Monday, December 30, 2013
படம்: பூமணி
பாடல்:
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, சுஜாதா


சரணம்
========
பெ: தோள் மேல தோள் மேல பூமால பூமால
     கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால
ஆ: தோள் மேல தோள் மேல பூமாலை பூமாலை
     கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால
பெ: ஓ மைனா மைனா இது உண்மை தானா
     அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில் தானா
     ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே
ஆ:  தோள் மேல தோள் மேல பூமாலை பூமாலை
     கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால
பெ: தோள்மேல தோள் மேல பூமாலை பூமாலை
     கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால

பல்லவி 1
==========

பெ: செந்தாழம் பூக்களே என் கூந்தல் சூடவா
     சந்தோஷ நாட்களே என் வாசல் தேடிவா
ஆ: சொல்லாத ஆசைகள் என்னென்ன சொல்லவா
     நூறாண்டுக் காதலை ஓராண்டில் வாழவா
பெ: ஆகாய கங்கையே என் தாகம் தீர்க்கவா
     தாயாகி உன்னை நான் தாலாட்டிப் பார்க்கவா
ஆ: நீ அணைக்கும் அன்பிலே அன்பிலே
     நான் கரைந்தேன் உன்னிலே உன்னிலே
பெ: துள்ளுதே துள்ளுதே என் மனம் விண்ணிலே


ஆ: தோள் மேல தோள் மேல பூமால பூமால
     கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால
    ஓ மைனா மைனா இது உண்மை தானா
     அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில் தானா
     ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே
பெ:
தோள் மேல தோள் மேல பூமால பூமால
     கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால


பல்லவி 2
==========
ஆ: பூவுக்கு வாசனை  யாரிங்கு தந்தது
     நேசங்கள் என்பது நெஞ்சோடு உள்ளது
பெ: என் பெண்மை இன்று தான் பூச்சூடிக் கொண்டது
     என் கோவில் இன்று தான் தீபங்கள் கண்டது
ஆ: உன் நெஞ்சில் வாழவே ஒரு ஜென்மம் வாங்கினேன்
     உன் மூச்சில் தானடி நான் இன்னும் வாழ்கிறேன்
பெ: நான் இருந்தேன் வானிலே மேகமாய்
     ஏன் விழுந்தேன் பூமியில் வேகமாய்
ஆ: வீழ்ந்த்தும் நல்லதே தாகமாய் உள்ளதே

பெ: தோள் மேல தோள் மேல பூமால பூமால
ஆ: கலந்ததிங்கு யாரால காமனவன் பேரால
பெ: ஓ மைனா மைனா இது உண்மை தானா
ஆ: அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில் தானா
பெ: ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே

ஆ: தோள் மேல தோள் மேல பூமால பூமால
பெ: கலந்ததிங்கு யாரால காமனவன் பேரால

 --- மு. இராகவன் என்ற சரவணன்
    30 திசம்பர் 2013 திங்கள் மாலை 5 49 மணி இந்திய நேரப்படி
     சிபிடி பேலாபூர், நவி மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 12/30/2013 05:52:00 AM | Permalink | 0 comments