Wednesday, October 24, 2007

படம்: க‌ருப்ப‌சாமி குத்த‌கைதார‌ர்
பாடியவர்: பாம்பெ ஜெய‌ஸ்ரீ
இசை: தினா

பல்லவி
=======

பெ: உப்புக்க‌ல்லு த‌ண்ணீருக்கு ஏக்க‌ப்ப‌ட்ட‌து
    க‌ண்ணு ரெண்டும் க‌ண்ணீருக்கு வாக்க‌ப்ப‌ட்ட‌து
    ஒத்த‌ச் சொல்லு புத்திக்குள்ள‌ மாட்டிக்கிட்ட‌து
    த‌ப்பிச் சொல்ல‌க் கூடாதுன்னு கேட்டுக்கிட்ட‌து
    தேதித் தாளைப் போலே வீணே நாளும் கிழிய‌றேன்
    நான் தேர்வுத் தாளை க‌ண்ணீரால‌ ஏனோ எழுதுறேன்
    இது க‌ன‌வா ஆஆஆஆ... இல்லை நிஜ‌மா
    த‌ற்செய‌லா தாய் செய‌லா..
    நானும் இங்கு நானும் இல்லையே (உப்புக்க‌ல்லு) 
   

சரணம்‍‍‍‍‍ 1
=========

பெ: ஏதும் இல்லை வண்ண‌ம் என்று நானும் வாடினேன்
     நீ ஏழு வ‌ண்ண‌ வான‌வில்லாய் என்னை மாத்துன‌
    தாயும் இல்லை என்று உள்ள‌ம் நேற்று ஏங்கினேன்
    நீ தேடி வ‌ந்து நெய்த‌ அன்பால நின்று தாக்கினாய்
    க‌த்தி இன்றி ர‌த்த‌ம் இன்றிக் காய்ப்ப‌ட்ட‌வ‌ள்
    உன் க‌ண்க‌ள் செய்த‌ வைத்திய‌த்தால் ந‌ன்மைய‌டைகிறேன்
    மிச்சம் இன்றி மீதம் இன்றி சேத‌ப்ப‌ட்ட‌வ‌ள்
    உன் நிழ‌ல் கொடுத்த‌ தைரிய‌த்தால் உண்மைய‌றிகிறேன்

    உப்புக்க‌ல்லு த‌ண்ணீருக்கு ஏக்க‌ப்ப‌ட்ட‌து
    ஒத்த‌ச்சொல்லு புத்திக்குள்ள‌ மாட்டிக்கிட்ட‌து
    ஓ ஓ ஓ ஓஒ


சரணம் 2
=========

பெ: மீசை வைத்த‌ அன்னை போல‌ உன்னைக் காண்கிறேன்
     நீ பேசுகின்ற‌ வார்த்தை எல்லாம் வேத‌மாகுதே
     பாழ‌டைந்த‌ வீடு போல‌ அன்று தோன்றினேன்
     உன் பார்வை ப‌ட்ட‌ கார‌ண‌த்தால் கோல‌ம் மாறுதே
     க‌ட்டிலுண்டு மெத்தை உண்டு ஆன‌ போதிலும்
     உன் பாச‌ம் க‌ண்டு தூங்க‌வில்லை என‌து விழிகளே        
     தென்ற‌லுண்டு திங்க‌ளுண்டு ஆன‌ போதிலும்
     க‌ண் நாளும் இங்கு தீண்ட‌வில்லை உன‌து நினைவிலே
     (உப்புக்க‌ல்லு த‌ண்ணீருக்கு ஏக்க‌ப்ப‌ட்ட‌து)

 

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 10/24/2007 07:58:00 AM | Permalink | 0 comments
Tuesday, May 23, 2006
படம் : கஜினி
பாடல் : நா.முத்துக்குமார்
பாடியவர்கள் : ஸ்ரீராம் பார்த்தசாரதி, பாம்பே ஜெயஸ்ரீ
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

பல்லவி
======
ஆ: சுட்டும் விழிச் சுடரே சுட்டும் விழிச் சுடரே
என் உலகம் உன்னைச் சுற்றுதே
சட்டைப் பையில் உன் படம் தொட்டுத் தொட்டு உரச
என் இதயம் பற்றிக் கொள்ளுதே
உன் விழியில் விழுந்தேன் விண்வெளியில் பறந்தேன்
கண் விழித்து சொப்பனம் கண்டேன் உன்னாலே
கண் விழித்து சொப்பனம் கண்டேன்
(சுட்டும் விழிச் சுடரே ...)

சரணம் - 1
=========
ஆ: மெல்லினம் மார்பில் கண்டேன்
வல்லினம் விழியில் கண்டேன்
இடையினம் தேடி இல்லை என்றேன்
பெ: தூக்கத்தில் உளறல் கொண்டேன்
தூறலில் விரும்பி நின்றேன்
தும்மல் வந்தால் உன் நினைவைக் கொண்டேன்
ஆ: கருப்பு வெள்ளைப் பூக்கள் உண்டா
உன் கண்ணில் நான் கண்டேன்
உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன் (உன் கண்கள்)
பெ: சுட்டும் விழிச் சுடரே..

சரணம் - 2
==========
பெ: மரங்கொத்திப் பறவை ஒன்று
மனங்கொத்திப் போனதென்று
உடல் முதல் உயிர்வரை தந்தேன்
ஆ: தீயின்றித் திரியும் இன்றி
தேகங்கள் எரியும் என்று
இன்று தானே நானும் கண்டு கொண்டேன்
பெ: மழை அழகா வெயில் அழகா
கொஞ்சும் போது மழை அழகு
கண்ணாலே கோபப்பட்டால் வெயில் அழகு (கண்ணாலே)
ஆ: சுட்டும் விழிச் சுடரே......

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/23/2006 07:05:00 AM | Permalink | 0 comments