Monday, September 29, 2008
படம்: வாரணம் ஆயிரம்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர்,  பிரசாந்தினி
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்: தாமரை

பல்லவி
========

சூர்யா: Hai Malini .. I am Krishnan..
        நான் இதை  சொல்லியே ஆகணும்.. நீ அவ்வளவு அழகு
        இங்க எவனும் இவ்ளோ அழகா ஒரு ப்ச்..
         இவ்ளோ அழகைப் பாத்திருக்க மாட்டாங்க..
        And I am in love with you...

ஆ: முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே
        சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
        இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
        எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே
        வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா
        இப்போழ்தே என்னோடு வந்தாலென்ன‌
        ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன  (இப்போழ்தே)
       (முன் தினம் பார்த்தேனே..)

சரணம் 1
========

ஆ: காதலே.. சுவாசமே..

ஆ: துலாத் தட்டில் உன்னை வைத்து
        நிகர் செய்ய பொன்னை வைத்தால்
       துலாபாரம் தோற்காதோ பேரழகே
பெ: முகம் பார்த்துப் பேசும் உன்னை
       முதல் காதல் சிந்தும்  கண்ணை
      அணைக்காமல் போவேனோ ஆருயிரே
ஆ: ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
       புகை போல படாமல் பட்டு நகர்வேனடி
       வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி

பெ: முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே..
        சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
        இத்தனை நாளாக
ஆ: oh my love
பெ: உன்னை நான் பாராமல்
ஆ: yes my love
பெ:  எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே

சரணம் 2
========

பெ: கடல் நீலம் மங்கும் நேரம்
         அலை வந்து தீண்டும் தூரம்
        மனம் சுத்தம் ஆகாதா ஈரத்திலே
ஆ: தலை சாய்க்கத் தோளும் தந்தாய்
       விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்
       இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே
பெ: பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
         உயிரெங்கும் உதயம் கண்டேன் நெருங்காமலே
         உனையன்றி எனக்கு ஏது எதிர்காலமே

ஆ: முன் தினம் பார்த்தேனெ பார்த்ததும் தோற்றேனே..

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 9/29/2008 11:45:00 PM | Permalink | 6 comments
Tuesday, September 09, 2008
படம்: ராமன் தேடிய சீதை
பாடியவர்கள்: மதுபாலகிருஷ்ணன், ஹரிணி
இசை: வித்யாசாகர்

பல்லவி
=======

பெ: ம்ஹீம் ஹீம் ஹீம் ஹீம் ஹீம்
ஆ: இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
பெ: ஹீம் ஹீம் ஹீம்
ஆ: இப்பவே இப்பவே பேசணும் இப்பவே
பெ: ஹீம் ஹீம் ஹீம்
ஆ: கண்ணை மூடி உன்னைக் கண்டால் அப்பவே அப்பவே
கைவளையல் ஓசை கேட்டால் அப்பவே அப்பவே
ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே
பெ: இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
ஆ: இப்பவே இப்பவே பேசணும் இப்பவே

சரணம் 1
=======

ஆ: வெள்ளச் சேதம் வந்தால் கூட தப்பிக் கொள்ளலாம்
உள்ளச் சேதம் வந்து விட்டால் என்ன செய்வது
பெ: முள்ளைக் காலில் ஏற்றிக் கொண்டால் ரத்தம் மட்டும் தான்
உன்னை நெஞ்சில் ஏற்றிக் கொண்டேன் நித்தம் யுத்தம் தான்
ஆ: சொல்லித் தீரா இன்பம் கண்டு எந்தன் நெஞ்சு கூத்தாட‌
பெ: மின்னல் கண்ட தாழை போல உன்னால் நானும் பூத்தாட‌
ஆ: உன்னைக் கண்டேன் என்னைக் காணோம்
என்னைக் காண உன்னை நானும்
பெ: இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே

சரணம் 2
=======

ஆ: எந்தன் வாழ்வில் வந்ததின்று நல்ல திருப்பம்
இனி உந்தன் கையைப் பற்றிக் கொண்டே செல்ல விருப்பம்
பெ: நெஞ்ச வயல் எங்கும் உன்னை நட்டு வைக்கிறேன்
நித்தம் அதில் காதல் உரம் இட்டு வைக்கிறேன்
ஆ: உன்னைக் காண நானும் வந்தால் சாலை எல்லாம் பூஞ்சோலை
பெ: உன்னை நீங்கிப் போகும் நேரம் சோலை கூடத் தார்ப்பாலை
ஆ: மண்ணுக்குள்ளே வேரைப் போலே நெஞ்சுக்குள்ளே நீதான் நீதான்

பெ: இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
ஆ: இப்பவே இப்பவே பேசணும் இப்பவே
பெ: கண்ணுக்குள்ள‌ உன்னைக் கண்ட அப்பவே அப்பவே
ஆ: கைவளையல் ஓசை கேட்ட அப்பவே அப்பவே
பெ: ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 9/09/2008 12:50:00 AM | Permalink | 0 comments