Wednesday, September 12, 2007

படம்: ரோஜா
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல்: வைரமுத்து
பாடியவர்கள்: உன்னிமேனன், சுஜாதா

பல்லவி
======

பெ: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
ஆ: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
பெ: நதி நீர் நீயானால் கரை நானே
சிறு பறவை நீயானால உன் வானம் நானே
ஆ: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெ: இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

சரணம் 1
=======

ஆ: பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூக்கேட்பதில்லை
பெ: பெண் இல்லாத ஊரிலே கொடி தான் பூப்பூப்பதில்லை
ஆ: உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது
பெ: இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார்சொன்னது

ஆ: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெ: இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
ஆ: இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
பெ: மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
ஆ: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெ: இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

ச‌ரணம் 2
========

பெ: நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப்பூ திடுக்கென்று மலரும்
ஆ: நீ வெடுக்கென்று ஓடினால் உயிர்ப்பூ சருகாக உலரும்
பெ: இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ
ஆ: மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா எந்தன் மார்போடு வந்தாடுதோ

பெ: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
ஆ: இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
பெ: இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
ஆ: மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
பெ: நதி நீர் நீயானால் கரை நானே
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே

ஆ: புது வெள்ளை மழை பெ: இங்கு பொழிகின்றது
ஆ: இந்தக் கொள்ளை நிலா பெ: உடல் நனைகின்றது

ஆ: புது வெள்ளை மழை பெ: இங்கு பொழிகின்றது
ஆ: இந்தக் கொள்ளை நிலா பெ: உடல் நனைகின்றது

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 9/12/2007 12:15:00 AM | Permalink |


0 Comments: