Friday, August 29, 2008
படம்: சங்கமம்
பாடல்: வைரமுத்து
பாடியவர்கள்:  ஹரிஹரன், எம். எஸ். விஸ்வநாதன்
இசை: ஏ. ஆர். ரஹ்மான்

பல்லவி
=======

ஆ: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
       மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
       உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
      உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
      (மழைத்துளி மழைத்துளி..)
      ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க‌
       என்ன ஆடாம ஆட்டி வைச்ச வணக்கமுங்க‌
       என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
       என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைகள் வெல்லும் வரைக்கும்
       (என் காலுக்கு சலங்கையிட்ட)
      நீ உண்டு உண்டு என்றபோதும் அட இல்லை இல்லை என்றபோதும்
     சபை ஆடிய பாதமய்யா அது நிக்காது ஒருபோதும்

       (ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா)

      (மழைத்துளி மழைத்துளி...)

சரணம் 1
========

ஆ: தண்ணியில மீனழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்லை
       எனக்குள்ள நானழுதா துடைக்கவே எனக்கொரு நாதியில்ல‌
       என் கண்ணீ் ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரமாகுமே
       சபதம் சபதம் என்றே சலங்கை பாடுமே
        ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
      மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு
     விழியே விழியே இமையே தீயும் போதும் கலங்காதிரு
     கங்கை நதி அத்தனையும் கடலில் சங்கமம்
     நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம்
     கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்

     (மழைத்துளி மழைத்துளி...)

   (ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா)


சரணம் 2
========

(எம். எஸ். விஸ்வநாதன்)
ஆ:  தந்தான தந்தானனா..
        மழைக்காகத் தான் மேகம்  அட கலைக்காகத் தான் நீயும்
         உயிர்  கலந்தாடுவோம் நாளும் மகனே வா
         நீ சொந்தக் காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை வெல்லு
        இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா மகனே வா
         ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்
         தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்

        புலிகள் அழுவது ஏது  அட பறவையும் அழ அறியாது
        போர்க்களம் நீ புகும்போது முள் தைப்பது கால் அறியாது

         மகனே மகனே காற்றுக்கு ஓய்வென்பது ஏது அட ஏது
         கலைக்கொரு தோல்வி கிடையாது கிடையாது

ஹரி: ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க‌
விஸ்: என்னை ஆடாம ஆட்டி வெச்ச வணக்கமுங்க‌
ஹரி: என் காலுக்குச் சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல்வணக்கம்
விஸ்: என் கால் நடமாடுமையா நம்ம கட்டளைகள் வெல்லும்வரைக்கும்
ஹரி: நீ உண்டு உண்டு என்ற போதும்
விஸ்: நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்ற போதும்
              சபை ஆடிய பாதமையா அது நிக்காது ஒருபோதும்

ஹரி: மழைத்துளி மழைத்துளி...

Labels: , , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/29/2008 07:06:00 AM | Permalink |


2 Comments:


At Monday, October 31, 2011 5:17:00 AM, Blogger Ravi chandran

very useful and motivation.Thank u.

 

At Monday, October 31, 2011 5:19:00 AM, Blogger Ravi chandran

In my system i have installed BAMINI tamil font.So i not able to save sangamam lyrics. so will u guide me how i copy and paste in word.
Thank you.pls continue your good job.