Wednesday, May 02, 2007
படம்: கடலோரக் கவிதைகள்
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி
இசை: இளையராஜா
இயக்குநர்: பாரதிராஜா
 
 
பல்லவி
======
ஆ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
      எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
      பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவளமல்லித் தோட்டம்
      நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள் கூச்சம்
பெ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
      கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே
 
 
சரணம்-1
=========
பெ: மனசு தடுமாறும் அது நெனச்சா நெறம்மாறும்
      மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடைபோடும்
ஆ: நித்தம் நித்தம் ஒன்நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
     மாடுரெண்டு பாதைரெண்டு வண்டிஎங்கே சேரும்
பெ: பொத்திவச்சா அன்பு இல்லை சொல்லிப்புட்டா வம்புஇல்லை
      சொல்லத்தானே தெம்புஇல்லை இந்தத்துன்பம் யாரால 
 
 
சரணம்-2
=========
ஆ: பறக்கும் திசைஏது இந்தப் பறவை அறியாது
      ஒறவும் தெரியாது அது ஒனக்கும் புரியாது
பெ: பாறையில பூமொளச்சுப் பாத்தவுக யாரு
      அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு
ஆ: காலம் வரும் வேளையில காத்திருப்பேன் பொன்மயிலே
பெ: தேருவரும் உண்மையிலே சேதிசொல்வேன் கண்ணாலே
 
 
பெ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே..
       கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே
       பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவளமல்லித் தோட்டம்
       நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்
ஆ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
       எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/02/2007 03:07:00 AM | Permalink |


0 Comments: