Tuesday, August 14, 2007
படம்: உன்னாலே உன்னாலே
பாடியவர்கள்: ஹரிசரண், மதுஸ்ரீ
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்: பா.விஜய்

பல்லவி
======

ஆ: வைகாசி நிலவே வைகாசி நிலவே
மைபூசி வைத்திருக்கும் கண்ணில் நீ
பொய்பூசி வைத்திருப்பதென்ன
பெ: வெட்கத்தை உடைத்தாய் கைக்குள்ளே அடைத்தாய்
தண்ணீரை ஊற்று குளிர்ந்திட நான்
தள்ளாடித் தத்தளிக்கும் நேரம்
ஆ: விழியில் இரண்டு விலங்கு இருக்கு
அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு
என் ஜீவன் வாழும்வரை ஓ..
என் செய்வாய் நாளும் எனை ( வைகாசி நிலவே)

சரணம்-1
=======

ஆ: தூவானம் எனத் தூறல்கள் விழத்
தப்பான எண்ணம் நெஞ்சில் ததும்பிடுதே
பெ: கண்ணா நீ பொறு கட்டுக்குள் இரு
காதல் கைகூடட்டும்
அ: இதோ எனக்காக விரிந்தது இதழ் எடுக்கவா தேனே
பெ: கனி எதற்காகக் கனிந்தது அணில் கடித்திடத் தானே
அ: ஹோ.. காலம் நேரம் பார்த்துக் கொண்டா
காற்றும் பூவும் காதல் செய்யும்

ஆ: வைகாசி நிலவே..
பெ: ஹோ.. வெட்கத்தை உடைத்தாய்..

சரணம்-2
========

ஆ: நூலாடை என மேலாடை எனப்
பாலாடை மேனி மீது படரட்டுமா
பெ: நான் என்ன சொல்ல நீ என்னை மெல்லத்
தீண்டித் தீ வைக்கிறாய்
ஆ: அனல் கொதித்தாலும் அணைத்திடும் புனல் அருகினில் உண்டு
பெ: நனை நெருப்பாக இருக்கையில் எனைத் தவிப்பது கண்டு
ஆ: ஹோ.. மோகத்தீயும் தேகத் தீயும்
தீர்த்தம் பார்த்துத் தீராதம்மா

ஆ: வைகாசி நிலவே..
பெ: ஹோ.. வெட்கத்தை உடைத்தாய்..
ஆ: விழியில் இரண்டு விலங்கு இருக்கு
பெ: அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு
ஹோ. என் ஜீவன் வாழும் வரை
என் செய்வாய் நாளும் எனை (என் ஜீவன்).

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/14/2007 08:22:00 AM | Permalink | 2 comments
Tuesday, April 24, 2007

படம்: உன்னாலே உன்னாலே
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக், ஹரிணி, கிருஷ்


பல்லவி
========
க்ரிஷ்: முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாகப் பரவசமாக வா வா வா அன்பே
ஓஹோ தனித்தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக வா வா அன்பே
கார்த்திக்: உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே
உன்முன்னே உன்முன்னே மெய்காண நின்றேனே
ஒரு சொட்டுக் கடலும் நீ ஒரு பொட்டு வானம் நீ
ஒரு புள்ளிப் புயலும் நீ பிரம்மித்தேன்
ஓ ஒளிவீசும் இரவும் நீ உயிர்கேட்கும் அமுதம் நீ
இமைமூடும் விழியும் நீ யாசித்தேன்
க்ரிஷ்: முதல் முதலாக முதல் முதலாக...

சரணம்-1
========
கார்த்திக்: ஒரு பார்வையின் நீளத்தை ஒரு வார்த்தையின் ஆழத்தை
தாங்காமல் வீழ்ந்தேனே தூங்காமல் வாழ்ந்தேனே
நதி மீது சருகைப் போல் உன்பாதை வருகின்றேன்
கரைத்தேற்றி விடுவாயோ கதிமோட்சம் தருவாயோ
மொத்தமாய் மொத்தமாய் நான்மாறிப் போனேனே
சுத்தமாய் சுத்தமாய் தூள்தூளாய் ஆனேனே
க்ரிஷ்: முதல் முதலாக முதல் முத்லாக..
கார்த்திக்: உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே
உன்முன்னே உன்முன்னே மெய்காண நின்றேனே

சரணம்-2
========
கார்த்திக்: நீயென்பது மழையாக நானென்பது வெயிலாக
மழையோடு வெயில் சேரும் அந்த வானிலை சுகமாகும்
ஹரிணி: சரியென்று தெரியாமல் தவறென்று புரியாமல்
எதில்வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான்
கார்த்திக்: என்வசம் என்வசம் இரண்டடுக்கு ஆகாயம்
இரண்டிலும் போகுதே என் காதல் கார்மேகம்
பபபபப்பப்ப பபபபப்பப்ப ..


ஹரிணி: உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே
உன்முன்னே உன்முன்னே மெய்காண நின்றேனே
கார்த்திக்: ஒரு சொட்டுக் கடலும் நீ ஒருபொட்டு வானம் நீ
ஒருபுள்ளிப் புயலும் நீ பிரம்மித்தேன்
ஹரிணி: ஒளிவீசும் இரவும் நீ உயிர்கேட்கும் அமுதம் நீ
இமைமூடும் விழியும் நீ யாசித்தேன்

Labels: , , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 4/24/2007 04:08:00 AM | Permalink | 0 comments