Friday, September 18, 2009
படம்: ஆதவன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், சின்மயி
பாடல்: <தெரியவில்லை இதுவரை>

பல்லவி
‍‍‍‍‍‍‍‍‍=======
பெ: வாராயோ வாராயோ காதல் கொள்ள‌
பூவோடு பேசாத காற்று இல்ல‌
ஏனிந்தக் காதலும் நேற்று இல்ல‌
நீயே சொல் மனமே
ஆ: வாராயோ வாராயோ மோனாலிசா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள்தோறும் நான் உந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே என்னோடு வா தினமே

சரணம் 1
‍========
பெ: இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான் தான்
உன் கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன் தான்
ஆ: பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப் போல ஓடும்
உனைக் காதல் கண்கள் தேடும்
பெ: ஓ லை லை லை லை காதல் லீலை
செய் செய் செய் செய் காலை மாலை
ஆ: உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன்
இவனுடன் சேர்ந்தாடு சின்ட்ரெல்லா

பெ: வாராயோ வாராயோ காதல் கொள்ள..

சரணம் 2
========
ஆ: நீயே நீயே அந்த ஜுலியட்டின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்
பெ: தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக் குளிப்பாயே
ஆ: நீ நீ நீ நீ மை ஃபேர் லேடி
வா வா வா வா என் காதல் ஜோதி
பெ: நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார சுருதி நீ

ஆ: வாராயோ வாராயோ மோனாலிசா

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 9/18/2009 08:55:00 AM | Permalink | 2 comments
Saturday, May 20, 2006
படம் : தம்பி
பாடல்: வைரமுத்து
பாடியவர்: உன்னிகிருஷ்ணன், ஹரிணி
இசை: வித்யாசாகர்

பல்லவி
-----------
பெ: அ அ ஆ அ அ ஆஆஆ
ஆ: அ அ ஆ அ அ ஆ
ஆ: சுடும் நிலவு சுடாத சூரியன்
ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா (எல்லாம்)
பெ: காதலித்துப் பார்... காதலித்துப் பார்..

சரணம் - 1
----------------
ஆ: இமையடித்தாலும் இதயம் வலிக்கும்
வலிகளில் கூட வாசனை இருக்கும்
குழு: காதலித்துப் பார்.. காதலித்துப் பார்..
பெ: நரம்புக்கு நடுவே நதிகள் நகரும்
நதியிருந்தாலும் நாவே உலரும்
ஆ: தப்பு எல்லாம் கணிதமாகும்
தவறு எல்லாம் புனிதமாகும்
பெ: பச்சைத் தண்ணீர் வெப்பமாகும்
எச்சில் பண்டம் அமிர்தமாகும்
ஆ: நான்கு உதடு பேசும் வார்த்தை முத்தமாகும்

பெ: சுடும் நிலவு சுடாத சூரியன்.

சரணம் - 2
-----------------
பெ: மழைத்துளி நமக்கு சமுத்திரமாகும்
சமுத்திரம் எல்லாம் துளியாய்ப் போகும்
குழு: காதலித்துப் பார்.. காதலித்துப் பார்..
ஆ: சத்தியக் காதல் என்னமும் செய்யும்
சந்திர ஒளியை ஆடையாய் நெய்யும்
பெ: தொட்ட பாகம் மோட்சமாகும்
மற்ற பாகம் காய்ச்சலாகும்
ஆ: தெய்வம் தூங்கி மிருகமாகும்
மிருகம் தூங்கி தெய்வமாகும்
பெ: தேடல் ஒன்றே வாழ்க்கை என்று தெரிந்து போகும்

ஆ: சுடும் நிலவு சுடாத சூரியன்

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/20/2006 04:27:00 AM | Permalink | 2 comments