Wednesday, August 27, 2008
படம்: பிரதாப்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா
இசை:

பல்லவி
=======
=
குழு: தனனா      பெ: ஆஹா ஆ ஆ
குழு: தனனா தனனா தனனா தனனா
பெ: ஆ ஆ ஆ      குழு:  தனனா தனனா
பெ: என் கண்ணனுக்குக் காதல் வந்தனம்
ஆ: என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்
பெ: என் பெண்மை எல்லம் உந்தன் சீதனம்
ஆ: உன் சீதனங்கள் என்ன நூதனம்
பெ: முடியவில்லை காதல் க‌ண்ணா  மோக நர்த்தனம்
         விடிய விடியக் கேட்குதையா உனது கீர்த்தனம்
ஆ:  சொர்க்கம் தாண்டிச் செல்லுமம்மா எனது சொப்பனம்
        போகப் போகக் காண வேண்டும் புதிய தரிசனம்

குழு: தனனா
பெ: என் கண்ணனுக்குக் காதல் வந்தனம்
குழு: தனனா
ஆ: என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்

சரணம் 1
========

குழு: தானனா தஜிம் தஜீம் தஜீம் ஜீம்
பெ: தானன த‌ந்தானன தஜீம் தஜீம்
ஆ: தஜீம் தஜீம்
பெ: ஓ காதல் கண்ணாளா இன்று என்ன பொன்னாளா
       நீ மறந்து கையோடு கை சேர்க்கும் காதல் விழா
ஆ: ஓ கன்னிப் புறாவே கால் முளைத்த நிலாவே
       மெல்ல மெல்ல உன் பேரைச் சொன்னாலும் வாய் ஊறுதே
பெ: மல்லிகை மொட்டை மன்னவன் வந்து கிள்ளி முடித்தானே
ஆ: மன்மதன் என்னை வந்திடச் சொல்லித் தந்தி அடித்தானே
பெ: வல்லவனே
குழு: தந்தனனா
பெ: நல்லவனே
          கட்டிலில் ஆயிரம் கட்டளை இட்டவனே

குழு: தனனா
பெ: என் கண்ணனுக்கு காதல் வந்தனம்
குழு: தனனா
ஆ: என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்
பெ: முடியவில்லை காதல் கண்ணா மோக நர்த்தனம்
ஆ: போகப் போகக் காண வேண்டும் புதிய தரிசனம்

சரணம் 2
=========

ஆ: ஓ ராஜகுமாரி ரகசிய சிருங்காரி
       மெல்ல எந்தன் காதோடு நீ பாடு கான‌ல் வரி
பெ: ஓ தேவ குமாரா கண்மயங்கும் சிங்காரா
        உன்னிரண்டு தோளோடு உறவாடும் காதல் புறா
ஆ: கட்டில் அறையில் கண்ணு முழிச்சா சொர்க்கம் கிட்டுமடி
பெ: அத்தானுக்கு அந்த விஷயம் எல்லாம் அத்துப்படி
ஆ: கட்டிப்புடி
குழு: தந்தனனா
ஆ: தொட்டுப் படி
       மூன்றாம் பாலில் முன்னோர் சொன்னபடி

பெ: என் கண்ணனுக்குக் காதல் வந்தனம்
ஆ: என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்
பெ: என் பெண்மை எல்லாம் உந்தன் சீதனம்
ஆ: உன் சீதனங்கள் என்ன நூதனம்
பெ: முடியவில்லை காதல் கண்ணா மோக நர்த்தனம்
        விடிய விடியக் கேட்குதையா உனது கீர்த்தனம்
ஆ: சொர்க்கம் தாண்டிச் செல்லுமம்மா எனது சொப்பனம்
        போகப் போகக் காண வேண்டும் புதிய தரிசனம்

பெ: லல லால‌லா லால்லா லால்லா லா
ஆ: லா லலல்ல‌லா லால‌ல்லா லால்லா லாலா

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/27/2008 03:06:00 AM | Permalink |


0 Comments: