Wednesday, October 31, 2007

படம்: சந்திரலேகா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: அருண்மொழி, <பெண் பாடகி பெயர் தெரிந்தால் சொல்லுங்களேன்>
எழுதியவர்: <தங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்>


பல்லவி
========
ஆ: அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித்தூய்மையே
மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப்பாவையே
வானாடும் மீனே நீதானே வேண்டும்
ஊனாடும் உயிரே நீதானே வேண்டும்

பெ: அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித்தூய்மையே
அரும்பும் தளிரே

சரணம்-1
========
ஆ: இனிமையான பொன்மாலை வேளை வளையோசை தூது வந்ததே
இளையராணி வரும் நேரம் என்று இனிப்பான சேதி சொன்னதே
பெ: பூமாலை நீ சூடவே பாவையாய் மண்ணில் தோன்றினேன்
ஆ: என் ஜீவன் நீயாகவே எனதெல்லை நானும் தாண்டினேன்
பெ: வானம் பூமி வாழும் காலம் நானும் நீயும் வாழலாம்

ஆ: அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித்தூய்மையே
மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப்பாவையே
வானாடும் மீனே நீதானே வேண்டும்
ஊனாடும் உயிரே நீதானே வேண்டும்


சரணம்-2
=========
பெ: தலைவனாக நீ வேண்டும் என்று திருக்கோவில் தீபம் ஏற்றினேன்
விளக்கு வைத்து உன் பேரைச் சொல்லிக் குழல் மீது பூவைச் சூடினேன்
ஆ: தேனாற்றில் நீராடவே தேடினேன் தேடி வாடினேன்
பெ: நான் சூடும் நூலாடையாய் உனைத்தானே நாளும் சூடினேன்
ஆ: ராஜராஜன் கூடும் போது ராஜயோகம் வாய்த்தது

பெ: அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித்தூய்மையே
மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப்பாவையே
வானாடும் மீனே நீதானே வேண்டும்
ஊனாடும் உயிரே நீதானே வேண்டும்

ஆ: அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித்தூய்மையே
அரும்பும் தளிரே

நன்றி: இப்பாடலை எனக்கு அறிமுகம் செய்த நண்பர் யோகேஷ் பிரபுவுக்கும், இதனைத் தரவிறக்கம் செய்யும் சுட்டியை இப்பாடல் இருக்கும் எனத் தெரியாமலே அனுப்பிய நண்பன் தனஞ்செயனுக்கும்.

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 10/31/2007 05:25:00 AM | Permalink |


0 Comments: