Friday, September 18, 2009
படம்: ஆதவன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், சின்மயி
பாடல்: <தெரியவில்லை இதுவரை>

பல்லவி
‍‍‍‍‍‍‍‍‍=======
பெ: வாராயோ வாராயோ காதல் கொள்ள‌
பூவோடு பேசாத காற்று இல்ல‌
ஏனிந்தக் காதலும் நேற்று இல்ல‌
நீயே சொல் மனமே
ஆ: வாராயோ வாராயோ மோனாலிசா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள்தோறும் நான் உந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே என்னோடு வா தினமே

சரணம் 1
‍========
பெ: இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான் தான்
உன் கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன் தான்
ஆ: பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப் போல ஓடும்
உனைக் காதல் கண்கள் தேடும்
பெ: ஓ லை லை லை லை காதல் லீலை
செய் செய் செய் செய் காலை மாலை
ஆ: உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன்
இவனுடன் சேர்ந்தாடு சின்ட்ரெல்லா

பெ: வாராயோ வாராயோ காதல் கொள்ள..

சரணம் 2
========
ஆ: நீயே நீயே அந்த ஜுலியட்டின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்
பெ: தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக் குளிப்பாயே
ஆ: நீ நீ நீ நீ மை ஃபேர் லேடி
வா வா வா வா என் காதல் ஜோதி
பெ: நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார சுருதி நீ

ஆ: வாராயோ வாராயோ மோனாலிசா

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 9/18/2009 08:55:00 AM | Permalink | 2 comments
Monday, September 29, 2008
படம்: வாரணம் ஆயிரம்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர்,  பிரசாந்தினி
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்: தாமரை

பல்லவி
========

சூர்யா: Hai Malini .. I am Krishnan..
        நான் இதை  சொல்லியே ஆகணும்.. நீ அவ்வளவு அழகு
        இங்க எவனும் இவ்ளோ அழகா ஒரு ப்ச்..
         இவ்ளோ அழகைப் பாத்திருக்க மாட்டாங்க..
        And I am in love with you...

ஆ: முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே
        சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
        இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
        எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே
        வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா
        இப்போழ்தே என்னோடு வந்தாலென்ன‌
        ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன  (இப்போழ்தே)
       (முன் தினம் பார்த்தேனே..)

சரணம் 1
========

ஆ: காதலே.. சுவாசமே..

ஆ: துலாத் தட்டில் உன்னை வைத்து
        நிகர் செய்ய பொன்னை வைத்தால்
       துலாபாரம் தோற்காதோ பேரழகே
பெ: முகம் பார்த்துப் பேசும் உன்னை
       முதல் காதல் சிந்தும்  கண்ணை
      அணைக்காமல் போவேனோ ஆருயிரே
ஆ: ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
       புகை போல படாமல் பட்டு நகர்வேனடி
       வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி

பெ: முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே..
        சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
        இத்தனை நாளாக
ஆ: oh my love
பெ: உன்னை நான் பாராமல்
ஆ: yes my love
பெ:  எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே

சரணம் 2
========

பெ: கடல் நீலம் மங்கும் நேரம்
         அலை வந்து தீண்டும் தூரம்
        மனம் சுத்தம் ஆகாதா ஈரத்திலே
ஆ: தலை சாய்க்கத் தோளும் தந்தாய்
       விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்
       இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே
பெ: பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
         உயிரெங்கும் உதயம் கண்டேன் நெருங்காமலே
         உனையன்றி எனக்கு ஏது எதிர்காலமே

ஆ: முன் தினம் பார்த்தேனெ பார்த்ததும் தோற்றேனே..

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 9/29/2008 11:45:00 PM | Permalink | 6 comments
Monday, April 28, 2008

படம்: தாம் தூம்
பாடியவர்கள்: கிருஷ், பாம்பே ஜெயஸ்ரீ
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

பல்லவி
======

ஆ: வலியே என் உயிர்வலியே நீ உலவுகிறாய் என் விழிவழியே
சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறியே
மதியே என் முழுமதியே பெண் பகலிரவாய் நீ படுத்துறியே
நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசுறியே

பெ: யாரோ மனதிலே ஏனோ கனவிலே
நீயா உயிரிலே தீயா தெரியலே
காற்று வந்து மூங்கில் என்னைப் பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமையாகின்றதோ

ஆ: வலியே என் உயிர்வலியே நீ உலவுகிறாய் என் விழிவழியே
குழு: ஆஹா
ஆ: சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறியே
குழு: ஏஹே ஏஹே ஏ
ஆ: மதியே என் முழுமதியே பெண் பகலிரவாய் நீ படுத்துறியே
குழு: ஏஹே
ஆ: நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசுறியே
குழு: ஏஹேஹேஹே ஏஹியேஹியே

சரணம் 1
=======

பெ: மனம் மனம் எங்கிலும் ஏதோ கனம் கனம் ஆனதே
தினம் தினம் ஞாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே
அலைகளின் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கிறேன்
நீயா ஆ: முழுமையாய்
பெ: நானா ஆ: வெறுமையாய்
பெ: நாமா இனி சேர்வோமா

(யாரோ மனதிலே ஏனோ கனவிலே.. )

சரணம் 2
=======

பெ: மிக மிகக் கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள் தான்
மிருதுவாய்ப் பேசியே என்னுள் வசித்தது உன் வார்த்தை தான்
கண்களைக் காணவே இமைகளே மறுப்பதா
வெந்நீர் குழு: வெண்ணிலா
பெ: கண்ணீர் குழு: கண்ணிலா
பெ: நானும் வெறும் கானலா யாரோ
குழு: யாரோ பெ: மனதிலே ஏனோ
குழு: ஏனோ பெ: கனவிலே ஓ நீயா
குழு: ஓ நீயா பெ: உயிரிலே தீயா
குழு: தீயா பெ: தெரியலே
பெ: காற்று வந்து மூங்கில் என்னைப் பாடச் சொல்கின்றதோ

ஆ: வலியே என் உயிர்வலியே நீ உலவுகிறாய் என் விழிவழியே
குழு: ஆஹா
ஆ: சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறியே
குழு: ஏஹே ஏஹே ஏ
ஆ: மதியே என் முழுமதியே பெண் பகலிரவாய் நீ படுத்துறியே
குழு: ஆஹா
ஆ: நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசுறியே
குழு: ஏஹே ஏஹே ஏ

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 4/28/2008 05:55:00 AM | Permalink | 1 comments
Friday, August 17, 2007

படம்: பீமா
பாடியவர்கள்: மதுஸ்ரீ, ஹரிஹரன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

பல்லவி
=======

பெ: ரகசிய கனவுகள் ஜல் ஜல்
    என் இமைகளைக் கழுவுது சொல் சொல்
    இளமையில் இளமையில் ஜில் ஜில்
    என் இருதயம் நழுவுது செல் செல்
ஆ: முதல்பிழை போல் மனதினிலே விழுந்தது உனதுருவம்
    ஓ உதடுகளால் உனைப்படிப்பேன் இருந்திடு அரைநிமிடம்
    தொலைவது போல் தொலைவது தான் உலகில் உலகில் புனிதம்
குழு: இறகே இறகே மயிலிறகே வண்ண மயிலிறகே வந்து தொடுஅழகே
     தொடத் தொடக் குழைகிற சுகம் சுகமே
     கண் படப் படப் புதிர்களும் அவிழ்ந்திடுமே (இறகே இறகே)

சரணம்-1
========

பெ: மறுபடி ஒருமுறை பிறந்தேனே
    விரல்தொடப் புருவமும் சிவந்தேனே
    ஓ.. இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ
    சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ
ஆ: சுடும் தனிமையை உணர்கிற மரநிழல் போல எனை சூட
    நரம்புகளோடு குறும்புகள் ஆடும் எழுதிய கணக்கு
    எனதிரு கைகள் தழுவிட நீங்கும் இருதய சுளுக்கு

பெ: ரகசிய கனவுகள்   குழு: ஜல் ஜல்
பெ: என் இமைகளைக் கழுவுது  குழு: சொல் சொல்
பெ: இளமையில் இளமையில்  குழு: ஜில் ஜில்
பெ: என் இருதயம் நழுவுது செல் செல்

சரணம்-2
=========

ஆ: உயிரணு முழுவதும் உனைப் பேச உனைப்பேச
    இமை தொழும் நினைவுகள் அனல் வீச அனல் வீச
    ஓ நெனச்சாலே செவப்பாகும் மருதாணித் தோட்டம் நீ
    தலைவைத்து நான் தூங்கும் தலகாணிக் கூச்சம் நீ
பெ: எனதிரவினில் கசிகிற நிலவொளி நீயே படர்வாயே
    நெருங்குவதாலே நொறுங்கி விடாது இருபது வருடம்
    ஓ தவறுகளாலே தொடுகிற நீயும் அழகிய மிருகம்

ஆ: ரகசிய கனவுகள் ஜல் ஜல்…..
பெ: குயிலினமே குயிலினமே எனக்கொரு சிறகு கொடு
    முகிலினமே முகிலினமே முகவரி எழுதிக் கொடு
    அவனிடமே அவனிடமே எனது கனவை அனுப்பு
குழு: இறகே இறகே … (இறகே இறகே)

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/17/2007 08:18:00 AM | Permalink | 2 comments
Tuesday, August 14, 2007
படம்: உன்னாலே உன்னாலே
பாடியவர்கள்: ஹரிசரண், மதுஸ்ரீ
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்: பா.விஜய்

பல்லவி
======

ஆ: வைகாசி நிலவே வைகாசி நிலவே
மைபூசி வைத்திருக்கும் கண்ணில் நீ
பொய்பூசி வைத்திருப்பதென்ன
பெ: வெட்கத்தை உடைத்தாய் கைக்குள்ளே அடைத்தாய்
தண்ணீரை ஊற்று குளிர்ந்திட நான்
தள்ளாடித் தத்தளிக்கும் நேரம்
ஆ: விழியில் இரண்டு விலங்கு இருக்கு
அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு
என் ஜீவன் வாழும்வரை ஓ..
என் செய்வாய் நாளும் எனை ( வைகாசி நிலவே)

சரணம்-1
=======

ஆ: தூவானம் எனத் தூறல்கள் விழத்
தப்பான எண்ணம் நெஞ்சில் ததும்பிடுதே
பெ: கண்ணா நீ பொறு கட்டுக்குள் இரு
காதல் கைகூடட்டும்
அ: இதோ எனக்காக விரிந்தது இதழ் எடுக்கவா தேனே
பெ: கனி எதற்காகக் கனிந்தது அணில் கடித்திடத் தானே
அ: ஹோ.. காலம் நேரம் பார்த்துக் கொண்டா
காற்றும் பூவும் காதல் செய்யும்

ஆ: வைகாசி நிலவே..
பெ: ஹோ.. வெட்கத்தை உடைத்தாய்..

சரணம்-2
========

ஆ: நூலாடை என மேலாடை எனப்
பாலாடை மேனி மீது படரட்டுமா
பெ: நான் என்ன சொல்ல நீ என்னை மெல்லத்
தீண்டித் தீ வைக்கிறாய்
ஆ: அனல் கொதித்தாலும் அணைத்திடும் புனல் அருகினில் உண்டு
பெ: நனை நெருப்பாக இருக்கையில் எனைத் தவிப்பது கண்டு
ஆ: ஹோ.. மோகத்தீயும் தேகத் தீயும்
தீர்த்தம் பார்த்துத் தீராதம்மா

ஆ: வைகாசி நிலவே..
பெ: ஹோ.. வெட்கத்தை உடைத்தாய்..
ஆ: விழியில் இரண்டு விலங்கு இருக்கு
பெ: அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு
ஹோ. என் ஜீவன் வாழும் வரை
என் செய்வாய் நாளும் எனை (என் ஜீவன்).

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/14/2007 08:22:00 AM | Permalink | 2 comments
Monday, May 07, 2007

படம்:          தாமிரபரணி

பாடியவர்:  கே.கே (கே.கிருஷ்ணமூர்த்தி)

இசை:         ஹாரிஸ் ஜெயராஜ்

இயக்குநர்: ஹரி

 

 

பல்லவி

========

 

வார்த்தை ஒண்ணு வார்த்தை ஒண்ணு கொல்லப் பாக்குதே

அது வாளெடுத்து வாளெடுத்து வெட்டப் பாக்குதே (வார்த்தை ஒண்ணு)

நான் திமிரா செஞ்ச காரியம் ஒண்ணு தப்பாப் போனதே

என் தாமிரபரணித் தண்ணி இப்போ உப்பாப் போனதே

நீ எனக்கு சொந்தமில்லை என்று சொன்னவுடன் மனசு வெறுத்துப்போச்சே

என் நிழலில் கூட இப்ப ரத்தம் கொட்டுதடி இதயம் சுருங்கிப்போச்சே (வார்த்தை ஒண்ணு)

 

சரணம்-1

=========

 

உறவுகள் எனக்கது புரியல சில உணர்வுகள் எனக்கது விளங்கல

கலங்கரை விளக்கமே இருட்டுல

பெத்ததுக்கு தண்டனைய கொடுத்துட்டேன்

அவன் ரத்தத்துல துக்கத்தை நான் தெளிச்சுட்டேன்

அன்புல அரளிய வெதைச்சிட்டேன்

அட்டைக்கத்தி தான்னு நான் ஆடிப்பாத்தேன் விளையாட்டு

வெட்டுக்கத்தியாக அது மாறி இப்ப வினையாச்சு

பட்டாம்பூச்சி மேல ஒரு கொட்டாங்குச்சி மூடியதே

கண்ணாமூச்சி ஆட்டத்துல கண்ணே இப்ப காணலியே

வார்த்தை ஒண்ணு.. வார்த்தை ஒண்ணு...

 

சரணம்-2

=========

 

படைச்சவன் போட்ட முடிச்சிது என் கழுத்துல மாட்டி இறுக்குது

பகையிலே மனசு தான் பதறுது

கனவுல பெய்யிற மழையிது நான் கைதொடும் போது மறையுது

மேகமே சோகமா உறையுது

சூரத்தேங்கா(ய்) போல என்னை சுக்குநூறா உடைக்காதே

சொக்கப் பனைமேல நீ தீயை அள்ளி வீசாதே

எட்டி எட்டிப் போகையில ஈரக்குலை வேகிறதே

கூட்டாஞ்சோறு ஆக்கையில திரிக்காத்து வீசுதே

(வார்த்தை ஒண்ணு)
 
 

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/07/2007 02:21:00 AM | Permalink | 0 comments
Tuesday, April 24, 2007

படம்: உன்னாலே உன்னாலே
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக், ஹரிணி, கிருஷ்


பல்லவி
========
க்ரிஷ்: முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாகப் பரவசமாக வா வா வா அன்பே
ஓஹோ தனித்தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக வா வா அன்பே
கார்த்திக்: உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே
உன்முன்னே உன்முன்னே மெய்காண நின்றேனே
ஒரு சொட்டுக் கடலும் நீ ஒரு பொட்டு வானம் நீ
ஒரு புள்ளிப் புயலும் நீ பிரம்மித்தேன்
ஓ ஒளிவீசும் இரவும் நீ உயிர்கேட்கும் அமுதம் நீ
இமைமூடும் விழியும் நீ யாசித்தேன்
க்ரிஷ்: முதல் முதலாக முதல் முதலாக...

சரணம்-1
========
கார்த்திக்: ஒரு பார்வையின் நீளத்தை ஒரு வார்த்தையின் ஆழத்தை
தாங்காமல் வீழ்ந்தேனே தூங்காமல் வாழ்ந்தேனே
நதி மீது சருகைப் போல் உன்பாதை வருகின்றேன்
கரைத்தேற்றி விடுவாயோ கதிமோட்சம் தருவாயோ
மொத்தமாய் மொத்தமாய் நான்மாறிப் போனேனே
சுத்தமாய் சுத்தமாய் தூள்தூளாய் ஆனேனே
க்ரிஷ்: முதல் முதலாக முதல் முத்லாக..
கார்த்திக்: உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே
உன்முன்னே உன்முன்னே மெய்காண நின்றேனே

சரணம்-2
========
கார்த்திக்: நீயென்பது மழையாக நானென்பது வெயிலாக
மழையோடு வெயில் சேரும் அந்த வானிலை சுகமாகும்
ஹரிணி: சரியென்று தெரியாமல் தவறென்று புரியாமல்
எதில்வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான்
கார்த்திக்: என்வசம் என்வசம் இரண்டடுக்கு ஆகாயம்
இரண்டிலும் போகுதே என் காதல் கார்மேகம்
பபபபப்பப்ப பபபபப்பப்ப ..


ஹரிணி: உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே
உன்முன்னே உன்முன்னே மெய்காண நின்றேனே
கார்த்திக்: ஒரு சொட்டுக் கடலும் நீ ஒருபொட்டு வானம் நீ
ஒருபுள்ளிப் புயலும் நீ பிரம்மித்தேன்
ஹரிணி: ஒளிவீசும் இரவும் நீ உயிர்கேட்கும் அமுதம் நீ
இமைமூடும் விழியும் நீ யாசித்தேன்

Labels: , , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 4/24/2007 04:08:00 AM | Permalink | 0 comments
Tuesday, May 23, 2006
படம் : கஜினி
பாடல் : நா.முத்துக்குமார்
பாடியவர்கள் : ஸ்ரீராம் பார்த்தசாரதி, பாம்பே ஜெயஸ்ரீ
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

பல்லவி
======
ஆ: சுட்டும் விழிச் சுடரே சுட்டும் விழிச் சுடரே
என் உலகம் உன்னைச் சுற்றுதே
சட்டைப் பையில் உன் படம் தொட்டுத் தொட்டு உரச
என் இதயம் பற்றிக் கொள்ளுதே
உன் விழியில் விழுந்தேன் விண்வெளியில் பறந்தேன்
கண் விழித்து சொப்பனம் கண்டேன் உன்னாலே
கண் விழித்து சொப்பனம் கண்டேன்
(சுட்டும் விழிச் சுடரே ...)

சரணம் - 1
=========
ஆ: மெல்லினம் மார்பில் கண்டேன்
வல்லினம் விழியில் கண்டேன்
இடையினம் தேடி இல்லை என்றேன்
பெ: தூக்கத்தில் உளறல் கொண்டேன்
தூறலில் விரும்பி நின்றேன்
தும்மல் வந்தால் உன் நினைவைக் கொண்டேன்
ஆ: கருப்பு வெள்ளைப் பூக்கள் உண்டா
உன் கண்ணில் நான் கண்டேன்
உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன் (உன் கண்கள்)
பெ: சுட்டும் விழிச் சுடரே..

சரணம் - 2
==========
பெ: மரங்கொத்திப் பறவை ஒன்று
மனங்கொத்திப் போனதென்று
உடல் முதல் உயிர்வரை தந்தேன்
ஆ: தீயின்றித் திரியும் இன்றி
தேகங்கள் எரியும் என்று
இன்று தானே நானும் கண்டு கொண்டேன்
பெ: மழை அழகா வெயில் அழகா
கொஞ்சும் போது மழை அழகு
கண்ணாலே கோபப்பட்டால் வெயில் அழகு (கண்ணாலே)
ஆ: சுட்டும் விழிச் சுடரே......

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/23/2006 07:05:00 AM | Permalink | 0 comments