Thursday, April 12, 2007

படம்          :  அன்பே சிவம்
பாடல்        : வைரமுத்து
பாடியவர்  : கமல்ஹாசன்
இசை         : வித்யாசாகர்
 
பல்லவி
========
ஆ: யார் யார் சிவம் நீ நான் சிவம்
      வாழ்வே தவம் அன்பே சிவம்
      ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்
      நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்
குழு: அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் 
        அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்)
ஆ: யார் யார் சிவம் நீ நான் சிவம்
 
 
சரணம் -1
==========
ஆ: யார் யார் சிவம் நீ நான் சிவம்
      வாழ்வே தவம் அன்பே சிவம்
      இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்
      அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்
குழு: அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்
       அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்)
 
 
சரணம் -2
==========
ஆ:  யார் யார் சிவம் நீ நான் சிவம்
      அன்பின் பாதை சேர்ந்தவருக்கு முடிவே இல்லையடா
      மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா
குழு: அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் 
       அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்)

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 4/12/2007 06:55:00 AM | Permalink |


4 Comments:


At Thursday, April 12, 2007 9:38:00 PM, Blogger SHRIE

Sirantha Padal. Good Work, keep it up

 

At Thursday, April 12, 2007 9:47:00 PM, Blogger Raghavan alias Saravanan M

@shrie,

நன்றி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

 

At Wednesday, May 21, 2008 7:38:00 AM, Blogger G.Rengarajan

நான் தேடிய சில பாடல் வரிகள் இங்கே கிடைத்தது
மிக்க நன்றி.....
அருமையான முயற்சி.....
தொடருங்கள்...

-Rengs

 

At Thursday, August 21, 2008 8:40:00 AM, Blogger Raghavan alias Saravanan M

@ரெங்கராஜன்,

நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்.

தாமதத்திற்கு மன்னிக்கவும்.

தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.