Thursday, August 21, 2008
படம்: தசாவதாரம்
பாடல்: வைரமுத்து
பாடியவர்: ஹரிஹரன்
இசை: ஹிமேஷ் ரேஷ்மையா

பல்லவி
========

ஓம் நமோ நாராணாய‌
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
எட்டில் ஐந்து எண் கழியும் என்றால்
ஐந்தில் எட்டு ஏன் கழியாது
அட்ச அட்சரம் பார்க்கும் நெஞ்சு
பஞ்ச அட்சரம் பார்க்காது
ஊனக் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான்
ஞானக் கண்ணில் பார்த்தால் யாவும் சுத்தம் தான்

(கல்லை மட்டும் கண்டால் )

சரணம் ‍1
=========

இல்லை என்று சொன்ன போதும் இன்றியமையாது
தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது
(இல்லை என்று சொன்னபோதும்.)
வீர சைவர்கள் முன்னால் எங்கள்
ஈர வைணவம் தோற்காது
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும்
மேற்கில் சூரியன் உதிக்காது
ராஜலெட்சுமி நாயகன் சீனிவாசன் தான்
சீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் தான்
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜன் தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்
(கல்லை மட்டும் கண்டால்..)

சரணம் 2
=========

நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது
(நீருக்குள்ளே மூழ்கினாலும்..)
வீசும் காற்று வந்து விளக்கணைக்கும்
வெண்ணிலாவை அது அணைத்திடுமா
கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்
அந்த வானம்தன்னை அது நனைத்திடுமா
சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது
தெய்வம் என்று பார்த்தால் சமயம் தெரியாது
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/21/2008 05:20:00 AM | Permalink | 7 comments
Monday, July 07, 2008
படம்: சுப்பிரமணியபுரம்
பாடியவர்கள்: பெல்லி ராஜ், தீபா மரியம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்

பல்லவி
========

ஆ: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
       என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதெனச்
       சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
       என்னைத் தள்ளி விட்டுத் தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
       (கண்கள் இரண்டால் உன்)

பெ: பேச எண்ணி சிலநாள் அருகில் வருவேன்
        பின்பு பார்வை போதும் எனநான் நினைத்தே நகர்வேனே மாற்றி
        கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
        ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
        ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
        இதை இருளிலும் படித்திட முடிகிறதே

சரணம் 1
=========

ஆ: இரவும் அல்லாத பகலும் அல்லாத‌
        பொழுதுகள் உன்னோடு கழியுமா
        தொடவும் கூடாத படவும் கூடாத‌
        இடைவெளி அப்போது குறையுமா
பெ: மடியினில் சாய்ந்திடத் துடிக்குதே
         மறுபுறம் நாணமும் தடுக்குதே
         இதுவரை யாரிடமும் சொல்லாத கதை

ஆ: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
       என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதெனச்
       சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
       என்னைத் தள்ளி விட்டுத் தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

சரணம் 2
=========

பெ: கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத‌
         மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
         உடலும் அல்லாத உருவம் கொள்ளாத‌
         கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்
ஆ:  உனையன்றி வேறொரு நினைவில்லை
         இனி இந்த ஊனுயிர் எனதில்லை
         தடையில்லை சாவிலுமே உன்னோடு வர‌

பெ: கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
          ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
          ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
         இதை இருளிலும் படித்திட முடிகிறதே
ஆ: பேச எண்ணி சிலநாள் அருகில் வருவேன்
         பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே
         நகர்வேனே மாற்றி
பெ: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
         என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென‌
ஆ:  சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
       என்னைத் தள்ளி விட்டுத் தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

நன்றி: இந்த அருமையான பாடலை எனக்கு அறிமுகம் செய்த தோழி காயத்ரிக்கும், பாடலைத் தரவிறக்கம் செய்து அனுப்பிய‌ அலுவலக நண்பர் திவாகருக்கும்!

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 7/07/2008 02:02:00 AM | Permalink | 0 comments
Wednesday, November 21, 2007
 
படம்: உன்னுடன்
இசை: தேவா
பாடியவர்: ஹரிஹரன்
பாடல்: வைரமுத்து
 
பல்லவி
=======
ஆ: கோபமா என் மேல் கோபமா
      பேசம்மா ஒரு மொழி பேசம்மா
      என் பாலைவனத்தில் உந்தன் பார்வை ஆறு வந்து பாய்ந்திடுமா
      உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன் ஜீவன் மெல்ல ஓய்ந்திடுமா
      உள்ளுயிரே உருகுதம்மா
பெ: ஆ ஆ ஆ
ஆ: கோபமா என் மேல் கோபமா...
 
சரணம் 1
==========
ஆ: உன் பார்வை வடிக்கின்ற பாலொளியில் என் வானம் விடியுமடி
     உன் பாதம் படிகின்ற சிறுதுகளில் என் ஆவி துடிக்குதடி
     கோபமா என் மேல் கோபமா
     என் மார்பு கீறடி பெண்ணே அதில்
     உன் முகம் தோன்றிடும் கண்ணே (என் மார்பு கீறடி)
     கண்கள் சாமரம் வீசிடுமா இல்லை
     காயத்தில் கத்தி வீசிடுமா
 
     (கோபமா என் மேல் கோபமா..)
 
சரணம் 2
==========
பெ: ஆ ஆ ஆ
ஆ: நான் கண்களைத் தொலைத்துப் பிறந்திருந்தால் இந்தக் காதல் துயரமில்லை
      நீ இன்னொரு கிரகத்தில் பிறந்திருந்தால் இந்த ஏக்கம் சிறிதுமில்லை
      கோபமா என் மேல் கோபமா
      என் கண்ணில் ஏனடி வந்தாய் என்
      காற்றை நீ கொள்ளை கொண்டாய் (என் கண்ணில்)
      மெளனங்கள் மொழிகளின் வேஷமம்மா
      மறு மொழி ஒன்று பேசிடம்மா

      கோபமா ஒரு மொழி பேசம்மா

      என் பாலைவனத்தில் உந்தன் பார்வை ஆறு வந்து பாய்ந்திடுமா
      உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன் ஜீவன் மெல்ல ஓய்ந்திடுமா
      உள்ளுயிரே உருகுதம்மா
     (கோபமா என் மேல் கோபமா...)
 

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 11/21/2007 05:57:00 AM | Permalink | 0 comments
Thursday, August 16, 2007
படம்: இந்தியன்
பாடல்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலா
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
 
பல்லவி
======
ஆ: கப்பலேறிப் போயாச்சு சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
      நட்டநடு ராவாச்சு நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா
      விடியும் வரையில் போராடினோம் உதிரம் நதியாய் நீராடினோம்
      வைக்கல் எல்லாம் வாளாச்சு துக்கம் எல்லாம் தூளாச்சு கண்ணம்மா
      கண்ணம்மா.... நம்ம வாசல் தேடி சாரல் வரும் 
      மெதுவானம் தூவும் தூறல் வரும்
      வாழ்வில் சூழ்ந்த சோகம் யாவும் இப்ப (கப்பலேறிப் போயாச்சு)
 
சரணம் - 1
==========
 
பெ: வண்ணமான் வஞ்சிமான் நீர்க்கோலம் கண்களால் கன்னத்தில் போட
      இன்னுமா இன்னுமா போர்க்கோலம் இங்குநீ அங்குநான் போராட
      உனைக் கேட்டா என் நெஞ்சை அள்ளிக் கொடுத்தேன்
      தினம் நான் தான் என் அன்பே முள்ளில் படுத்தேன்
      நானோர் தீவாய் ஆனேன் வாவா அம்மம்மா நாளெல்லாம் 
      கானல் நீரைக் குடித்தேன்
 
ஆ: இப்ப (கப்பலேறிப் போயாச்சு)
 
சரணம் - 2
==========
ஆ: லாலா லாலா லாலலலலா லாலாலாலா லாலா லாலலலலா
      அன்னமே அன்னமே நான் சொல்லி வந்ததா தென்றலும் நேற்று
      உன்னையே உன்னையே நான் எண்ணி வெந்ததைச் சொன்னதா பூங்காற்று
      உந்தன் காலில் மெட்டி போல் கூட நடப்பேன்
      உந்தன் கண்ணுக்கு கண்ணீர் போல் காவல் இருப்பேன்
      மாலை சூடி தோளில் ஆடி கைதொட்டு மெய்தொட்டு 
      உன்னில் என்னைக் கரைப்பேன்
      இப்ப (கப்பலேறிப் போயாச்சு)

Labels: , , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/16/2007 10:56:00 AM | Permalink | 1 comments
Thursday, May 03, 2007
படம்: தீபாவளி
பாடியவர்கள்:
மதுஸ்ரீ, அனுராதாஸ்ரீராம்
இசை: யுவன்ஷங்கர்ராஜா
இயக்குநர்: எழில்


பல்லவி
======
மதுஸ்ரீ:
கண்ணன் வரும்வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம் செல்ல மயக்கம் அதை ஏற்கநின்றேன்
கட்டுக்கடங்கா எண்ண அலைகள் றெக்கை விரிக்கும் ரெண்டுவிழிகள்
கூடுபாயும் குறும்புக்காரன் அவனே (கண்ணன் வரும்வேளை)


சரணம்-1
=======
அனுராதா ஸ்ரீராம்:
வான்கோழி கொள்ளும் ஆசை யாழில் தோற்பது
தைமாசம் கொள்ளும் ஆசை கூடிப் பார்ப்பது
தேர்க்கால்கள் கொள்ளும் ஆசை வீதி சேர்வது
ஓரீசல் கொள்ளும் ஆசை தீயில் வாழ்வது
கூறவா இங்கு எனது ஆசையை தோழனே வந்து உளறு மீதியை
கோடிக் கோடி ஆசை தீரும் மாலை
மதுஸ்ரீ: கண்ணன் வரும்வேளை..



சரணம்-2
========
அனுராதா ஸ்ரீராம்:
பூவாசம் தென்றலோடு சேரவேண்டுமே
ஆண்வாசம் தொட்டிடாத தேகம் ஊனமே
தாய்ப்பாசம் பத்துமாதம் பாரம் தாங்குமே வாழ்நாளின் மிச்சபாரம் காதல் எழுதுமே
நீண்டநாள் கண்ட கனவு தீரவே தீண்டுவேன் உன்னை இளமை ஊறவே
நீயில்லாமல் நிழலும் எனக்குத் தொலைவே (கண்ணன் வரும்வேளை)

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/03/2007 12:22:00 AM | Permalink | 4 comments
Wednesday, May 02, 2007
படம்: கடலோரக் கவிதைகள்
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி
இசை: இளையராஜா
இயக்குநர்: பாரதிராஜா
 
 
பல்லவி
======
ஆ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
      எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
      பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவளமல்லித் தோட்டம்
      நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள் கூச்சம்
பெ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
      கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே
 
 
சரணம்-1
=========
பெ: மனசு தடுமாறும் அது நெனச்சா நெறம்மாறும்
      மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடைபோடும்
ஆ: நித்தம் நித்தம் ஒன்நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
     மாடுரெண்டு பாதைரெண்டு வண்டிஎங்கே சேரும்
பெ: பொத்திவச்சா அன்பு இல்லை சொல்லிப்புட்டா வம்புஇல்லை
      சொல்லத்தானே தெம்புஇல்லை இந்தத்துன்பம் யாரால 
 
 
சரணம்-2
=========
ஆ: பறக்கும் திசைஏது இந்தப் பறவை அறியாது
      ஒறவும் தெரியாது அது ஒனக்கும் புரியாது
பெ: பாறையில பூமொளச்சுப் பாத்தவுக யாரு
      அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு
ஆ: காலம் வரும் வேளையில காத்திருப்பேன் பொன்மயிலே
பெ: தேருவரும் உண்மையிலே சேதிசொல்வேன் கண்ணாலே
 
 
பெ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே..
       கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே
       பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவளமல்லித் தோட்டம்
       நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்
ஆ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
       எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/02/2007 03:07:00 AM | Permalink | 0 comments