Friday, August 29, 2008
படம்: சங்கமம்
பாடல்: வைரமுத்து
பாடியவர்கள்:  ஹரிஹரன், எம். எஸ். விஸ்வநாதன்
இசை: ஏ. ஆர். ரஹ்மான்

பல்லவி
=======

ஆ: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
       மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
       உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
      உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
      (மழைத்துளி மழைத்துளி..)
      ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க‌
       என்ன ஆடாம ஆட்டி வைச்ச வணக்கமுங்க‌
       என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
       என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைகள் வெல்லும் வரைக்கும்
       (என் காலுக்கு சலங்கையிட்ட)
      நீ உண்டு உண்டு என்றபோதும் அட இல்லை இல்லை என்றபோதும்
     சபை ஆடிய பாதமய்யா அது நிக்காது ஒருபோதும்

       (ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா)

      (மழைத்துளி மழைத்துளி...)

சரணம் 1
========

ஆ: தண்ணியில மீனழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்லை
       எனக்குள்ள நானழுதா துடைக்கவே எனக்கொரு நாதியில்ல‌
       என் கண்ணீ் ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரமாகுமே
       சபதம் சபதம் என்றே சலங்கை பாடுமே
        ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
      மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு
     விழியே விழியே இமையே தீயும் போதும் கலங்காதிரு
     கங்கை நதி அத்தனையும் கடலில் சங்கமம்
     நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம்
     கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்

     (மழைத்துளி மழைத்துளி...)

   (ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா)


சரணம் 2
========

(எம். எஸ். விஸ்வநாதன்)
ஆ:  தந்தான தந்தானனா..
        மழைக்காகத் தான் மேகம்  அட கலைக்காகத் தான் நீயும்
         உயிர்  கலந்தாடுவோம் நாளும் மகனே வா
         நீ சொந்தக் காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை வெல்லு
        இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா மகனே வா
         ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்
         தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்

        புலிகள் அழுவது ஏது  அட பறவையும் அழ அறியாது
        போர்க்களம் நீ புகும்போது முள் தைப்பது கால் அறியாது

         மகனே மகனே காற்றுக்கு ஓய்வென்பது ஏது அட ஏது
         கலைக்கொரு தோல்வி கிடையாது கிடையாது

ஹரி: ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க‌
விஸ்: என்னை ஆடாம ஆட்டி வெச்ச வணக்கமுங்க‌
ஹரி: என் காலுக்குச் சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல்வணக்கம்
விஸ்: என் கால் நடமாடுமையா நம்ம கட்டளைகள் வெல்லும்வரைக்கும்
ஹரி: நீ உண்டு உண்டு என்ற போதும்
விஸ்: நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்ற போதும்
              சபை ஆடிய பாதமையா அது நிக்காது ஒருபோதும்

ஹரி: மழைத்துளி மழைத்துளி...

Labels: , , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/29/2008 07:06:00 AM | Permalink | 2 comments
Thursday, August 21, 2008
படம்: தசாவதாரம்
பாடல்: வைரமுத்து
பாடியவர்: ஹரிஹரன்
இசை: ஹிமேஷ் ரேஷ்மையா

பல்லவி
========

ஓம் நமோ நாராணாய‌
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
எட்டில் ஐந்து எண் கழியும் என்றால்
ஐந்தில் எட்டு ஏன் கழியாது
அட்ச அட்சரம் பார்க்கும் நெஞ்சு
பஞ்ச அட்சரம் பார்க்காது
ஊனக் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான்
ஞானக் கண்ணில் பார்த்தால் யாவும் சுத்தம் தான்

(கல்லை மட்டும் கண்டால் )

சரணம் ‍1
=========

இல்லை என்று சொன்ன போதும் இன்றியமையாது
தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது
(இல்லை என்று சொன்னபோதும்.)
வீர சைவர்கள் முன்னால் எங்கள்
ஈர வைணவம் தோற்காது
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும்
மேற்கில் சூரியன் உதிக்காது
ராஜலெட்சுமி நாயகன் சீனிவாசன் தான்
சீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் தான்
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜன் தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்
(கல்லை மட்டும் கண்டால்..)

சரணம் 2
=========

நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது
(நீருக்குள்ளே மூழ்கினாலும்..)
வீசும் காற்று வந்து விளக்கணைக்கும்
வெண்ணிலாவை அது அணைத்திடுமா
கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்
அந்த வானம்தன்னை அது நனைத்திடுமா
சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது
தெய்வம் என்று பார்த்தால் சமயம் தெரியாது
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/21/2008 05:20:00 AM | Permalink | 7 comments
Wednesday, November 21, 2007
 
படம்: உன்னுடன்
இசை: தேவா
பாடியவர்: ஹரிஹரன்
பாடல்: வைரமுத்து
 
பல்லவி
=======
ஆ: கோபமா என் மேல் கோபமா
      பேசம்மா ஒரு மொழி பேசம்மா
      என் பாலைவனத்தில் உந்தன் பார்வை ஆறு வந்து பாய்ந்திடுமா
      உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன் ஜீவன் மெல்ல ஓய்ந்திடுமா
      உள்ளுயிரே உருகுதம்மா
பெ: ஆ ஆ ஆ
ஆ: கோபமா என் மேல் கோபமா...
 
சரணம் 1
==========
ஆ: உன் பார்வை வடிக்கின்ற பாலொளியில் என் வானம் விடியுமடி
     உன் பாதம் படிகின்ற சிறுதுகளில் என் ஆவி துடிக்குதடி
     கோபமா என் மேல் கோபமா
     என் மார்பு கீறடி பெண்ணே அதில்
     உன் முகம் தோன்றிடும் கண்ணே (என் மார்பு கீறடி)
     கண்கள் சாமரம் வீசிடுமா இல்லை
     காயத்தில் கத்தி வீசிடுமா
 
     (கோபமா என் மேல் கோபமா..)
 
சரணம் 2
==========
பெ: ஆ ஆ ஆ
ஆ: நான் கண்களைத் தொலைத்துப் பிறந்திருந்தால் இந்தக் காதல் துயரமில்லை
      நீ இன்னொரு கிரகத்தில் பிறந்திருந்தால் இந்த ஏக்கம் சிறிதுமில்லை
      கோபமா என் மேல் கோபமா
      என் கண்ணில் ஏனடி வந்தாய் என்
      காற்றை நீ கொள்ளை கொண்டாய் (என் கண்ணில்)
      மெளனங்கள் மொழிகளின் வேஷமம்மா
      மறு மொழி ஒன்று பேசிடம்மா

      கோபமா ஒரு மொழி பேசம்மா

      என் பாலைவனத்தில் உந்தன் பார்வை ஆறு வந்து பாய்ந்திடுமா
      உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன் ஜீவன் மெல்ல ஓய்ந்திடுமா
      உள்ளுயிரே உருகுதம்மா
     (கோபமா என் மேல் கோபமா...)
 

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 11/21/2007 05:57:00 AM | Permalink | 0 comments
Friday, August 17, 2007

படம்: பீமா
பாடியவர்கள்: மதுஸ்ரீ, ஹரிஹரன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

பல்லவி
=======

பெ: ரகசிய கனவுகள் ஜல் ஜல்
    என் இமைகளைக் கழுவுது சொல் சொல்
    இளமையில் இளமையில் ஜில் ஜில்
    என் இருதயம் நழுவுது செல் செல்
ஆ: முதல்பிழை போல் மனதினிலே விழுந்தது உனதுருவம்
    ஓ உதடுகளால் உனைப்படிப்பேன் இருந்திடு அரைநிமிடம்
    தொலைவது போல் தொலைவது தான் உலகில் உலகில் புனிதம்
குழு: இறகே இறகே மயிலிறகே வண்ண மயிலிறகே வந்து தொடுஅழகே
     தொடத் தொடக் குழைகிற சுகம் சுகமே
     கண் படப் படப் புதிர்களும் அவிழ்ந்திடுமே (இறகே இறகே)

சரணம்-1
========

பெ: மறுபடி ஒருமுறை பிறந்தேனே
    விரல்தொடப் புருவமும் சிவந்தேனே
    ஓ.. இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ
    சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ
ஆ: சுடும் தனிமையை உணர்கிற மரநிழல் போல எனை சூட
    நரம்புகளோடு குறும்புகள் ஆடும் எழுதிய கணக்கு
    எனதிரு கைகள் தழுவிட நீங்கும் இருதய சுளுக்கு

பெ: ரகசிய கனவுகள்   குழு: ஜல் ஜல்
பெ: என் இமைகளைக் கழுவுது  குழு: சொல் சொல்
பெ: இளமையில் இளமையில்  குழு: ஜில் ஜில்
பெ: என் இருதயம் நழுவுது செல் செல்

சரணம்-2
=========

ஆ: உயிரணு முழுவதும் உனைப் பேச உனைப்பேச
    இமை தொழும் நினைவுகள் அனல் வீச அனல் வீச
    ஓ நெனச்சாலே செவப்பாகும் மருதாணித் தோட்டம் நீ
    தலைவைத்து நான் தூங்கும் தலகாணிக் கூச்சம் நீ
பெ: எனதிரவினில் கசிகிற நிலவொளி நீயே படர்வாயே
    நெருங்குவதாலே நொறுங்கி விடாது இருபது வருடம்
    ஓ தவறுகளாலே தொடுகிற நீயும் அழகிய மிருகம்

ஆ: ரகசிய கனவுகள் ஜல் ஜல்…..
பெ: குயிலினமே குயிலினமே எனக்கொரு சிறகு கொடு
    முகிலினமே முகிலினமே முகவரி எழுதிக் கொடு
    அவனிடமே அவனிடமே எனது கனவை அனுப்பு
குழு: இறகே இறகே … (இறகே இறகே)

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/17/2007 08:18:00 AM | Permalink | 2 comments
Tuesday, April 10, 2007
படம் : சிவாஜி
பாடியவர்கள் : ஹரிஹரன், மதுஸ்ரீ
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
பாடல் : வைரமுத்து

பல்லவி
========
: பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னைகையோ வவ்வல் வவ்வல்
உன் பூவிழிப் பார்வை போதுமடி
என் பூங்கா இலைகளும் பதறுமடி
உன் கால்கொலுசொலிகள் போதுமடி
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி
பெ: வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி)
அன்பா வாளையெடு அழகை சாணையிடு
உன்ஆண் வாசனை என் மேனியில் நீ பூசிவிடு
ஆ: அடி நெட்டை நிலவே ரெட்டைத் திமிரே
நெஞ்சில் முட்டிக் கொல்லு
பெ: வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி)
ஆ: பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னகையோ வவ்வல் வவ்வல்

சரணம்-1
=========
பெ: ஹோ.. ஆ..ஆ..ஆ..
ஆ: ஒரு வெண்ணிலவை மணக்கும் மன்மதன் நான்
என் தேன்நிலவே ஒரு நிலவுடன் தான்
அவள் யாருமில்லை இதோ இதோ இவள்தான்
பெ: புன்னகைப் பேரரசே தேன்குளத்துப்
பூவுக்குள் குளிப்பீரா ஆ..(புன்னகைப் பேரரசே)
விடியும்வரை மார்புக்குள் இருப்பீரா
விழிகளுக்குள் சிறுதுயில் கொள்வீரா
ஆ: ஓ.. பெண்களிடம் சொல்வது குறைவு செய்வது அதிகம்
செயல்புயல் நானடி
பெ: வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி)
ஆ: பூம்பாவாய்..

சரணம்-2
=======
ஆ: பொன் வாக்கியமே வாய் வாத்தியமே
உன் வளைவுகளில் உள்ள நெளிவுகளில்
வந்து ஒளிந்து கொண்டேன் சுகம்சுகம் கண்டேன்
பெ: ஆனந்த வெறியில் நான் ஆடைகளில்
பூமியை முடிந்து கொண்டேன்
விண்வெளியில் ஜதிசொல்லி ஆடி
வெண்ணிலவைச் சகதியும் ஆக்கிவிட்டேன்
ஆ: அடடடா குமரியின் வளங்கள் குழந்தையின் சிணுங்கல்
முரண்பாட்டு மூட்டை நீ

பெ: வாஜி.வா வா வா வா..
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி)
ஆ: பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்....

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 4/10/2007 08:55:00 AM | Permalink | 6 comments