Friday, August 29, 2008
படம்: சங்கமம்
பாடல்: வைரமுத்து
பாடியவர்கள்:  ஹரிஹரன், எம். எஸ். விஸ்வநாதன்
இசை: ஏ. ஆர். ரஹ்மான்

பல்லவி
=======

ஆ: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
       மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
       உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
      உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
      (மழைத்துளி மழைத்துளி..)
      ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க‌
       என்ன ஆடாம ஆட்டி வைச்ச வணக்கமுங்க‌
       என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
       என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைகள் வெல்லும் வரைக்கும்
       (என் காலுக்கு சலங்கையிட்ட)
      நீ உண்டு உண்டு என்றபோதும் அட இல்லை இல்லை என்றபோதும்
     சபை ஆடிய பாதமய்யா அது நிக்காது ஒருபோதும்

       (ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா)

      (மழைத்துளி மழைத்துளி...)

சரணம் 1
========

ஆ: தண்ணியில மீனழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்லை
       எனக்குள்ள நானழுதா துடைக்கவே எனக்கொரு நாதியில்ல‌
       என் கண்ணீ் ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரமாகுமே
       சபதம் சபதம் என்றே சலங்கை பாடுமே
        ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
      மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு
     விழியே விழியே இமையே தீயும் போதும் கலங்காதிரு
     கங்கை நதி அத்தனையும் கடலில் சங்கமம்
     நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம்
     கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்

     (மழைத்துளி மழைத்துளி...)

   (ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா)


சரணம் 2
========

(எம். எஸ். விஸ்வநாதன்)
ஆ:  தந்தான தந்தானனா..
        மழைக்காகத் தான் மேகம்  அட கலைக்காகத் தான் நீயும்
         உயிர்  கலந்தாடுவோம் நாளும் மகனே வா
         நீ சொந்தக் காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை வெல்லு
        இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா மகனே வா
         ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்
         தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்

        புலிகள் அழுவது ஏது  அட பறவையும் அழ அறியாது
        போர்க்களம் நீ புகும்போது முள் தைப்பது கால் அறியாது

         மகனே மகனே காற்றுக்கு ஓய்வென்பது ஏது அட ஏது
         கலைக்கொரு தோல்வி கிடையாது கிடையாது

ஹரி: ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க‌
விஸ்: என்னை ஆடாம ஆட்டி வெச்ச வணக்கமுங்க‌
ஹரி: என் காலுக்குச் சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல்வணக்கம்
விஸ்: என் கால் நடமாடுமையா நம்ம கட்டளைகள் வெல்லும்வரைக்கும்
ஹரி: நீ உண்டு உண்டு என்ற போதும்
விஸ்: நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்ற போதும்
              சபை ஆடிய பாதமையா அது நிக்காது ஒருபோதும்

ஹரி: மழைத்துளி மழைத்துளி...

Labels: , , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/29/2008 07:06:00 AM | Permalink | 2 comments
Wednesday, August 27, 2008
படம்: பிரதாப்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா
இசை:

பல்லவி
=======
=
குழு: தனனா      பெ: ஆஹா ஆ ஆ
குழு: தனனா தனனா தனனா தனனா
பெ: ஆ ஆ ஆ      குழு:  தனனா தனனா
பெ: என் கண்ணனுக்குக் காதல் வந்தனம்
ஆ: என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்
பெ: என் பெண்மை எல்லம் உந்தன் சீதனம்
ஆ: உன் சீதனங்கள் என்ன நூதனம்
பெ: முடியவில்லை காதல் க‌ண்ணா  மோக நர்த்தனம்
         விடிய விடியக் கேட்குதையா உனது கீர்த்தனம்
ஆ:  சொர்க்கம் தாண்டிச் செல்லுமம்மா எனது சொப்பனம்
        போகப் போகக் காண வேண்டும் புதிய தரிசனம்

குழு: தனனா
பெ: என் கண்ணனுக்குக் காதல் வந்தனம்
குழு: தனனா
ஆ: என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்

சரணம் 1
========

குழு: தானனா தஜிம் தஜீம் தஜீம் ஜீம்
பெ: தானன த‌ந்தானன தஜீம் தஜீம்
ஆ: தஜீம் தஜீம்
பெ: ஓ காதல் கண்ணாளா இன்று என்ன பொன்னாளா
       நீ மறந்து கையோடு கை சேர்க்கும் காதல் விழா
ஆ: ஓ கன்னிப் புறாவே கால் முளைத்த நிலாவே
       மெல்ல மெல்ல உன் பேரைச் சொன்னாலும் வாய் ஊறுதே
பெ: மல்லிகை மொட்டை மன்னவன் வந்து கிள்ளி முடித்தானே
ஆ: மன்மதன் என்னை வந்திடச் சொல்லித் தந்தி அடித்தானே
பெ: வல்லவனே
குழு: தந்தனனா
பெ: நல்லவனே
          கட்டிலில் ஆயிரம் கட்டளை இட்டவனே

குழு: தனனா
பெ: என் கண்ணனுக்கு காதல் வந்தனம்
குழு: தனனா
ஆ: என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்
பெ: முடியவில்லை காதல் கண்ணா மோக நர்த்தனம்
ஆ: போகப் போகக் காண வேண்டும் புதிய தரிசனம்

சரணம் 2
=========

ஆ: ஓ ராஜகுமாரி ரகசிய சிருங்காரி
       மெல்ல எந்தன் காதோடு நீ பாடு கான‌ல் வரி
பெ: ஓ தேவ குமாரா கண்மயங்கும் சிங்காரா
        உன்னிரண்டு தோளோடு உறவாடும் காதல் புறா
ஆ: கட்டில் அறையில் கண்ணு முழிச்சா சொர்க்கம் கிட்டுமடி
பெ: அத்தானுக்கு அந்த விஷயம் எல்லாம் அத்துப்படி
ஆ: கட்டிப்புடி
குழு: தந்தனனா
ஆ: தொட்டுப் படி
       மூன்றாம் பாலில் முன்னோர் சொன்னபடி

பெ: என் கண்ணனுக்குக் காதல் வந்தனம்
ஆ: என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்
பெ: என் பெண்மை எல்லாம் உந்தன் சீதனம்
ஆ: உன் சீதனங்கள் என்ன நூதனம்
பெ: முடியவில்லை காதல் கண்ணா மோக நர்த்தனம்
        விடிய விடியக் கேட்குதையா உனது கீர்த்தனம்
ஆ: சொர்க்கம் தாண்டிச் செல்லுமம்மா எனது சொப்பனம்
        போகப் போகக் காண வேண்டும் புதிய தரிசனம்

பெ: லல லால‌லா லால்லா லால்லா லா
ஆ: லா லலல்ல‌லா லால‌ல்லா லால்லா லாலா

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/27/2008 03:06:00 AM | Permalink | 0 comments
Friday, August 22, 2008
படம்: வில்லன்
பாடல்: வைரமுத்து
பாடியவர்: சங்கர் மஹாதேவன், சுஜாதா
இசை: வித்யாசாகர்

பல்லவி
=======


பெ: தப்புத் தண்டா தப்புத் தண்டா தலைவா நீ செய்யவா
வெயில் படா இடங்களை விளையாடித் தொடவா
ஆ: மன்மதன் அம்புகள் பாய்ந்திடும் வேளையில்
புண்படும் அல்லவா உன் மார்பிலே ஒளியவா
குழு: உய் உய் உய் உய் உய் உய் உய் உய்
உய் உய் உய் உய் உய் உய் உய் உய்
ஆ: தப்புத் தண்டா தப்புத் தண்டா தலைவி நான் செய்யவா
பெ: வெயில் படா இடங்களை விளையாடித் தொடவா

சரணம் ‍1
=======


பெ: களவு கொண்டோடிய கண்களைத் தூக்கத்தை
என்னிடம் திருப்பிக் கொடு
என் உடல் கொஞ்சம் சாயட்டும் உயிர் கொஞ்சம் தூங்கட்டும்
ஒத்தடம் தந்து விடு
ஆ: ஓ ஆயிரம் சேவைகள் கைவசம் உள்ளது அனுமதி தந்து விடு
ஆடையும் அகிம்சையும் ஓரத்தில் தூங்கட்டும் வன்முறை முத்தம் கொடு
பெ: இடியோ மழையோ அது அறையில் இருக்கட்டுமே
இரவோ பகலோ அது வெளியில் இருக்கட்டுமே
ஆ: நடந்து வரும் சித்திரமே நனைய விடும் சொப்பனமே
சுட்டு விரல் தொட்டவுடன் தேன் வடியும் பூவே
யாரிதழில் சுவை அதிகம் பார்ப்போம்

குழு: உய் உய் உய் உய் உய் உய் உய் உய்
உய் உய் உய் உய் உய் உய் உய் உய்

பெ: தப்புத் தண்டா தப்புத் தண்டா தலைவா நீ செய்யவா
ஆ: வெயில் படா இடங்களை விளையாடித் தொடவா

சரணம் 2
=======


ஆ: தினம் தினம் ஓரிடம் உதிக்கிற போதும் சூரியன் புதியதடி
தினம் தினம் ஓரிடம் சேர்கிற போதிலும் சுகவகை புதியதடி
பெ: இருபது வருடங்கள் இந்த சுகம் போதுமென்று சாயுது இளையகொடி
இருபது நிமிடத்தில் இன்னும் கொஞ்சமென்று ஏங்குது பழையபடி
ஆ: ஆடை சரிந்தால் உன் அவசியம் பார்த்து வைப்பேன்
ஜாடை புரிந்தால் உன் சங்கடம் தீர்த்து வைப்பேன்
பெ: மார்பழகு இந்திரனே மஞ்சள் நிற மன்னவனே
உன் பெயரைச் சொன்னவுடன் பூத்துவிட்டேன் நானே
ஓரிரவில் ஏழ்பிறவி வாழ்வேன்

குழு: உய் உய் உய் உய் உய் உய் உய் உய்
உய் உய் உய் உய் உய் உய் உய் உய்

பெ: தப்புத் தண்டா தப்புத் தண்டா தலைவா நீ செய்யவா
ஆ: வெயில் படா இடங்களை விளையாடித் தொடவா
பெ: மன்மதன் அம்புகள் பாய்ந்திடும் வேளையில்
ஆ: புண்படும் அல்லவா உன் மார்பிலே ஒளியவா

Labels: , , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/22/2008 04:48:00 AM | Permalink | 0 comments
Thursday, August 21, 2008
படம்: தசாவதாரம்
பாடல்: வைரமுத்து
பாடியவர்: ஹரிஹரன்
இசை: ஹிமேஷ் ரேஷ்மையா

பல்லவி
========

ஓம் நமோ நாராணாய‌
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
எட்டில் ஐந்து எண் கழியும் என்றால்
ஐந்தில் எட்டு ஏன் கழியாது
அட்ச அட்சரம் பார்க்கும் நெஞ்சு
பஞ்ச அட்சரம் பார்க்காது
ஊனக் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான்
ஞானக் கண்ணில் பார்த்தால் யாவும் சுத்தம் தான்

(கல்லை மட்டும் கண்டால் )

சரணம் ‍1
=========

இல்லை என்று சொன்ன போதும் இன்றியமையாது
தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது
(இல்லை என்று சொன்னபோதும்.)
வீர சைவர்கள் முன்னால் எங்கள்
ஈர வைணவம் தோற்காது
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும்
மேற்கில் சூரியன் உதிக்காது
ராஜலெட்சுமி நாயகன் சீனிவாசன் தான்
சீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் தான்
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜன் தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்
(கல்லை மட்டும் கண்டால்..)

சரணம் 2
=========

நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது
(நீருக்குள்ளே மூழ்கினாலும்..)
வீசும் காற்று வந்து விளக்கணைக்கும்
வெண்ணிலாவை அது அணைத்திடுமா
கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்
அந்த வானம்தன்னை அது நனைத்திடுமா
சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது
தெய்வம் என்று பார்த்தால் சமயம் தெரியாது
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/21/2008 05:20:00 AM | Permalink | 7 comments
Monday, August 18, 2008
படம்: பரட்டை என்கிற அழகுசுந்தரம்
பாடியவர்: முகமது அஸ்லாம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா

பல்லவி
========‍‍

ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் உன் கருவில்
மகனாகும் வரம் வேண்டும் தாயே
என் கடவுள் என் உலகம் நீயே
என் கடவுள் என் உலகம் நீயே

 (ஏழேழு ஜென்மம்..)

சரணம் 1
=========

தாய் பேசிடும் ஓர் வார்த்தை நாம்
விழுந்தாலும் நமைத் தாங்கும் தூணல்லவா
தாய் வீசிடும் ஓர் பார்வை தான்
நம் காயங்கள் குணமாக்கும் மருந்தல்லவா
ஊர் கண்கள் பட்டால் விரல் முறித்து நெறிப்பாள்
வெயில் உன்னை சுட்டால் சூரியனை எரிப்பாள்
மழைக்காலம் வந்தாலுமே முந்தானை குடையாகுமே

(ஏழேழு ஜென்மம்..)

சரணம் 2
=========

தேகம் இது தாய் தந்தது தாய்
இல்லாத நிமிடங்கள் நோய் தந்தது
தூரம் நம்மைப் பிரித்தாலுமே தாய்
நினைக்கின்ற நேரத்தில் புரை ஏறுது
தாய் அன்பில் தானே சுயநலங்கள் இல்லை
தாய் தொலைந்த வழியில் கால்தடங்கள் இல்லை
சொர்க்கங்கள் எங்குள்ளது தாய்மடியில் தானுள்ளது

(ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் ..)

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/18/2008 03:37:00 AM | Permalink | 0 comments
Monday, August 04, 2008
படம்: தசாவதாரம்
பாடியவர்:
சாதனா சர்கம்
இசை: ஹிமேஷ் ரேஷ்மையா
பாடல்: வாலி

பல்லவி
========
முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரந்தா வரந்தா பிருந்தா வனம்தா வனம்தா
(முகுந்தா முகுந்தா...)
வெண்ணை  உண்ட வாயால் ம‌ண்ணை  உண்டவா
பெண்ணை உண்ட காதல் நோய்க்கு மருந்தாகவா
(முகுந்தா முகுந்தா... )
என்ன செய்ய நானும் தோல் பாவை தான்
உந்தன் கைகள் ஆட்டிவைக்கும் நூல் பாவை தான்
(முகுந்தா முகுந்தா..)

குழு: ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
            ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
           சீதா ராம் ஜெய் ஜெய் ராம்
           ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்

சரணம் 1
=========
நீ இல்லாமல் என்றும் இங்கே இயங்காது பூமி
நீ அறியாச் சேதி இல்லை எங்கள் கிருஷ்ண ஸ்வாமி
பின் தொடர்ந்து அசுரர் வந்தால் புன்னகைத்துப் பார்ப்பாய்
கொஞ்ச நேரம் ஆட விட்டு அவர் கணக்கைத் தீர்ப்பாய்
உன் ஞானம் தோற்றிடாத விஞ்ஞானம் ஏது
அறியாதார் கதைபோலே அஞ்ஞானம் ஏது
அன்று அர்ச்சுனனுக்கு நீ உரைத்தாயே பொன்னான கீதை
உன்மொழி கேட்க உருகுகிறாளே இங்கே ஓர் கோதை
வாராது போவாயோ வாசுதேவனே
வந்தாலே வாழும் இங்கு என் ஜீவனே

ஹே.. முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரந்தா வரந்தா பிருந்தா வனம்தா வனம்தா

சரணம் 2
=========
மச்சமாக நீரில் தோன்றி மறைகள் தன்னைக் காத்தாய்
கூர்மமாக மண்ணில் தோன்றி  பூமி தன்னை மீட்டாய்
வாமனன் போல் தோற்றங் கொண்டு வானளந்து நின்றாய்
நரன் கலந்த் சிம்மமாகி இரணியனைக் கொன்றாய்
இராவணன் தன் தலையைக் கொய்ய இராமனாக வந்தாய்
கண்ணனாக நீயே வந்து காதலும் தந்தாய்
இங்கு உன்னவதாரம் ஒவ்வொன்றிலும் தான் உன் தாரம் ஆனேன்
உன் திருவடி பட்டால் திருமணம் ஆகும் ஏந்திழை ஏங்குகிறேனே
மயில் பீலி சூடி நிற்கும் மன்னவனே
மங்கைக்கு என்றும் நீயே மணவாளனே

(முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரந்தா வரந்தா பிருந்தா வனம்தா வனம்தா)

பாட்டி: உசுரோட இருக்கான் நான் பெத்த பிள்ளை
ஏனோ இன்னும் தகவல் வல்லே
வானத்துல இருந்து வந்து குதிப்பான்
சொன்னாக் கேளுங்கோ அசடுகளே
ஆராவமுதா அழகா வாடா
ஒடனே வாடா வாடா...
கோவிந்தா கோபாலா..

(முகுந்தா முகுந்தா..)

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/04/2008 04:30:00 AM | Permalink | 0 comments