரம்தொட அலைமோதி நெஞ்சம் உடைந்தது
          பார்த்த முதல் பார்வை வந்து என் தேகம் எங்கிலும் நனைந்து போகுதே
ஆ:   காற்றில் உன் சுவாசம் வந்து என் காயம் எங்கிலும் மருந்து போடுதே
           புதிய  உலகம் புதிய காற்று
பெ:   காதல் இசையில் கவிதை மீட்டு

ஆ:    தானன தானனனா தானனனன தானானா
            தானன தானனனா தானனனன தானனா

பெ:   ஓஹோஹோ ஒற்றைப் பனித்துளி உருண்டோடி உயிரில் விழுந்தது  


பல்லவி 1
----------------
ஆ:  கூந்தலை அள்ளி அள்ளிக்  குதிரை வால் போட்டுப் போட்டு
          நடந்து நீ வருகையில்  என் மனம் குதிரையாகுதே
பெ:  நெஞ்சிலே ரகசியமுண்டு கண்ணிலே ரகசியமில்லை
          காதலும் கர்ப்பமும் மறைப்பது சாத்தியமில்லை
ஆ:   தானமாய் வருவதை யாரும் திட்டம் போட்டுத் திருடுவதில்லை
           உன்னுயிர் மொத்தம் என்னதடி.
பெ :  சொந்தமாய் உள்ளதை எல்லாம் துறக்கும் போதே சொர்க்கம் கிட்டும்
           கவிதையில் ஞானிகள் சொன்னபடி
ஆ:    உயிர் தொடவா தொடவா
பெ :  இது கன்வா நனவா

ஆ:    தானன தானனனா தானனனன தானானா
            தானன தானனனா தானனனன தானனா
பெ:   ஓஹோஹோ ஒற்றைப் பனித்துளி
            உருண்டோடி உயிரில் விழுந்தது
       

பல்லவி 2
-----------------
ஆ:  காற்றிலே ஆடை சரிந்தால் கவசமாய்ப் புத்தகம் கொண்டாய்
          என்னையே கவசமாய் எப்போது அணியப் போகிறாய்
பெ:  என் மார்பில் உன்னை அணிந்தால் எப்போதும் இறங்கவும் மாட்டாய்
           இதயமே வருடுவாய் இரவோடு திருடப் பார்ப்பாய்
ஆ:  அள்ளியே தருவதினாலே கொள்ளை அழகு குறைவதுமில்லை
          மெளனமே மொழியின் உச்ச நிலை
பெ:  கூந்தலில் ஈரம் சொட்டக் குளித்து வந்த பின்னால் கூட‌
          குறும்புகள் இன்னும் ஓய்வதில்லை
ஆ:   இதில் பெறுதல் சுகமா
பெ:  இல்லை தருதல் சுகமா

ஆ:    தானன தானனனா தானனனன தானானா
            தானன தானனனா தானனனன தானனா
           (தானனா தானனனா...)


 -- மு. இராகவன் என்ற சரவணன்
    13 நவம்பர் 2013 புதன் மாலை 5 10 மணி (இந்திய நேரப்படி)
     நவி மும்பை | மகாராஷ்டிரா | இந்தியா

Labels: , , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 11/13/2013 03:47:00 AM | Permalink |


0 Comments: