Sunday, March 09, 2008
படம்: இன்பா
பாடியவர்: கார்த்திக், சின்மயி
இசை: பாலாஜி பி.பி.

பல்லவி
======
ஆ: யாரோ யாரோ எந்த‌ன் நெஞ்சைத் தொட்டுப் போக‌
   மேகத்துக்குள் மூழ்கி விட்டேன் நானே
   யாரோ யாரோ எந்தன் கண்ணுரசிப் போக‌
   அந்தரத்தில் தொங்குகிறேன் நானே
   ஒரு நிமிடத்தில் என் இதயத்தில்
   அட நூறு மைல் வேகத்திலே நுழைந்தாள்
   ஒரு புன்னகை ஒரு கண்ணிமை 
   என் வானத்தையே இரண்டங்குலம் திறந்தாள்
   
   காதலிக்கிறேன் முதல் தடவை 
   காத்திருக்கிறேன் பல தடவை
   மூச்சு வழியாய் உள்புகுந்தாள் 
   இன்று வரையில் திரும்பவில்லை (காதலிக்கிறேன்..)
    (யாரோ யாரோ எந்த‌ன் ...)

சர‌ண‌ம் 1
=======
பெ: வ‌குப்பின் முடிவில் க‌ண்க‌ள் இர‌ண்டை ச‌ந்திக்கின்ற‌ சிறு நேர‌ம்
   அந்த‌ நொடிக்காய் காலை தொட‌ங்கிக் காத்திருக்கும் ம‌ன‌ம் பாவ‌ம்
ஆ: ஜ‌ன்ன‌லருகே ச‌ரியும் கூந்த‌ல் மேஜைக‌ளைத் த‌ழுவாதா
   மேஜை க‌ட‌ந்து அந்த‌ ஸ்ப‌ரிச‌ம் எந்த‌ன் விர‌ல் அறியாதா
   வ‌ந்து விடுவாள் நெஞ்சைத் தொடுவாள்
   என்ற நினைவில் நானும் ந‌ட‌ந்தேன் (யாரோ யாரோ)

பெ: காதலிக்கிறேன் முதல் தடவை 
    காத்திருக்கிறேன் பல தடவை
    மூச்சு வழியாய் உள்புகுந்தான்
    இன்று வரையில் திரும்பவில்லை

ச‌ர‌ண‌ம் 2
======
பெ: நீ என் விரலானாய் வ‌ருடும் நேர‌மே 
    நான் உன் இமையானேன் உற‌ங்கும் கால‌மே
ஆ: தேவ‌தைக‌ள் த‌ரை வ‌ந்து ந‌ட‌க்கும் நேரில் வ‌ந்து உத‌டுக‌ள் கொடுக்கும்
    உன் வ‌ருகை உண‌ர்த்திய‌து என‌க்கு ந‌டுவில் இந்தத் த‌ய‌க்கமும் எத‌ற்கு
பெ: உன் நேச‌த்தில் கைதாகிறேன் உன் பார்வையில் பெண்ணாகிறேன்
    உன் தோள்க‌ளில் குடைசாய்கிறேன் உன் வீட்டில் தான் நான் வாழ்கிறேன்

ஆ: யாரோ யாரோ என் நெஞ்சைத் தொட்டுப்போக‌..

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 3/09/2008 08:12:00 AM | Permalink | 0 comments
Thursday, November 08, 2007

படம்: பொல்லாதவன்
இசை: ஜி.வி. பிரகாஷ் ('வெயில்' பட இசையமைப்பாளர்)
பாடியவர்கள்: கார்த்திக், பாம்பே ஜெயஸ்ரீ


பல்லவி
=======
ஆ: மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்சநேரம்
என் விழி எங்கும் பூக்காலம்
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே அய்யோ அது எனக்குப் பிடித்ததடி
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே அய்யோ பைத்தியமே பிடித்ததடி

பெ: மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்சநேரம்
என் விழி எங்கும் பூக்காலம்
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே அய்யோ அது எனக்குப் பிடித்ததடா

இரு: எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே அய்யோ பைத்தியமே பிடிக்குதடி

சரணம்-1
========
ஆ: முதன்முறை என் விரல் பூக்கள் பறித்தது தோட்டத்திலே
தலையணை உறையும் ஸ்வீட் ட்ரீம்ஸ் பறித்தது தூக்கத்திலே
காலைத் தேநீர் குழம்பாய் மிதந்தது சோற்றுக்குள்ளே
கிறுக்கன் என்றொரு பெயரும் கிடைத்தது வீட்டுக்குள்ளே

பெ: காதலே ஒருவகை ஞாபக மறதி கண்முன்னே நடப்பது மறந்திடுமே
வவ்வாலைப் போல் நம் உலகம் மாறித் தலைகீழாகத் தொங்கிடுமே
ஓ உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே அய்யோ அது எனக்குப் பிடித்ததடா

ஆ: எடை குறையுதே தூக்கம் தொலையுதே அய்யோ பைத்தியமே பிடிக்கிறதே

சரணம்-2
========
பெ: என் பேர் கேட்டால் உன் பேர் சொன்னேன் பதட்டத்திலே
பக்கத்து வீட்டில் கோலம் போட்டேன் குழப்பத்திலே
காதல் கவிதை வாங்கிப் படித்தேன் கிறக்கத்திலே
ஓ குட்டிப் பூனைக்கு முத்தம் கொடுத்தேன் மயக்கத்திலே
ஊ ஆ ஆ ஊ ஆ ஊ ஆ ஊ ஊ ஆ ரா ரே ரா ரே

ஆ: ஓஓஓ காதலும் ஒருவகை போதைதானே உள்ளுக்குள் வெறியேற்றும் பேய்போல
ஏனிந்தத்தொல்லை என்று தள்ளிப்போனால் புன்னகை செய்துகொஞ்சும் தாய்போல

பெ: உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே அய்யோ அது எனக்குப் பிடித்ததடா
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே அய்யோ பைத்தியமே பிடித்ததடா

ஆ: மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என்முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூக்காலம்

இரு: உடல் கொதிக்குதே உயிர் மிதக்குதே அய்யோ இது எனக்குப் பிடிக்குதடா
எடை குறையுதே தூக்கம் தொலையுதே அய்யோ பைத்தியமே பிடிக்குதடா

ஆ: ஆ ஆ ஆ ஆ .. ஆ ஆ ஆ ஆ..

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 11/08/2007 04:39:00 AM | Permalink | 0 comments
Tuesday, April 24, 2007

படம்: உன்னாலே உன்னாலே
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக், ஹரிணி, கிருஷ்


பல்லவி
========
க்ரிஷ்: முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாகப் பரவசமாக வா வா வா அன்பே
ஓஹோ தனித்தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக வா வா அன்பே
கார்த்திக்: உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே
உன்முன்னே உன்முன்னே மெய்காண நின்றேனே
ஒரு சொட்டுக் கடலும் நீ ஒரு பொட்டு வானம் நீ
ஒரு புள்ளிப் புயலும் நீ பிரம்மித்தேன்
ஓ ஒளிவீசும் இரவும் நீ உயிர்கேட்கும் அமுதம் நீ
இமைமூடும் விழியும் நீ யாசித்தேன்
க்ரிஷ்: முதல் முதலாக முதல் முதலாக...

சரணம்-1
========
கார்த்திக்: ஒரு பார்வையின் நீளத்தை ஒரு வார்த்தையின் ஆழத்தை
தாங்காமல் வீழ்ந்தேனே தூங்காமல் வாழ்ந்தேனே
நதி மீது சருகைப் போல் உன்பாதை வருகின்றேன்
கரைத்தேற்றி விடுவாயோ கதிமோட்சம் தருவாயோ
மொத்தமாய் மொத்தமாய் நான்மாறிப் போனேனே
சுத்தமாய் சுத்தமாய் தூள்தூளாய் ஆனேனே
க்ரிஷ்: முதல் முதலாக முதல் முத்லாக..
கார்த்திக்: உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே
உன்முன்னே உன்முன்னே மெய்காண நின்றேனே

சரணம்-2
========
கார்த்திக்: நீயென்பது மழையாக நானென்பது வெயிலாக
மழையோடு வெயில் சேரும் அந்த வானிலை சுகமாகும்
ஹரிணி: சரியென்று தெரியாமல் தவறென்று புரியாமல்
எதில்வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான்
கார்த்திக்: என்வசம் என்வசம் இரண்டடுக்கு ஆகாயம்
இரண்டிலும் போகுதே என் காதல் கார்மேகம்
பபபபப்பப்ப பபபபப்பப்ப ..


ஹரிணி: உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே
உன்முன்னே உன்முன்னே மெய்காண நின்றேனே
கார்த்திக்: ஒரு சொட்டுக் கடலும் நீ ஒருபொட்டு வானம் நீ
ஒருபுள்ளிப் புயலும் நீ பிரம்மித்தேன்
ஹரிணி: ஒளிவீசும் இரவும் நீ உயிர்கேட்கும் அமுதம் நீ
இமைமூடும் விழியும் நீ யாசித்தேன்

Labels: , , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 4/24/2007 04:08:00 AM | Permalink | 0 comments
Monday, August 07, 2006
படம் : நாளை
பாடியவர் : கார்த்திக்
இசை : கார்த்திக்ராஜா

பல்லவி
======
ஒருமாற்றம் உருமாற்றம்
இரு இதயத்தில் நடக்கிற தடுமாற்றம்
நடைமாற்றம் உடைமாற்றம்
இந்த நெருப்புக்குள் எப்படி நீரோட்டம்
நடந்து போகும் பாதையில் இரண்டுபக்கம் பூமரம்
மழையும் வெயிலும் கலந்தபின் வானவில்லாய் மாறிடும்
உலகமே புதிதாய்த் தோன்றும்

(ஒருமாற்றம் உருமாற்றம்)

சரணம் 1
========
நேற்றுவரை...
நேற்றுவரை வானத்தை நிமிர்ந்துபார்க்க நேரமில்லை
கண்கள்மூடிப் பார்த்தாலும் கனவுகள் கண்டதில்லை
முற்றுப்புள்ளி பக்கத்திலே முகவரி ஒன்று வருகிறதே
மூச்சுக்காற்று மொத்தத்திலே அர்த்தம் இன்று புரிகிறதே
புரிகிறதே ஓ ஓ ஓ ஓ

(ஒருமாற்றம் உருமாற்றம்)

சரணம் 2
========
பூமியிலே...
பூமியிலே யாருமிங்கு தனியாகப் பிறப்பதில்லை
வழித்துணைகள் வருகையிலே பயணங்கள் மறப்பதில்லை
கட்டாந்தரையில் இன்று ஒரு காலடிச்சுவடு தெரிகிறதே
வெட்டவெளியில் திரிந்தபின்னே வீட்டின் அருமை புரிகிறதே
புரிகிறதே ஓ ஓ ஓ ஓ

(ஒருமாற்றம் உருமாற்றம்)

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/07/2006 12:26:00 AM | Permalink | 2 comments