Thursday, May 03, 2007
படம்: தீபாவளி
பாடியவர்கள்:
மதுஸ்ரீ, அனுராதாஸ்ரீராம்
இசை: யுவன்ஷங்கர்ராஜா
இயக்குநர்: எழில்


பல்லவி
======
மதுஸ்ரீ:
கண்ணன் வரும்வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம் செல்ல மயக்கம் அதை ஏற்கநின்றேன்
கட்டுக்கடங்கா எண்ண அலைகள் றெக்கை விரிக்கும் ரெண்டுவிழிகள்
கூடுபாயும் குறும்புக்காரன் அவனே (கண்ணன் வரும்வேளை)


சரணம்-1
=======
அனுராதா ஸ்ரீராம்:
வான்கோழி கொள்ளும் ஆசை யாழில் தோற்பது
தைமாசம் கொள்ளும் ஆசை கூடிப் பார்ப்பது
தேர்க்கால்கள் கொள்ளும் ஆசை வீதி சேர்வது
ஓரீசல் கொள்ளும் ஆசை தீயில் வாழ்வது
கூறவா இங்கு எனது ஆசையை தோழனே வந்து உளறு மீதியை
கோடிக் கோடி ஆசை தீரும் மாலை
மதுஸ்ரீ: கண்ணன் வரும்வேளை..



சரணம்-2
========
அனுராதா ஸ்ரீராம்:
பூவாசம் தென்றலோடு சேரவேண்டுமே
ஆண்வாசம் தொட்டிடாத தேகம் ஊனமே
தாய்ப்பாசம் பத்துமாதம் பாரம் தாங்குமே வாழ்நாளின் மிச்சபாரம் காதல் எழுதுமே
நீண்டநாள் கண்ட கனவு தீரவே தீண்டுவேன் உன்னை இளமை ஊறவே
நீயில்லாமல் நிழலும் எனக்குத் தொலைவே (கண்ணன் வரும்வேளை)

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/03/2007 12:22:00 AM | Permalink | 4 comments
Thursday, April 12, 2007

படம்                : தீபாவளி
பாடியவர்கள்  : யுவன்ஷங்கர்ராஜா
இசை               : யுவன்ஷங்கர்ராஜா
 
 
பல்லவி
======
ஆ: போகாதே போகாதே நீயிருந்தால் நானிருப்பேன்
      போகாதே போகாதே நீபிரிந்தால் நான் இறப்பேன்
      உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும் 
      கனவாய் எனை மூடுதடி
      யாரென்று நீயும் எனைப்பார்க்கும் போது
      உயிரே உயிர் போகுதடி
      கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து
      உந்தன் முகம் பார்ப்பேனடி (போகாதே போகாதே)
 
 
சரணம்-1
=======
ஆ: கலைந்தாலும் மேகம் அது மீண்டும் இருக்கும்
      அதுபோல தானே உந்தன் காதல் எனக்கும்
      நடைபாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதற்கு
      நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு
      உனக்காகக் காத்திருப்பேன் ஓஹோஹோ
      உயிரோடு பார்த்திருப்பேன் ஓஹோஹோ (போகாதே போகாதே)
 
 
சரணம்-2
=======
ஆ:  அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்
       அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்
       கண்தூங்கும் நேரம் பார்த்துக் கடவுள் வந்து போனதுபோல்
       என்வாழ்வில் வந்தே வானாய் ஏமாற்றம் தாங்கலையே
       பெண்ணே நீ இல்லாமல்ல்ல்ல்..
       பூலோகம் இருட்டிடுதேஏஏஏ... (போகாதே போகாதே)

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 4/12/2007 08:06:00 AM | Permalink | 0 comments