Monday, November 11, 2013
படம்: தலைவா
பாடியவர்கள்: ஜி.வி.பிரகாஷ், சைந்தவி
பாடல் : நா. முத்துக்குமார்
இசை : ஜி.வி. பிரகாஷ்

சரணம்
--------------
ஆ: யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது
        காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
பெ: யார் எந்தன் வார்த்தை மீது மெளனம் வைத்தது
         இன்று பேசாமல் கண்கள் பேசுது
ஆ: நகராமல் இந்த நொடி நீள
        எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே
பெ: குளிராலும் கொஞ்சம் அனலாலும்
         இந்த நெருக்கம் தான் கொல்லுதே
ஆ:  எந்தன் நாளானது இன்று வேறானது
         வண்ணம் நூறானது வானிலே
        (யார் இந்த சாலையோரம்..)

பல்லவி 1
----------------
ஆ: தீரத் தீர ஆசை யாவும் பேசலாம்
        மெல்ல தூரம் விலகிப்  போகும் வரையில் தள்ளி நிற்கலாம்
பெ: என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம்
         இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொள்ளலாம்
ஆ:  என்னாகிறேன் இன்று ஏதாகிறேன்
பெ: எதிர் காற்றிலே சாயும் குடையாகிறேன்
ஆ: எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது
         அது பறந்தோடுது வானிலே
பெ: (யார் எந்தன் வார்த்தை மீது....)

பல்லவி 2
-----------------
ஆ: மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே
         அது மலையை விட்டு ஓடி வந்து சேரும் கடலிலே
பெ: வைரம் போலப் பெண்ணின் மனது உலகிலே
         அது தோன்றும் வரையில் புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே
ஆ:  கண் ஜாடையில் உன்னை அறிந்தேனடி
பெ:  என் பாதையில் இன்று உன் காலடி
ஆ:  நேற்று நான் பார்த்ததும் இன்று நீ பார்ப்பதும்
          நெஞ்சம் எதிர்பார்ப்பதும் ஏனடி
   
ஆ: யார் இந்த சாலையோரம்..
பெ: யார் எந்தன் வார்த்தை மீது...
ஆ: நகராமல்..
பெ: குளிராலும்..
ஆ: எந்தன் நாளானது இன்று வேறானது
         வண்ணம் நூறானது வானிலே


 -- மு. இராகவன் என்ற சரவணன்
    11 நவம்பர் 2013 திங்கள் இரவு 11 50 மணி (இந்திய நேரப்படி)
     நவி மும்பை | மகாராஷ்டிரா | இந்தியா

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 11/11/2013 10:40:00 AM | Permalink |


1 Comments:


At Tuesday, November 12, 2013 10:21:00 PM, Anonymous Anonymous

super song iam dayagama nathan