Wednesday, January 10, 2007
படம் : திருவிளையாடல் ஆரம்பம்
பாடல் : கண்ணுக்குள் ஏதோ
பாடியவர்கள் : விஜய் யேசுதாஸ், ரீட்டா

பல்லவி
=======
ஆ: கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே
நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ
காலடிச் சத்தம் ஒன்று கேட்கிறதே
உன் உயிர்வந்து எந்தன் உயிர்தொட்டது
என் உலகமே உன்னால் மாறிவிட்டது
பெ: கண்ணே சொல் இதுதான் காதல் என்பதா
கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே

சரணம்-1
========
ஆ: காதல் வந்து கெடுத்தபின் கவிதைகள் படிக்கிறேன்
பெ: தோழிகளைத் தவிர்க்கிறேன் உன்னைத்தேடி வருகிறேன்
ஆ: தாய் தந்தை இருந்துமேன் தனிமையில் தவிக்கிறேன்
சொந்தமாய் நீ வா பிழைக்கிறேன்
பெ: எந்தன் வீட்டை சொந்தமென்று நேற்றுவரை நினைத்தவள்
உன்வீட்டில் குடிவர நினைக்கிறேன்
ஆ: உன்னைக் காதலித்த கணமே உனக்குள் வந்தேன்
பெ: கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே

சரணம்-2
========
ஆ: கனவிலே நீயும் வந்தால் புகைப்படம் எடுக்கிறேன்
பெ: கனவுகள் இங்கு இல்லை கண்விழித்து நினைக்கிறேன்
ஆ: பெண்ணே நானோ உன்னை என்றும் மறப்பது இல்லையடி
மறந்தால் தானே நினைத்திட
பெ: அன்பே நானோ இறக்கையில் உந்தன் சுவாசம் தீண்டட்டும்
உடனே நானும் பிறந்திட
ஆ: உண்மைக் காதல் சாவது இல்லையடி
கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே

பெ: நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ
காலடிச் சத்தம் ஒன்று கேட்கிறதே
ஆ: உன் உயிர்வந்து எந்தன் உயிர் தொட்டது
என் உலகமே உன்னால் மாறிவிட்டது
பெ: கண்ணே சொல் இதுதான் காதல் என்பதா

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 1/10/2007 01:43:00 AM | Permalink | 0 comments