Friday, September 18, 2009
படம்: ஆதவன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், சின்மயி
பாடல்: <தெரியவில்லை இதுவரை>

பல்லவி
‍‍‍‍‍‍‍‍‍=======
பெ: வாராயோ வாராயோ காதல் கொள்ள‌
பூவோடு பேசாத காற்று இல்ல‌
ஏனிந்தக் காதலும் நேற்று இல்ல‌
நீயே சொல் மனமே
ஆ: வாராயோ வாராயோ மோனாலிசா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள்தோறும் நான் உந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே என்னோடு வா தினமே

சரணம் 1
‍========
பெ: இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான் தான்
உன் கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன் தான்
ஆ: பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப் போல ஓடும்
உனைக் காதல் கண்கள் தேடும்
பெ: ஓ லை லை லை லை காதல் லீலை
செய் செய் செய் செய் காலை மாலை
ஆ: உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன்
இவனுடன் சேர்ந்தாடு சின்ட்ரெல்லா

பெ: வாராயோ வாராயோ காதல் கொள்ள..

சரணம் 2
========
ஆ: நீயே நீயே அந்த ஜுலியட்டின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்
பெ: தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக் குளிப்பாயே
ஆ: நீ நீ நீ நீ மை ஃபேர் லேடி
வா வா வா வா என் காதல் ஜோதி
பெ: நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார சுருதி நீ

ஆ: வாராயோ வாராயோ மோனாலிசா

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 9/18/2009 08:55:00 AM | Permalink | 2 comments
Monday, August 20, 2007
படம்                  : சென்னை 600028
பாடியவர்கள்  : எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா
இசை                : யுவன்ஷங்கர்ராஜா
இயக்கம்          : வெங்கட்பிரபு
 
பல்லவி
======
ஆ: யாரோ யாருக்குள் இங்கு யாரோ
      யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
      விடையில்லா ஓர் கேள்வி
பெண் குழு: உயிர்க்காதல் ஒரு வேள்வி (யாரோ யாருக்குள்)
ஆ: காதல் வரம் நான் வாங்க
      கடைக்கண்கள் நீ வீச
      கொக்கைப் போல நாள்தோறும்
      ஒற்றைக்காலில் நின்றேன் கண்மணி
பெ: யாரோ யாருக்குள் இங்கு யாரோ
      யார் நெஞ்சை இங்குக் யார் தந்தாரோ
      விடையில்லா ஒரு கேள்வி
ஆண் குழு: உயிர்க்காதல் ஒரு வேள்வி
 
சரணம்-1
=======
பெ: ஊரை வெல்லும் தோகை நானே
      உன்னால் இங்கு தோற்றுப் போனேன்
      கண்ணால் யுத்தமே நீ செய்தாய் நித்தமே
ஆ: ஓஹோஹோ
      நின்றாய் இங்கு மின்னல் கீற்றாய்
      நித்தம் வாங்கும் மூச்சுக் காற்றாய்
      உன்னை சூழ்கிறேன் நான் உன்னை சூழ்கிறேன்
பெ: காற்றில் வைத்த சூடம் போலே
      காதல் தீர்ந்து போகாது
ஆ: உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி
      என்னால் வாழ ஆகாது அன்பே வா ஹே
ஆ: யாரோ
பெ: ஆஹா யாருக்குள் இங்கு யாரோ
ஆ: ம்ஹீம்.. யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
பெ: விடையில்லா ஒரு கேள்வி
ஆ: உயிர்க்காதல் ஒரு வேள்வி
 
சரணம்-2
=======
ஆ: உந்தன் ஆடை காயப்போடும்
      உங்கள் வீட்டுக் கம்பிக்கொடியாய்
      என்னை எண்ணினேன் நான் தவம் பண்ணினேன்
பெ: ஆஹாஹாஹா
      கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி
      கிட்டக் கிட்ட வந்தாய் துள்ளி
      எட்டிப் போய்விடு இல்லை ஏதோ ஆகிடும்
 ஆ: காதல் கொஞ்சம் பேசும்போது
       சென்னைத் தமிழும் செந்தேன் தான்
பெ: ஆசை வெள்ளம் பாயும்போது
      வங்கக்கடலும் வாய்க்கால் தான்
      அன்பே வா ஹா..
 
ஆ: யாரோ
பெ: ம்ஹீம் ஹீம்
ஆ: யாருக்குள் இங்கு யாரோ
பெ: ஆஹா ஹா
ஆ: யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
      விடையில்லா ஒரு கேள்வி
பெ: உயிர்க்காதல் ஒரு வேள்வி
ஆ: காதல் வரம் நான் வாங்க
      கடைக்கண்கள் நீ வீச
      கொக்கைப்போல நாள்தோறும்
      ஒற்றைக்காலில் நின்றேன் கண்மணி
பெ: யாரோ யாருக்குள் இங்கு யாரோ
      யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
      விடையில்லா ஒரு கேள்வி
ஆண் குழு: உயிர்க்காதல் ஒரு வேள்வி

Labels: , , , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/20/2007 05:56:00 AM | Permalink | 0 comments
Thursday, April 12, 2007

படம்          :  அன்பே சிவம்
பாடல்        : வைரமுத்து
பாடியவர்  : கமல்ஹாசன்
இசை         : வித்யாசாகர்
 
பல்லவி
========
ஆ: யார் யார் சிவம் நீ நான் சிவம்
      வாழ்வே தவம் அன்பே சிவம்
      ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்
      நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்
குழு: அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் 
        அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்)
ஆ: யார் யார் சிவம் நீ நான் சிவம்
 
 
சரணம் -1
==========
ஆ: யார் யார் சிவம் நீ நான் சிவம்
      வாழ்வே தவம் அன்பே சிவம்
      இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்
      அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்
குழு: அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்
       அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்)
 
 
சரணம் -2
==========
ஆ:  யார் யார் சிவம் நீ நான் சிவம்
      அன்பின் பாதை சேர்ந்தவருக்கு முடிவே இல்லையடா
      மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா
குழு: அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் 
       அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்)

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 4/12/2007 06:55:00 AM | Permalink | 4 comments