Wednesday, April 04, 2007

படம்: பொறி
பாடியவர்கள் : மதுபாலகிருஷ்ணன், மதுஸ்ரீ
இசை: தினா


பல்லவி
======

ஆ: பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
பெ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
ஆ: விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம்
பெ: ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே
ஆ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
பெ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்

சரணம் 1
========

ஆ: பயணத்தில் வருகிற சிறுதூக்கம்
பருவத்தில் முளைக்கிற முதல்கூச்சம்
பெ: பரீட்சைக்குப் படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும் முதல்மாலை
ஆ: புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை
அன்பே அன்பே நீதானே
அடைமழை நேரத்தில் பருகும் தேநீர்
அன்பே அன்பே நீதானே
பெ: தினமும் காலையில் எனது வாசலில்
கிடக்கும் நாளிதழ் நீதானே
ஆ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
பெ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்


சரணம் 2
========

ஆ: தாய்மடி தருகிற அரவணைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு
பெ: தேய்பிறை போல்படும் நகக்கணுக்கள்
வகுப்பறை மேஜையில் நிஜம்கிறுக்கல்
ஆ: செல்போன் சிணுங்கிட குவிகிற கவனம்
அன்பே அன்பே நீதானே
பிடித்தவன் தருகிற பரிசுப் பொருளும்
அன்பே அன்பே நீதானே
பெ: எழுதும் கவிதையில் எழுத்துப் பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீதானே
ஆ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
பெ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 4/04/2007 02:42:00 AM | Permalink |


4 Comments:


At Friday, April 27, 2007 5:26:00 AM, Blogger SHRIE

நன்றி ராகவன்! One of my favorite songs. THanks for your lyrics

 

At Thursday, May 03, 2007 2:18:00 AM, Blogger Raghavan alias Saravanan M

நன்றி ஸ்ரீதர்

 

At Monday, March 24, 2008 12:29:00 AM, Blogger முபாரக்

ரொம்ப அழகா இருக்கு வடிவமைப்பு. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

பாடல் எழுதியவர் பெயரை எப்படியாவது கண்டுபிடித்து எழுதுங்கள்.

இதை எழுதியவர் யுகபாரதி

நன்றி :-)

 

At Wednesday, April 16, 2008 8:26:00 AM, Blogger Raghavan alias Saravanan M

@முபாரக்,

நன்றி முபாரக் :)