Sunday, March 09, 2008
படம்: இன்பா
பாடியவர்: கார்த்திக், சின்மயி
இசை: பாலாஜி பி.பி.

பல்லவி
======
ஆ: யாரோ யாரோ எந்த‌ன் நெஞ்சைத் தொட்டுப் போக‌
   மேகத்துக்குள் மூழ்கி விட்டேன் நானே
   யாரோ யாரோ எந்தன் கண்ணுரசிப் போக‌
   அந்தரத்தில் தொங்குகிறேன் நானே
   ஒரு நிமிடத்தில் என் இதயத்தில்
   அட நூறு மைல் வேகத்திலே நுழைந்தாள்
   ஒரு புன்னகை ஒரு கண்ணிமை 
   என் வானத்தையே இரண்டங்குலம் திறந்தாள்
   
   காதலிக்கிறேன் முதல் தடவை 
   காத்திருக்கிறேன் பல தடவை
   மூச்சு வழியாய் உள்புகுந்தாள் 
   இன்று வரையில் திரும்பவில்லை (காதலிக்கிறேன்..)
    (யாரோ யாரோ எந்த‌ன் ...)

சர‌ண‌ம் 1
=======
பெ: வ‌குப்பின் முடிவில் க‌ண்க‌ள் இர‌ண்டை ச‌ந்திக்கின்ற‌ சிறு நேர‌ம்
   அந்த‌ நொடிக்காய் காலை தொட‌ங்கிக் காத்திருக்கும் ம‌ன‌ம் பாவ‌ம்
ஆ: ஜ‌ன்ன‌லருகே ச‌ரியும் கூந்த‌ல் மேஜைக‌ளைத் த‌ழுவாதா
   மேஜை க‌ட‌ந்து அந்த‌ ஸ்ப‌ரிச‌ம் எந்த‌ன் விர‌ல் அறியாதா
   வ‌ந்து விடுவாள் நெஞ்சைத் தொடுவாள்
   என்ற நினைவில் நானும் ந‌ட‌ந்தேன் (யாரோ யாரோ)

பெ: காதலிக்கிறேன் முதல் தடவை 
    காத்திருக்கிறேன் பல தடவை
    மூச்சு வழியாய் உள்புகுந்தான்
    இன்று வரையில் திரும்பவில்லை

ச‌ர‌ண‌ம் 2
======
பெ: நீ என் விரலானாய் வ‌ருடும் நேர‌மே 
    நான் உன் இமையானேன் உற‌ங்கும் கால‌மே
ஆ: தேவ‌தைக‌ள் த‌ரை வ‌ந்து ந‌ட‌க்கும் நேரில் வ‌ந்து உத‌டுக‌ள் கொடுக்கும்
    உன் வ‌ருகை உண‌ர்த்திய‌து என‌க்கு ந‌டுவில் இந்தத் த‌ய‌க்கமும் எத‌ற்கு
பெ: உன் நேச‌த்தில் கைதாகிறேன் உன் பார்வையில் பெண்ணாகிறேன்
    உன் தோள்க‌ளில் குடைசாய்கிறேன் உன் வீட்டில் தான் நான் வாழ்கிறேன்

ஆ: யாரோ யாரோ என் நெஞ்சைத் தொட்டுப்போக‌..

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 3/09/2008 08:12:00 AM | Permalink |


0 Comments: