Monday, August 20, 2007
படம்                  : சென்னை 600028
பாடியவர்கள்  : எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா
இசை                : யுவன்ஷங்கர்ராஜா
இயக்கம்          : வெங்கட்பிரபு
 
பல்லவி
======
ஆ: யாரோ யாருக்குள் இங்கு யாரோ
      யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
      விடையில்லா ஓர் கேள்வி
பெண் குழு: உயிர்க்காதல் ஒரு வேள்வி (யாரோ யாருக்குள்)
ஆ: காதல் வரம் நான் வாங்க
      கடைக்கண்கள் நீ வீச
      கொக்கைப் போல நாள்தோறும்
      ஒற்றைக்காலில் நின்றேன் கண்மணி
பெ: யாரோ யாருக்குள் இங்கு யாரோ
      யார் நெஞ்சை இங்குக் யார் தந்தாரோ
      விடையில்லா ஒரு கேள்வி
ஆண் குழு: உயிர்க்காதல் ஒரு வேள்வி
 
சரணம்-1
=======
பெ: ஊரை வெல்லும் தோகை நானே
      உன்னால் இங்கு தோற்றுப் போனேன்
      கண்ணால் யுத்தமே நீ செய்தாய் நித்தமே
ஆ: ஓஹோஹோ
      நின்றாய் இங்கு மின்னல் கீற்றாய்
      நித்தம் வாங்கும் மூச்சுக் காற்றாய்
      உன்னை சூழ்கிறேன் நான் உன்னை சூழ்கிறேன்
பெ: காற்றில் வைத்த சூடம் போலே
      காதல் தீர்ந்து போகாது
ஆ: உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி
      என்னால் வாழ ஆகாது அன்பே வா ஹே
ஆ: யாரோ
பெ: ஆஹா யாருக்குள் இங்கு யாரோ
ஆ: ம்ஹீம்.. யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
பெ: விடையில்லா ஒரு கேள்வி
ஆ: உயிர்க்காதல் ஒரு வேள்வி
 
சரணம்-2
=======
ஆ: உந்தன் ஆடை காயப்போடும்
      உங்கள் வீட்டுக் கம்பிக்கொடியாய்
      என்னை எண்ணினேன் நான் தவம் பண்ணினேன்
பெ: ஆஹாஹாஹா
      கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி
      கிட்டக் கிட்ட வந்தாய் துள்ளி
      எட்டிப் போய்விடு இல்லை ஏதோ ஆகிடும்
 ஆ: காதல் கொஞ்சம் பேசும்போது
       சென்னைத் தமிழும் செந்தேன் தான்
பெ: ஆசை வெள்ளம் பாயும்போது
      வங்கக்கடலும் வாய்க்கால் தான்
      அன்பே வா ஹா..
 
ஆ: யாரோ
பெ: ம்ஹீம் ஹீம்
ஆ: யாருக்குள் இங்கு யாரோ
பெ: ஆஹா ஹா
ஆ: யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
      விடையில்லா ஒரு கேள்வி
பெ: உயிர்க்காதல் ஒரு வேள்வி
ஆ: காதல் வரம் நான் வாங்க
      கடைக்கண்கள் நீ வீச
      கொக்கைப்போல நாள்தோறும்
      ஒற்றைக்காலில் நின்றேன் கண்மணி
பெ: யாரோ யாருக்குள் இங்கு யாரோ
      யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
      விடையில்லா ஒரு கேள்வி
ஆண் குழு: உயிர்க்காதல் ஒரு வேள்வி

Labels: , , , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/20/2007 05:56:00 AM | Permalink | 0 comments
Thursday, August 16, 2007
படம்: இந்தியன்
பாடல்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலா
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
 
பல்லவி
======
ஆ: கப்பலேறிப் போயாச்சு சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
      நட்டநடு ராவாச்சு நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா
      விடியும் வரையில் போராடினோம் உதிரம் நதியாய் நீராடினோம்
      வைக்கல் எல்லாம் வாளாச்சு துக்கம் எல்லாம் தூளாச்சு கண்ணம்மா
      கண்ணம்மா.... நம்ம வாசல் தேடி சாரல் வரும் 
      மெதுவானம் தூவும் தூறல் வரும்
      வாழ்வில் சூழ்ந்த சோகம் யாவும் இப்ப (கப்பலேறிப் போயாச்சு)
 
சரணம் - 1
==========
 
பெ: வண்ணமான் வஞ்சிமான் நீர்க்கோலம் கண்களால் கன்னத்தில் போட
      இன்னுமா இன்னுமா போர்க்கோலம் இங்குநீ அங்குநான் போராட
      உனைக் கேட்டா என் நெஞ்சை அள்ளிக் கொடுத்தேன்
      தினம் நான் தான் என் அன்பே முள்ளில் படுத்தேன்
      நானோர் தீவாய் ஆனேன் வாவா அம்மம்மா நாளெல்லாம் 
      கானல் நீரைக் குடித்தேன்
 
ஆ: இப்ப (கப்பலேறிப் போயாச்சு)
 
சரணம் - 2
==========
ஆ: லாலா லாலா லாலலலலா லாலாலாலா லாலா லாலலலலா
      அன்னமே அன்னமே நான் சொல்லி வந்ததா தென்றலும் நேற்று
      உன்னையே உன்னையே நான் எண்ணி வெந்ததைச் சொன்னதா பூங்காற்று
      உந்தன் காலில் மெட்டி போல் கூட நடப்பேன்
      உந்தன் கண்ணுக்கு கண்ணீர் போல் காவல் இருப்பேன்
      மாலை சூடி தோளில் ஆடி கைதொட்டு மெய்தொட்டு 
      உன்னில் என்னைக் கரைப்பேன்
      இப்ப (கப்பலேறிப் போயாச்சு)

Labels: , , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/16/2007 10:56:00 AM | Permalink | 1 comments
Tuesday, May 08, 2007
படம்               : சொல்லாமலே
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை              : பாபி
இயக்கம்         : சசி
 
பல்லவி
======
சிந்தாமணியே வா சிறகை விரித்தேன் வா
மூன்றாம் பிறையே வா முழுதாய் மனதைத் தா
முதன்முதலாய் என்மனதில் பெண்முகம் பார்க்கிறேன்
எனதுயிரில் அவள் நுழையும் ஓசையைக் கேட்கிறேன்
சிறைக்கதவை உடைத்து விட்டுப் பறந்திடப் போகிறேன்
பறந்திடப் பறந்திடப் பறந்திடத் தடையில்லையே (சிந்தாமணியே வா)
 
 
சரணம்-1
=======
விழிகள் உனைப்பார்த்து சுகமாய்க் கலங்குதடி
உயிரே கரமாகி உன்னை வணங்குதடி
பெண்மையதன் மென்மையினை உன் ஸ்பரிசம் சொல்லியதே
என்னருகில் நீயிருந்தால் சூரியனும் குளிர்கிறதே
தேய்பிறையின் வாசலிலே பௌர்ணமிகள் துள்ளியதே
பறந்திடப் பறந்திடப் பறந்திடத் தடையில்லையே (சிந்தாமணியே வா)
 
 
சரணம்-2
=======
பூவைத் தேடி வந்தேன் புதையல் கிடைத்ததடி
பாதை தேடி வந்தேன் பாதம் கிடைத்ததடி
வெய்யிலிலே நீ நடந்தால் சூரியனை ஒளித்துவைப்பேன்
குடையெடுக்க நீ மறந்தால் மழையினையே நிறுத்திவைப்பேன்
எனதுயிரை மறந்துவிட்டேன் உனதுயிரில் கலந்துவிட்டேன்
பறந்திடப் பறந்திடப் பறந்திடத் தடையில்லையே (சிந்தாமணியே வா)
 

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/08/2007 04:31:00 AM | Permalink | 0 comments