Tuesday, October 09, 2012

படம்: தாண்டவம்
பாடல்: நா.முத்துக்குமார்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: சைந்தவி, சத்ய பிரகாஷ், ஜி.வி.பிரகாஷ் குமார்

சரணம்
========
உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும் போதும்  உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்

காதலாகிக் காற்றிலாடும்
ஊஞ்சலாய் நானாகிறேன்
காலம் தாண்டி வாழ வேண்டும்
வேறு என்ன கேட்கிறேன்

(உயிரின் உயிரே உனது விழியில்..)

பல்லவி 1
==========
சாயங்காலம் சாயும் நேரத்தில்
தோழி போல மாறுவேன்
சோர்ந்து நீயும் தூங்கும் நேரத்தில்
தாயைப் போலத் தாங்குவேன்

வேறு பூமி வேறு வானம் தேடியே நாம் போகலாம்
சேர்த்து வைத்த ஆசையாவும் சேர்ந்து நாமங்கு பேசலாம்
அகலாமலே அணுகாமலே இந்த நேசத்தை யார் நெய்தது
அறியாமலே புரியாமலே இரு நெஞ்சுக்குள் மழை தூவுது

(உயிரின் உயிரே உனது விழியில்..)


பல்லவி 2
==========
தண்டவாளம் தள்ளி இருந்தது
தூரம் சென்று சேரத்தான்
மேற்கு வானில் நிலவு எழுவது
என்னுள் உன்னைத் தேடத்தான்

ஐந்து வயதுப் பிள்ளை போலே உன்னை நானும் நினைக்கவா
அங்கும் இங்கும் கன்னம் எங்கும் செல்ல முத்தம் பதிக்கவா
நிகழ்காலமும் எதிர்காலமும்  இந்த அன்பெனும் வரம் போதுமே
இறந்தாலுமே இறக்காமலே இந்த ஞாபகம் என்றும் வாழுமே

(உயிரின் உயிரே உனது விழியில்..)


 -- மு. இராகவன் என்ற சரவணன்
     29 செப்டம்பர் 2012 சனிக்கிழமை பிற்பகல் 3 45 மணி இந்திய நேரப்படி

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 10/09/2012 05:46:00 AM | Permalink | 0 comments
Thursday, December 23, 2010

படம்: தென்மேற்குப் பருவக்காற்று
பாடல்: வைரமுத்து
பாடியவர்: சங்கர் மஹாதேவன்
இசை: என். ஆர். ரகுநாதன்

பல்லவி
=======

சின்னாஞ் சின்னாங் காட்டுல என்
குன்னாங் குருவி சிக்குமா
வண்ணாங் கரட்டில் பார்த்தது என்
வழியில் வந்து நிக்குமா

மூஞ்சி மூஞ்சி தெரிஞ்சது அட
முழுசா யாரு பார்த்தது
கள்ள நாட்டுச் சிறுக்கி தான் அவ
கண்ணைக் கண்டதும் வேர்த்தது

பேரைக் கேட்க நெனச்சேன் என்
புத்தி பெற‌ண்டு போச்சு
ஊரக் கேக்க நெனச்சேன் என்
உசுரு வத்திப் போச்சு

நீ பகையாளி அம்சமோ இல்லை
பங்காளி வம்சமோ
குத்தும் பாம்பாக‌ ஒளியாதே வாடி

(சின்னாஞ் சின்னாங் காட்டுல)
சரணம் 1
========

நீ வீதி தாண்டிப் போனாக் கூட
வேர்வையில் க‌ண்டு பிடிப்பேன்
நீ ப‌ர்தா போட்டுப் போனால் கூட‌
பார்வையில் க‌ண்டு பிடிப்பேன்

வ‌ற‌ட்டி த‌ட்டிய‌ த‌ட‌த்தைப் பார்த்தே
வ‌ய‌சைக் க‌ண்டு பிடிப்பேன்

ஒரு வ‌க்கைப் ப‌ட‌ப்பில் ஒளிஞ்சாக் கூட‌
வைர‌த்தைக் க‌ண்டு பிடிப்பேன்

அழ‌கில் க‌லைவாணி ஒரு அடையாள‌ம் தெரிய‌லையே
ம‌னசக்‌ க‌ள‌வாணி ஒரு துப்பேதும் தொல‌ங்க‌லையே

ஆண்டிப்ப‌ட்டிக் க‌ண‌வாய் அட‌ அங்க‌யும் பாத்தேன் இல்லை
தாண்டிக் குடிக்கி மேல‌ நான் தாண்டிப் பாத்தும் இல்லை
சரணம் 2
=========
காடு தின்னும் ந‌ரியோ முத‌லில்
க‌ழுத்தைத் தானே க‌வ்வும்
ஆவி தின்னும் அழ‌கு முத‌லில்
க‌ண்ணைத் தானே க‌வ்வும்

ப‌ட்டாம்பூச்சி அடிக்கும் ரெண்டு
க‌ண்ணு எப்ப‌டி ம‌ற‌க்கும்
உன்னை நொட்டாங்கையில் தொட்டாக் கூட‌
எட்டாம் நாளும் ம‌ண‌க்கும்

ர‌தியே எங்க‌ தொலைஞ்ச‌ நெஞ்சு ர‌வைக்கெல்லாம் வாடுத‌டி
கிளியே எங்க ப‌ற‌ந்த‌ என் கிடையாடும் தேடுத‌டி

தேனிச் சில்லா பூரா ஒனைத் தேடிப் பாப்பேன் வ‌ஞ்சி
உன் குடும்பி சிக்கின‌ பின்னே நான் குடிப்ப‌து தானே க‌ஞ்சி

(சின்னாஞ் சின்னாங் காட்டுல‌..)

=========================
மு இராக‌வ‌ன் என்ற‌ ச‌ர‌வ‌ண‌ன்
04 ந‌வ‌ம்ப‌ர் 2010 வியாழ‌ன் 6 48 மாலை இந்திய‌ நேர‌ப்ப‌டி
http://thiraippadap-paadal-varigal.blogspot.com

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 12/23/2010 10:19:00 AM | Permalink | 1 comments
Friday, September 18, 2009
படம்: ஆதவன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், சின்மயி
பாடல்: <தெரியவில்லை இதுவரை>

பல்லவி
‍‍‍‍‍‍‍‍‍=======
பெ: வாராயோ வாராயோ காதல் கொள்ள‌
பூவோடு பேசாத காற்று இல்ல‌
ஏனிந்தக் காதலும் நேற்று இல்ல‌
நீயே சொல் மனமே
ஆ: வாராயோ வாராயோ மோனாலிசா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள்தோறும் நான் உந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே என்னோடு வா தினமே

சரணம் 1
‍========
பெ: இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான் தான்
உன் கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன் தான்
ஆ: பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப் போல ஓடும்
உனைக் காதல் கண்கள் தேடும்
பெ: ஓ லை லை லை லை காதல் லீலை
செய் செய் செய் செய் காலை மாலை
ஆ: உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன்
இவனுடன் சேர்ந்தாடு சின்ட்ரெல்லா

பெ: வாராயோ வாராயோ காதல் கொள்ள..

சரணம் 2
========
ஆ: நீயே நீயே அந்த ஜுலியட்டின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்
பெ: தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக் குளிப்பாயே
ஆ: நீ நீ நீ நீ மை ஃபேர் லேடி
வா வா வா வா என் காதல் ஜோதி
பெ: நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார சுருதி நீ

ஆ: வாராயோ வாராயோ மோனாலிசா

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 9/18/2009 08:55:00 AM | Permalink | 0 comments
Monday, September 29, 2008
படம்: வாரணம் ஆயிரம்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர்,  பிரசாந்தினி
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்: தாமரை

பல்லவி
========

சூர்யா: Hai Malini .. I am Krishnan..
        நான் இதை  சொல்லியே ஆகணும்.. நீ அவ்வளவு அழகு
        இங்க எவனும் இவ்ளோ அழகா ஒரு ப்ச்..
         இவ்ளோ அழகைப் பாத்திருக்க மாட்டாங்க..
        And I am in love with you...

ஆ: முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே
        சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
        இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
        எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே
        வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா
        இப்போழ்தே என்னோடு வந்தாலென்ன‌
        ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன  (இப்போழ்தே)
       (முன் தினம் பார்த்தேனே..)

சரணம் 1
========

ஆ: காதலே.. சுவாசமே..

ஆ: துலாத் தட்டில் உன்னை வைத்து
        நிகர் செய்ய பொன்னை வைத்தால்
       துலாபாரம் தோற்காதோ பேரழகே
பெ: முகம் பார்த்துப் பேசும் உன்னை
       முதல் காதல் சிந்தும்  கண்ணை
      அணைக்காமல் போவேனோ ஆருயிரே
ஆ: ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
       புகை போல படாமல் பட்டு நகர்வேனடி
       வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி

பெ: முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே..
        சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
        இத்தனை நாளாக
ஆ: oh my love
பெ: உன்னை நான் பாராமல்
ஆ: yes my love
பெ:  எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே

சரணம் 2
========

பெ: கடல் நீலம் மங்கும் நேரம்
         அலை வந்து தீண்டும் தூரம்
        மனம் சுத்தம் ஆகாதா ஈரத்திலே
ஆ: தலை சாய்க்கத் தோளும் தந்தாய்
       விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்
       இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே
பெ: பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
         உயிரெங்கும் உதயம் கண்டேன் நெருங்காமலே
         உனையன்றி எனக்கு ஏது எதிர்காலமே

ஆ: முன் தினம் பார்த்தேனெ பார்த்ததும் தோற்றேனே..

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 9/29/2008 11:45:00 PM | Permalink | 6 comments
Tuesday, September 09, 2008
படம்: ராமன் தேடிய சீதை
பாடியவர்கள்: மதுபாலகிருஷ்ணன், ஹரிணி
இசை: வித்யாசாகர்

பல்லவி
=======

பெ: ம்ஹீம் ஹீம் ஹீம் ஹீம் ஹீம்
ஆ: இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
பெ: ஹீம் ஹீம் ஹீம்
ஆ: இப்பவே இப்பவே பேசணும் இப்பவே
பெ: ஹீம் ஹீம் ஹீம்
ஆ: கண்ணை மூடி உன்னைக் கண்டால் அப்பவே அப்பவே
கைவளையல் ஓசை கேட்டால் அப்பவே அப்பவே
ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே
பெ: இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
ஆ: இப்பவே இப்பவே பேசணும் இப்பவே

சரணம் 1
=======

ஆ: வெள்ளச் சேதம் வந்தால் கூட தப்பிக் கொள்ளலாம்
உள்ளச் சேதம் வந்து விட்டால் என்ன செய்வது
பெ: முள்ளைக் காலில் ஏற்றிக் கொண்டால் ரத்தம் மட்டும் தான்
உன்னை நெஞ்சில் ஏற்றிக் கொண்டேன் நித்தம் யுத்தம் தான்
ஆ: சொல்லித் தீரா இன்பம் கண்டு எந்தன் நெஞ்சு கூத்தாட‌
பெ: மின்னல் கண்ட தாழை போல உன்னால் நானும் பூத்தாட‌
ஆ: உன்னைக் கண்டேன் என்னைக் காணோம்
என்னைக் காண உன்னை நானும்
பெ: இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே

சரணம் 2
=======

ஆ: எந்தன் வாழ்வில் வந்ததின்று நல்ல திருப்பம்
இனி உந்தன் கையைப் பற்றிக் கொண்டே செல்ல விருப்பம்
பெ: நெஞ்ச வயல் எங்கும் உன்னை நட்டு வைக்கிறேன்
நித்தம் அதில் காதல் உரம் இட்டு வைக்கிறேன்
ஆ: உன்னைக் காண நானும் வந்தால் சாலை எல்லாம் பூஞ்சோலை
பெ: உன்னை நீங்கிப் போகும் நேரம் சோலை கூடத் தார்ப்பாலை
ஆ: மண்ணுக்குள்ளே வேரைப் போலே நெஞ்சுக்குள்ளே நீதான் நீதான்

பெ: இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
ஆ: இப்பவே இப்பவே பேசணும் இப்பவே
பெ: கண்ணுக்குள்ள‌ உன்னைக் கண்ட அப்பவே அப்பவே
ஆ: கைவளையல் ஓசை கேட்ட அப்பவே அப்பவே
பெ: ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 9/09/2008 12:50:00 AM | Permalink | 0 comments
Friday, August 29, 2008
படம்: சங்கமம்
பாடல்: வைரமுத்து
பாடியவர்கள்:  ஹரிஹரன், எம். எஸ். விஸ்வநாதன்
இசை: ஏ. ஆர். ரஹ்மான்

பல்லவி
=======

ஆ: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
       மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
       உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
      உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
      (மழைத்துளி மழைத்துளி..)
      ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க‌
       என்ன ஆடாம ஆட்டி வைச்ச வணக்கமுங்க‌
       என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
       என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைகள் வெல்லும் வரைக்கும்
       (என் காலுக்கு சலங்கையிட்ட)
      நீ உண்டு உண்டு என்றபோதும் அட இல்லை இல்லை என்றபோதும்
     சபை ஆடிய பாதமய்யா அது நிக்காது ஒருபோதும்

       (ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா)

      (மழைத்துளி மழைத்துளி...)

சரணம் 1
========

ஆ: தண்ணியில மீனழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்லை
       எனக்குள்ள நானழுதா துடைக்கவே எனக்கொரு நாதியில்ல‌
       என் கண்ணீ் ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரமாகுமே
       சபதம் சபதம் என்றே சலங்கை பாடுமே
        ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
      மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு
     விழியே விழியே இமையே தீயும் போதும் கலங்காதிரு
     கங்கை நதி அத்தனையும் கடலில் சங்கமம்
     நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம்
     கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்

     (மழைத்துளி மழைத்துளி...)

   (ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா)


சரணம் 2
========

(எம். எஸ். விஸ்வநாதன்)
ஆ:  தந்தான தந்தானனா..
        மழைக்காகத் தான் மேகம்  அட கலைக்காகத் தான் நீயும்
         உயிர்  கலந்தாடுவோம் நாளும் மகனே வா
         நீ சொந்தக் காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை வெல்லு
        இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா மகனே வா
         ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்
         தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்

        புலிகள் அழுவது ஏது  அட பறவையும் அழ அறியாது
        போர்க்களம் நீ புகும்போது முள் தைப்பது கால் அறியாது

         மகனே மகனே காற்றுக்கு ஓய்வென்பது ஏது அட ஏது
         கலைக்கொரு தோல்வி கிடையாது கிடையாது

ஹரி: ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க‌
விஸ்: என்னை ஆடாம ஆட்டி வெச்ச வணக்கமுங்க‌
ஹரி: என் காலுக்குச் சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல்வணக்கம்
விஸ்: என் கால் நடமாடுமையா நம்ம கட்டளைகள் வெல்லும்வரைக்கும்
ஹரி: நீ உண்டு உண்டு என்ற போதும்
விஸ்: நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்ற போதும்
              சபை ஆடிய பாதமையா அது நிக்காது ஒருபோதும்

ஹரி: மழைத்துளி மழைத்துளி...

Labels: , , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/29/2008 07:06:00 AM | Permalink | 2 comments
Wednesday, August 27, 2008
படம்: பிரதாப்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா
இசை:

பல்லவி
=======
=
குழு: தனனா      பெ: ஆஹா ஆ ஆ
குழு: தனனா தனனா தனனா தனனா
பெ: ஆ ஆ ஆ      குழு:  தனனா தனனா
பெ: என் கண்ணனுக்குக் காதல் வந்தனம்
ஆ: என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்
பெ: என் பெண்மை எல்லம் உந்தன் சீதனம்
ஆ: உன் சீதனங்கள் என்ன நூதனம்
பெ: முடியவில்லை காதல் க‌ண்ணா  மோக நர்த்தனம்
         விடிய விடியக் கேட்குதையா உனது கீர்த்தனம்
ஆ:  சொர்க்கம் தாண்டிச் செல்லுமம்மா எனது சொப்பனம்
        போகப் போகக் காண வேண்டும் புதிய தரிசனம்

குழு: தனனா
பெ: என் கண்ணனுக்குக் காதல் வந்தனம்
குழு: தனனா
ஆ: என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்

சரணம் 1
========

குழு: தானனா தஜிம் தஜீம் தஜீம் ஜீம்
பெ: தானன த‌ந்தானன தஜீம் தஜீம்
ஆ: தஜீம் தஜீம்
பெ: ஓ காதல் கண்ணாளா இன்று என்ன பொன்னாளா
       நீ மறந்து கையோடு கை சேர்க்கும் காதல் விழா
ஆ: ஓ கன்னிப் புறாவே கால் முளைத்த நிலாவே
       மெல்ல மெல்ல உன் பேரைச் சொன்னாலும் வாய் ஊறுதே
பெ: மல்லிகை மொட்டை மன்னவன் வந்து கிள்ளி முடித்தானே
ஆ: மன்மதன் என்னை வந்திடச் சொல்லித் தந்தி அடித்தானே
பெ: வல்லவனே
குழு: தந்தனனா
பெ: நல்லவனே
          கட்டிலில் ஆயிரம் கட்டளை இட்டவனே

குழு: தனனா
பெ: என் கண்ணனுக்கு காதல் வந்தனம்
குழு: தனனா
ஆ: என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்
பெ: முடியவில்லை காதல் கண்ணா மோக நர்த்தனம்
ஆ: போகப் போகக் காண வேண்டும் புதிய தரிசனம்

சரணம் 2
=========

ஆ: ஓ ராஜகுமாரி ரகசிய சிருங்காரி
       மெல்ல எந்தன் காதோடு நீ பாடு கான‌ல் வரி
பெ: ஓ தேவ குமாரா கண்மயங்கும் சிங்காரா
        உன்னிரண்டு தோளோடு உறவாடும் காதல் புறா
ஆ: கட்டில் அறையில் கண்ணு முழிச்சா சொர்க்கம் கிட்டுமடி
பெ: அத்தானுக்கு அந்த விஷயம் எல்லாம் அத்துப்படி
ஆ: கட்டிப்புடி
குழு: தந்தனனா
ஆ: தொட்டுப் படி
       மூன்றாம் பாலில் முன்னோர் சொன்னபடி

பெ: என் கண்ணனுக்குக் காதல் வந்தனம்
ஆ: என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்
பெ: என் பெண்மை எல்லாம் உந்தன் சீதனம்
ஆ: உன் சீதனங்கள் என்ன நூதனம்
பெ: முடியவில்லை காதல் கண்ணா மோக நர்த்தனம்
        விடிய விடியக் கேட்குதையா உனது கீர்த்தனம்
ஆ: சொர்க்கம் தாண்டிச் செல்லுமம்மா எனது சொப்பனம்
        போகப் போகக் காண வேண்டும் புதிய தரிசனம்

பெ: லல லால‌லா லால்லா லால்லா லா
ஆ: லா லலல்ல‌லா லால‌ல்லா லால்லா லாலா

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/27/2008 03:06:00 AM | Permalink | 0 comments