Wednesday, November 21, 2007
 
படம்: உன்னுடன்
இசை: தேவா
பாடியவர்: ஹரிஹரன்
பாடல்: வைரமுத்து
 
பல்லவி
=======
ஆ: கோபமா என் மேல் கோபமா
      பேசம்மா ஒரு மொழி பேசம்மா
      என் பாலைவனத்தில் உந்தன் பார்வை ஆறு வந்து பாய்ந்திடுமா
      உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன் ஜீவன் மெல்ல ஓய்ந்திடுமா
      உள்ளுயிரே உருகுதம்மா
பெ: ஆ ஆ ஆ
ஆ: கோபமா என் மேல் கோபமா...
 
சரணம் 1
==========
ஆ: உன் பார்வை வடிக்கின்ற பாலொளியில் என் வானம் விடியுமடி
     உன் பாதம் படிகின்ற சிறுதுகளில் என் ஆவி துடிக்குதடி
     கோபமா என் மேல் கோபமா
     என் மார்பு கீறடி பெண்ணே அதில்
     உன் முகம் தோன்றிடும் கண்ணே (என் மார்பு கீறடி)
     கண்கள் சாமரம் வீசிடுமா இல்லை
     காயத்தில் கத்தி வீசிடுமா
 
     (கோபமா என் மேல் கோபமா..)
 
சரணம் 2
==========
பெ: ஆ ஆ ஆ
ஆ: நான் கண்களைத் தொலைத்துப் பிறந்திருந்தால் இந்தக் காதல் துயரமில்லை
      நீ இன்னொரு கிரகத்தில் பிறந்திருந்தால் இந்த ஏக்கம் சிறிதுமில்லை
      கோபமா என் மேல் கோபமா
      என் கண்ணில் ஏனடி வந்தாய் என்
      காற்றை நீ கொள்ளை கொண்டாய் (என் கண்ணில்)
      மெளனங்கள் மொழிகளின் வேஷமம்மா
      மறு மொழி ஒன்று பேசிடம்மா

      கோபமா ஒரு மொழி பேசம்மா

      என் பாலைவனத்தில் உந்தன் பார்வை ஆறு வந்து பாய்ந்திடுமா
      உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன் ஜீவன் மெல்ல ஓய்ந்திடுமா
      உள்ளுயிரே உருகுதம்மா
     (கோபமா என் மேல் கோபமா...)
 

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 11/21/2007 05:57:00 AM | Permalink |


0 Comments: