Monday, December 30, 2013
படம்: பூமணி
பாடல்:
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, சுஜாதா


சரணம்
========
பெ: தோள் மேல தோள் மேல பூமால பூமால
     கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால
ஆ: தோள் மேல தோள் மேல பூமாலை பூமாலை
     கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால
பெ: ஓ மைனா மைனா இது உண்மை தானா
     அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில் தானா
     ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே
ஆ:  தோள் மேல தோள் மேல பூமாலை பூமாலை
     கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால
பெ: தோள்மேல தோள் மேல பூமாலை பூமாலை
     கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால

பல்லவி 1
==========

பெ: செந்தாழம் பூக்களே என் கூந்தல் சூடவா
     சந்தோஷ நாட்களே என் வாசல் தேடிவா
ஆ: சொல்லாத ஆசைகள் என்னென்ன சொல்லவா
     நூறாண்டுக் காதலை ஓராண்டில் வாழவா
பெ: ஆகாய கங்கையே என் தாகம் தீர்க்கவா
     தாயாகி உன்னை நான் தாலாட்டிப் பார்க்கவா
ஆ: நீ அணைக்கும் அன்பிலே அன்பிலே
     நான் கரைந்தேன் உன்னிலே உன்னிலே
பெ: துள்ளுதே துள்ளுதே என் மனம் விண்ணிலே


ஆ: தோள் மேல தோள் மேல பூமால பூமால
     கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால
    ஓ மைனா மைனா இது உண்மை தானா
     அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில் தானா
     ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே
பெ:
தோள் மேல தோள் மேல பூமால பூமால
     கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால


பல்லவி 2
==========
ஆ: பூவுக்கு வாசனை  யாரிங்கு தந்தது
     நேசங்கள் என்பது நெஞ்சோடு உள்ளது
பெ: என் பெண்மை இன்று தான் பூச்சூடிக் கொண்டது
     என் கோவில் இன்று தான் தீபங்கள் கண்டது
ஆ: உன் நெஞ்சில் வாழவே ஒரு ஜென்மம் வாங்கினேன்
     உன் மூச்சில் தானடி நான் இன்னும் வாழ்கிறேன்
பெ: நான் இருந்தேன் வானிலே மேகமாய்
     ஏன் விழுந்தேன் பூமியில் வேகமாய்
ஆ: வீழ்ந்த்தும் நல்லதே தாகமாய் உள்ளதே

பெ: தோள் மேல தோள் மேல பூமால பூமால
ஆ: கலந்ததிங்கு யாரால காமனவன் பேரால
பெ: ஓ மைனா மைனா இது உண்மை தானா
ஆ: அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில் தானா
பெ: ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே

ஆ: தோள் மேல தோள் மேல பூமால பூமால
பெ: கலந்ததிங்கு யாரால காமனவன் பேரால

 --- மு. இராகவன் என்ற சரவணன்
    30 திசம்பர் 2013 திங்கள் மாலை 5 49 மணி இந்திய நேரப்படி
     சிபிடி பேலாபூர், நவி மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 12/30/2013 05:52:00 AM | Permalink | 0 comments
Wednesday, August 27, 2008
படம்: பிரதாப்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா
இசை:

பல்லவி
=======
=
குழு: தனனா      பெ: ஆஹா ஆ ஆ
குழு: தனனா தனனா தனனா தனனா
பெ: ஆ ஆ ஆ      குழு:  தனனா தனனா
பெ: என் கண்ணனுக்குக் காதல் வந்தனம்
ஆ: என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்
பெ: என் பெண்மை எல்லம் உந்தன் சீதனம்
ஆ: உன் சீதனங்கள் என்ன நூதனம்
பெ: முடியவில்லை காதல் க‌ண்ணா  மோக நர்த்தனம்
         விடிய விடியக் கேட்குதையா உனது கீர்த்தனம்
ஆ:  சொர்க்கம் தாண்டிச் செல்லுமம்மா எனது சொப்பனம்
        போகப் போகக் காண வேண்டும் புதிய தரிசனம்

குழு: தனனா
பெ: என் கண்ணனுக்குக் காதல் வந்தனம்
குழு: தனனா
ஆ: என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்

சரணம் 1
========

குழு: தானனா தஜிம் தஜீம் தஜீம் ஜீம்
பெ: தானன த‌ந்தானன தஜீம் தஜீம்
ஆ: தஜீம் தஜீம்
பெ: ஓ காதல் கண்ணாளா இன்று என்ன பொன்னாளா
       நீ மறந்து கையோடு கை சேர்க்கும் காதல் விழா
ஆ: ஓ கன்னிப் புறாவே கால் முளைத்த நிலாவே
       மெல்ல மெல்ல உன் பேரைச் சொன்னாலும் வாய் ஊறுதே
பெ: மல்லிகை மொட்டை மன்னவன் வந்து கிள்ளி முடித்தானே
ஆ: மன்மதன் என்னை வந்திடச் சொல்லித் தந்தி அடித்தானே
பெ: வல்லவனே
குழு: தந்தனனா
பெ: நல்லவனே
          கட்டிலில் ஆயிரம் கட்டளை இட்டவனே

குழு: தனனா
பெ: என் கண்ணனுக்கு காதல் வந்தனம்
குழு: தனனா
ஆ: என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்
பெ: முடியவில்லை காதல் கண்ணா மோக நர்த்தனம்
ஆ: போகப் போகக் காண வேண்டும் புதிய தரிசனம்

சரணம் 2
=========

ஆ: ஓ ராஜகுமாரி ரகசிய சிருங்காரி
       மெல்ல எந்தன் காதோடு நீ பாடு கான‌ல் வரி
பெ: ஓ தேவ குமாரா கண்மயங்கும் சிங்காரா
        உன்னிரண்டு தோளோடு உறவாடும் காதல் புறா
ஆ: கட்டில் அறையில் கண்ணு முழிச்சா சொர்க்கம் கிட்டுமடி
பெ: அத்தானுக்கு அந்த விஷயம் எல்லாம் அத்துப்படி
ஆ: கட்டிப்புடி
குழு: தந்தனனா
ஆ: தொட்டுப் படி
       மூன்றாம் பாலில் முன்னோர் சொன்னபடி

பெ: என் கண்ணனுக்குக் காதல் வந்தனம்
ஆ: என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்
பெ: என் பெண்மை எல்லாம் உந்தன் சீதனம்
ஆ: உன் சீதனங்கள் என்ன நூதனம்
பெ: முடியவில்லை காதல் கண்ணா மோக நர்த்தனம்
        விடிய விடியக் கேட்குதையா உனது கீர்த்தனம்
ஆ: சொர்க்கம் தாண்டிச் செல்லுமம்மா எனது சொப்பனம்
        போகப் போகக் காண வேண்டும் புதிய தரிசனம்

பெ: லல லால‌லா லால்லா லால்லா லா
ஆ: லா லலல்ல‌லா லால‌ல்லா லால்லா லாலா

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/27/2008 03:06:00 AM | Permalink | 0 comments
Monday, August 18, 2008
படம்: பரட்டை என்கிற அழகுசுந்தரம்
பாடியவர்: முகமது அஸ்லாம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா

பல்லவி
========‍‍

ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் உன் கருவில்
மகனாகும் வரம் வேண்டும் தாயே
என் கடவுள் என் உலகம் நீயே
என் கடவுள் என் உலகம் நீயே

 (ஏழேழு ஜென்மம்..)

சரணம் 1
=========

தாய் பேசிடும் ஓர் வார்த்தை நாம்
விழுந்தாலும் நமைத் தாங்கும் தூணல்லவா
தாய் வீசிடும் ஓர் பார்வை தான்
நம் காயங்கள் குணமாக்கும் மருந்தல்லவா
ஊர் கண்கள் பட்டால் விரல் முறித்து நெறிப்பாள்
வெயில் உன்னை சுட்டால் சூரியனை எரிப்பாள்
மழைக்காலம் வந்தாலுமே முந்தானை குடையாகுமே

(ஏழேழு ஜென்மம்..)

சரணம் 2
=========

தேகம் இது தாய் தந்தது தாய்
இல்லாத நிமிடங்கள் நோய் தந்தது
தூரம் நம்மைப் பிரித்தாலுமே தாய்
நினைக்கின்ற நேரத்தில் புரை ஏறுது
தாய் அன்பில் தானே சுயநலங்கள் இல்லை
தாய் தொலைந்த வழியில் கால்தடங்கள் இல்லை
சொர்க்கங்கள் எங்குள்ளது தாய்மடியில் தானுள்ளது

(ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் ..)

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/18/2008 03:37:00 AM | Permalink | 0 comments
Thursday, November 08, 2007

படம்: பொல்லாதவன்
இசை: ஜி.வி. பிரகாஷ் ('வெயில்' பட இசையமைப்பாளர்)
பாடியவர்கள்: கார்த்திக், பாம்பே ஜெயஸ்ரீ


பல்லவி
=======
ஆ: மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்சநேரம்
என் விழி எங்கும் பூக்காலம்
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே அய்யோ அது எனக்குப் பிடித்ததடி
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே அய்யோ பைத்தியமே பிடித்ததடி

பெ: மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்சநேரம்
என் விழி எங்கும் பூக்காலம்
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே அய்யோ அது எனக்குப் பிடித்ததடா

இரு: எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே அய்யோ பைத்தியமே பிடிக்குதடி

சரணம்-1
========
ஆ: முதன்முறை என் விரல் பூக்கள் பறித்தது தோட்டத்திலே
தலையணை உறையும் ஸ்வீட் ட்ரீம்ஸ் பறித்தது தூக்கத்திலே
காலைத் தேநீர் குழம்பாய் மிதந்தது சோற்றுக்குள்ளே
கிறுக்கன் என்றொரு பெயரும் கிடைத்தது வீட்டுக்குள்ளே

பெ: காதலே ஒருவகை ஞாபக மறதி கண்முன்னே நடப்பது மறந்திடுமே
வவ்வாலைப் போல் நம் உலகம் மாறித் தலைகீழாகத் தொங்கிடுமே
ஓ உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே அய்யோ அது எனக்குப் பிடித்ததடா

ஆ: எடை குறையுதே தூக்கம் தொலையுதே அய்யோ பைத்தியமே பிடிக்கிறதே

சரணம்-2
========
பெ: என் பேர் கேட்டால் உன் பேர் சொன்னேன் பதட்டத்திலே
பக்கத்து வீட்டில் கோலம் போட்டேன் குழப்பத்திலே
காதல் கவிதை வாங்கிப் படித்தேன் கிறக்கத்திலே
ஓ குட்டிப் பூனைக்கு முத்தம் கொடுத்தேன் மயக்கத்திலே
ஊ ஆ ஆ ஊ ஆ ஊ ஆ ஊ ஊ ஆ ரா ரே ரா ரே

ஆ: ஓஓஓ காதலும் ஒருவகை போதைதானே உள்ளுக்குள் வெறியேற்றும் பேய்போல
ஏனிந்தத்தொல்லை என்று தள்ளிப்போனால் புன்னகை செய்துகொஞ்சும் தாய்போல

பெ: உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே அய்யோ அது எனக்குப் பிடித்ததடா
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே அய்யோ பைத்தியமே பிடித்ததடா

ஆ: மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என்முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூக்காலம்

இரு: உடல் கொதிக்குதே உயிர் மிதக்குதே அய்யோ இது எனக்குப் பிடிக்குதடா
எடை குறையுதே தூக்கம் தொலையுதே அய்யோ பைத்தியமே பிடிக்குதடா

ஆ: ஆ ஆ ஆ ஆ .. ஆ ஆ ஆ ஆ..

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 11/08/2007 04:39:00 AM | Permalink | 0 comments
Saturday, August 25, 2007

படம்: பள்ளிக்கூடம்
பாடியவர்: ஸ்ரீனிவாஸ், ஜனனி
இசை: பரத்வாஜ்

பல்லவி
=======

ஆ: இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா
(இந்த நிமிடம்)
இந்த மெளனம் இந்த மெளனம் இப்படியே உடையாதா
இந்த மயக்கம் இந்த மயக்கம் இப்படியே நீளாதா

பெ: இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே நீளாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா

சரணம்‍‍‍‍‍ 1
========

ஆ: ஞாபகப் பறவை ஓடுகள் உடைந்து
வெளியே தாவிப் பறக்கிறதே
நீயும் நானும் ஒன்றாய்த் திரிந்த‌
நாட்கள் நெஞ்சில் மிதக்கிறதே
பெ: ஆயிரம் சொந்தம் உலகில் இருந்தும்
தனிமை என்னைத் துரத்தியதே
உன்னைக் காணும் நிமிடம் வரைக்கும்
உடலே பொம்மையாய்க் கிடக்கிறதே
ஆ: இதயம் நொறுங்குகிறேன் இதையே விரும்புகிறேன்
இது போதும் பெண்ணே இறப்பேனே கண்ணே
பெ: ஓ ஆயிரம் காலம் வாழ்கிற‌ வாழ்க்கை
நிமிடத்தில் வாழ்ந்தேனோ
ஆ: இந்த நிமிடம் இந்த நிமிடம்...


சரணம் 2
========

ஆ: கிழ‌க்கும் மேற்கும் வ‌ட‌க்கும் தெற்கும்
ம‌னித‌ன் வ‌குத்த‌ திசையாகும்
உன்முக‌ம் இருக்கும் திசையே எந்த‌ன்
க‌ண்க‌ள் பார்க்கும் திசையாகும்
பெ: கோடையும் வாடையும் இலையுதிர் கால‌மும்
இய‌ற்கை வ‌குத்த‌ நெறியாகும்
உன்னுட‌ம் இருக்கும் கால‌த்தில் தானே
எந்த‌ன் நாட்க‌ள் உருவாகும்
ஆ: உந்த‌ன் நிழ‌ல‌ருகே ஓய்வுக‌ள் எடுத்திடுவேன்
இது காத‌ல் இல்லை இது காம‌ம் இல்லை
பெ: ஓ தேக‌த்தைத் தாண்டிய‌ மோக‌த்தைத் தாண்டிய‌
உற‌வும் இதுதானோ

பெ: இந்த‌ நிமிட‌ம் இந்த‌ நிமிட‌ம் இப்படியே உறையாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா
ஆ: இந்த‌ மெள‌ன‌ம் இந்த‌ மெள‌ன‌ம் இப்ப‌டியே உடையாதா
இந்த‌ ம‌ய‌க்க‌ம் இந்த‌ ம‌ய‌க்க‌ம் இப்ப‌டியே நீளாதா

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/25/2007 01:44:00 AM | Permalink | 0 comments
Wednesday, April 04, 2007

படம்: பொறி
பாடியவர்கள் : மதுபாலகிருஷ்ணன், மதுஸ்ரீ
இசை: தினா


பல்லவி
======

ஆ: பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
பெ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
ஆ: விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம்
பெ: ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே
ஆ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
பெ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்

சரணம் 1
========

ஆ: பயணத்தில் வருகிற சிறுதூக்கம்
பருவத்தில் முளைக்கிற முதல்கூச்சம்
பெ: பரீட்சைக்குப் படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும் முதல்மாலை
ஆ: புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை
அன்பே அன்பே நீதானே
அடைமழை நேரத்தில் பருகும் தேநீர்
அன்பே அன்பே நீதானே
பெ: தினமும் காலையில் எனது வாசலில்
கிடக்கும் நாளிதழ் நீதானே
ஆ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
பெ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்


சரணம் 2
========

ஆ: தாய்மடி தருகிற அரவணைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு
பெ: தேய்பிறை போல்படும் நகக்கணுக்கள்
வகுப்பறை மேஜையில் நிஜம்கிறுக்கல்
ஆ: செல்போன் சிணுங்கிட குவிகிற கவனம்
அன்பே அன்பே நீதானே
பிடித்தவன் தருகிற பரிசுப் பொருளும்
அன்பே அன்பே நீதானே
பெ: எழுதும் கவிதையில் எழுத்துப் பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீதானே
ஆ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
பெ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 4/04/2007 02:42:00 AM | Permalink | 4 comments
Monday, August 07, 2006
படம் : பாரிஜாதம்
பாடியவர்கள் : ஹரிசரண், ஸ்ருதி
இசை : தரண்

பல்லவி
======

பெ: உன்னைக் கண்டேனே முதல்முறை நான்
என்னைத் தொலைத்தேனே முற்றிலுமாய்த் தான்
(உன்னைக் கண்டேனே)
காதல் பூதமே என்னை நீயும் தொட்டாய்
ஹய்யோ ஹய்யய்யோ அச்சம் வருதே
தப்பிச் செல்லவே வழிகள் இல்லை இங்கே
ஹய்யோ ஹய்யய்யோ ச்சீ என்னவோ பண்ணினாய் நீயே
(உன்னைக் கண்டேனே முதல்முறை)
ஆ: எரிக்கிற மழையிது குளிர்கிற வெயிலிது
கொதிக்கிற நீரிது அணைக்கிற தீயிது
இனிக்கிற வலியிது இரும்புள்ள பூவிது
இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே
நிஜமுள்ள பொய்யிது நிறமுள்ள இருட்டிது
மெளனத்தின் மொழியிது மரணத்தின் வாழ்விது
அந்தரத்தின் கடலிது கட்டிவந்த கனவிது
அஹிம்சையில் கொல்வது கேள் பெண்ணே
பெ: ஏங்கினேன் நான் தேங்கினேன்
ஏனடா போதும் இம்சைகள்
வானமும் இந்த பூமியும் உந்தன் தோற்றமே
உன்பேர் சொன்னாலே உள்ளே தித்திக்குமே


சரணம் 1
========
பெ: காதல் கடிதம் அது கொஞ்சம் பேசும்
கண்ணோடு இருக்கும் பல கடிதம்
ஆ: பெண்ணே நானும் உன் கண்ணைப் படித்தேன்
புரியாமல் தவித்தேன் பொய்
சொல்லுதோ மெய் சொல்லுதோ
ஹோ காதல் எனைத் தாக்கிடுதே
பெ: சரிதான் என்னையும் அது சாய்த்திடுதே
ஆ: இரவில் கனவும் எனை சாப்பிடுதே
பெ: பொதுவாய் வயதில் இதில் தப்பிக்க யாருமில்லையே
(உன்னைக் கண்டேனே முதல்முறை)


சரணம் 2
========
பெ: ஏனோ இரவில் ஒருபாடல் கேட்டால்
உடனே என் உள்ளே நீ வருவாய்
ஆ: கோவில் உள்ளே கண்மூடி நின்றால்
உன் உருவம் தானே எந்நாளுமே நெஞ்சில்தோன்றுமே
நான் உன்னால் தான் சுவாசிக்கிறேன்
பெ: நான் உன் பேர் தினம் வாசிக்கிறேன்
ஆ: உயிரை விடவும் உனை நேசிக்கிறேஹேன்
பெ: கடவுள் நிலையை நம் கண்ணிலே காட்டிடும் காதல்
(உன்னைக் கண்டேனே)

பெ: உன்னைக் கண்டேனே முதல்முறை நான்
என்னைத் தொலைத்தேனே முற்றிலுமாய் தான்
காதல் பூதமே
ஆ: என்னை நீயும் தொட்டாய்
பெ: ஹய்யோ ஹய்யய்யோ
ஆ: அச்சம் வருதே
பெ: தப்பிச் செல்லவே வழிகள் இல்லை இங்கே
ஆ: ஹய்யோ ஹய்யய்யோ
பெ: ச்சீ என்னவோ பண்ணினாய் நீயே

ஆ: எரிக்கிற மழையிது குளிர்கிற வெயிலிது
கொதிக்கிற நீரிது அணைக்கிற தீயிது
இனிக்கிற வலியிது இரும்புள்ள பூவிது
இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே
நிஜமுள்ள பொய்யிது நிறமுள்ள இருட்டிது
மெளனத்தின் மொழியிது மரணத்தின் வாழ்விது
அந்தரத்தின் கடலிது கட்டிவந்த கனவிது
அஹிம்சையில் கொல்வது கேள் பெண்ணே

பெ: ஏங்கினேன் நான் தேங்கினேன்
ஏனடா போதும் இம்சைகள்
வானமும் இந்த பூமியும் உந்தன் தோற்றமே
உன்பேர் சொன்னாலே உள்ளே தித்திக்குமே

பெ: மனசுக்குள் ஏதோ சொல் சொல்
எதிரினில் வந்து நில் நில்
உயிருக்குள் ஏதோ ஜல் ஜல்
இது சரிதானா நீ சொல் (மனசுக்குள்)


Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/07/2006 07:09:00 AM | Permalink | 4 comments