Monday, December 30, 2013
படம்: பூமணி
பாடல்:
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, சுஜாதா


சரணம்
========
பெ: தோள் மேல தோள் மேல பூமால பூமால
     கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால
ஆ: தோள் மேல தோள் மேல பூமாலை பூமாலை
     கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால
பெ: ஓ மைனா மைனா இது உண்மை தானா
     அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில் தானா
     ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே
ஆ:  தோள் மேல தோள் மேல பூமாலை பூமாலை
     கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால
பெ: தோள்மேல தோள் மேல பூமாலை பூமாலை
     கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால

பல்லவி 1
==========

பெ: செந்தாழம் பூக்களே என் கூந்தல் சூடவா
     சந்தோஷ நாட்களே என் வாசல் தேடிவா
ஆ: சொல்லாத ஆசைகள் என்னென்ன சொல்லவா
     நூறாண்டுக் காதலை ஓராண்டில் வாழவா
பெ: ஆகாய கங்கையே என் தாகம் தீர்க்கவா
     தாயாகி உன்னை நான் தாலாட்டிப் பார்க்கவா
ஆ: நீ அணைக்கும் அன்பிலே அன்பிலே
     நான் கரைந்தேன் உன்னிலே உன்னிலே
பெ: துள்ளுதே துள்ளுதே என் மனம் விண்ணிலே


ஆ: தோள் மேல தோள் மேல பூமால பூமால
     கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால
    ஓ மைனா மைனா இது உண்மை தானா
     அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில் தானா
     ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே
பெ:
தோள் மேல தோள் மேல பூமால பூமால
     கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால


பல்லவி 2
==========
ஆ: பூவுக்கு வாசனை  யாரிங்கு தந்தது
     நேசங்கள் என்பது நெஞ்சோடு உள்ளது
பெ: என் பெண்மை இன்று தான் பூச்சூடிக் கொண்டது
     என் கோவில் இன்று தான் தீபங்கள் கண்டது
ஆ: உன் நெஞ்சில் வாழவே ஒரு ஜென்மம் வாங்கினேன்
     உன் மூச்சில் தானடி நான் இன்னும் வாழ்கிறேன்
பெ: நான் இருந்தேன் வானிலே மேகமாய்
     ஏன் விழுந்தேன் பூமியில் வேகமாய்
ஆ: வீழ்ந்த்தும் நல்லதே தாகமாய் உள்ளதே

பெ: தோள் மேல தோள் மேல பூமால பூமால
ஆ: கலந்ததிங்கு யாரால காமனவன் பேரால
பெ: ஓ மைனா மைனா இது உண்மை தானா
ஆ: அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில் தானா
பெ: ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே

ஆ: தோள் மேல தோள் மேல பூமால பூமால
பெ: கலந்ததிங்கு யாரால காமனவன் பேரால

 --- மு. இராகவன் என்ற சரவணன்
    30 திசம்பர் 2013 திங்கள் மாலை 5 49 மணி இந்திய நேரப்படி
     சிபிடி பேலாபூர், நவி மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 12/30/2013 05:52:00 AM | Permalink | 0 comments
Friday, November 15, 2013
படம்: வால்மீகி
பாடியவர்கள்: இளையராஜா, பேலா ஷிண்டே
பாடல் : <<தெரியவில்லை>>
இசை : இளையராஜா


சரணம்
--------------
குழு: மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்
            நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்

பெ:  ஒளி தரும் சூரியனும் நீ இல்லை
           இரவினில் வான் வரும் நிலவும் இல்லை
           (ஒளி தரும் சூரியனும்..)
          விலகாத இருளினையும் விலக்கி வைக்கும் விளக்கானேன்
          அது போதும் அது போதும் என் விடியலுக்கோர் கிழக்கானாய்

ஆ:   ஒளி தரும் சூரியனும் நீ இல்லை
           இரவினில் வான் வரும் நிலவும் இல்லை
           விலகாத இருளினையும் விலக்கி வைக்கும் விளக்கானேன்
          அது போதும் அது போதும் என் விடியலுக்கோர் கிழக்கானாய்

           ஒளி தரும் சூரியனும் நீ இல்லை

பல்லவி 1
----------------
ஆ: என்னை மாற்ற ஏன் எண்ணினாய்  இங்கு என்னை ஏமாற்றி வாழ்ந்தவன்
         கல்லைக் கூட நீ கனிய வைக்கிறாய் புல்லைப் பூவென மாற்றினாய்
பெ: மாறிப் போகின்ற உலகிலே என்றும் அன்பு மாறாது சொல்லலாம்
         ஒன்றும் இல்லாது ஓய்ந்து நின்றாலும் ஊக்கத்தை அன்பில் ஊட்டலாம்
ஆ: எத்தனை உள்ளம் நோக என்னென்ன செய்தவன்
         சத்தியம் செய்தே சொல்வேன் இன்று தான் மனிதனே
பெ: திருந்திய பின்னே வருந்துவது ஏனோ
         திருந்திய பின்னே வருந்துவது ஏனோ வருவது வசந்தங்களே....


பல்லவி 2
-----------------
பெ: வண்ணப் பூப்பூத்து வாசம் எங்கெங்கும் வந்து சொல்கின்ற நாளிது
         கோயில் மணியோசை தென்றல் காற்றோடு காதில் தேன் பாயும் நாளிது
ஆ:  கொஞ்சும் கிளி போல கோலக்குயில் போல பிஞ்சு மனசாகிப் போகுது
         கங்கை நதி போல பொங்கும் அலை போல உள்ளம் ஒன்றாகிச் சேர்ந்தது
பெ: இன்று போல் என்றும் என்றும் நல்லதே செய்யலாம்
          உள்ளதே போதும் என்று நிம்மதி கொள்ளலாம்
ஆ:  ஒரு வழி அடைத்தால் மறுவழி திறக்கும்
         ஒரு வழி அடைத்தால் மறுவழி திறக்கும் அதிசயம் அதிசயமே


பெ: ஒளி தரும் சூரியனும் நான் இல்லை                  
ஆ:  ஒளி தரும் சூரியனும் நீ இல்லை
பெ: இரவனில் வான் வரும் நிலவும் இல்லை        
ஆ:  இரவினில் வான் வரும் நிலவும் இல்லை
பெ: ஒளி தரும் சூரியனும் நான் இல்லை                    
ஆ:  ஒளி தரும் சூரியனும் நீ இல்லை
பெ: இரவனில் வான் வரும் நிலவும் இல்லை        
ஆ:  இரவினில் வான் வரும் நிலவும் இல்லை
பெ: விலகாத இருளினையும் விலக்கி வைக்கும் விளக்கானேன்
        அது போதும் அது போதும் உன் விடியலுக்கோர் கிழக்கானேன்
ஆ: ஒளி தரும் சூரியனும் நீ இல்லை                          பெ:  நான் இல்லை
ஆ:  இரவினில் வான் வரும் நிலவும் இல்லை      பெ:  நிலவும் இல்லை
ஆ:   விலகாத இருளினையும் விலக்கி வைக்கும் விளக்கானாய்      
பெ:  விளக்கானேன்
ஆ: அது போது அது போதும் என் விடியலுக்கோர் கிழக்கானாய்          
பெ: கிழக்கானேன்
ஆ: ஒளிதரும் சூரியனும் நீ இல்லை


 -- மு. இராகவன் என்ற சரவணன்
    15 நவம்பர் 2013 வெள்ளி இரவு 11 25 மணி (இந்திய நேரப்படி)
     நவி மும்பை | மகாராஷ்டிரா | இந்தியா

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 11/15/2013 10:04:00 AM | Permalink | 0 comments
Wednesday, November 13, 2013
படம்: யமுனா
பாடியவர்கள்: பிரசன்னா, சைந்தவி
பாடல் : வைரமுத்து
இசை : இலக்கியன்


சரணம்
--------------
ஆ:  ஓஹோஹோ ஒற்றைப் பனித்துளி உருண்டோடி உயிரில் விழுந்தது
         ஆஹாஹா அன்பின் கரம்தொட அலைமோதி நெஞ்சம் உடைந்தது
         ஓஹோஹோ ஒற்றைப் பனித்துளி உருண்டோடி உயிரில் விழுந்த்து
பெ:  ஆஹாஹா அன்பின் கரம்தொட அலைமோதி நெஞ்சம் உடைந்தது
          பார்த்த முதல் பார்வை வந்து என் தேகம் எங்கிலும் நனைந்து போகுதே
ஆ:   காற்றில் உன் சுவாசம் வந்து என் காயம் எங்கிலும் மருந்து போடுதே
           புதிய  உலகம் புதிய காற்று
பெ:   காதல் இசையில் கவிதை மீட்டு

ஆ:    தானன தானனனா தானனனன தானானா
            தானன தானனனா தானனனன தானனா

பெ:   ஓஹோஹோ ஒற்றைப் பனித்துளி உருண்டோடி உயிரில் விழுந்தது  


பல்லவி 1
----------------
ஆ:  கூந்தலை அள்ளி அள்ளிக்  குதிரை வால் போட்டுப் போட்டு
          நடந்து நீ வருகையில்  என் மனம் குதிரையாகுதே
பெ:  நெஞ்சிலே ரகசியமுண்டு கண்ணிலே ரகசியமில்லை
          காதலும் கர்ப்பமும் மறைப்பது சாத்தியமில்லை
ஆ:   தானமாய் வருவதை யாரும் திட்டம் போட்டுத் திருடுவதில்லை
           உன்னுயிர் மொத்தம் என்னதடி.
பெ :  சொந்தமாய் உள்ளதை எல்லாம் துறக்கும் போதே சொர்க்கம் கிட்டும்
           கவிதையில் ஞானிகள் சொன்னபடி
ஆ:    உயிர் தொடவா தொடவா
பெ :  இது கன்வா நனவா

ஆ:    தானன தானனனா தானனனன தானானா
            தானன தானனனா தானனனன தானனா
பெ:   ஓஹோஹோ ஒற்றைப் பனித்துளி
            உருண்டோடி உயிரில் விழுந்தது
       

பல்லவி 2
-----------------
ஆ:  காற்றிலே ஆடை சரிந்தால் கவசமாய்ப் புத்தகம் கொண்டாய்
          என்னையே கவசமாய் எப்போது அணியப் போகிறாய்
பெ:  என் மார்பில் உன்னை அணிந்தால் எப்போதும் இறங்கவும் மாட்டாய்
           இதயமே வருடுவாய் இரவோடு திருடப் பார்ப்பாய்
ஆ:  அள்ளியே தருவதினாலே கொள்ளை அழகு குறைவதுமில்லை
          மெளனமே மொழியின் உச்ச நிலை
பெ:  கூந்தலில் ஈரம் சொட்டக் குளித்து வந்த பின்னால் கூட‌
          குறும்புகள் இன்னும் ஓய்வதில்லை
ஆ:   இதில் பெறுதல் சுகமா
பெ:  இல்லை தருதல் சுகமா

ஆ:    தானன தானனனா தானனனன தானானா
            தானன தானனனா தானனனன தானனா
           (தானனா தானனனா...)


 -- மு. இராகவன் என்ற சரவணன்
    13 நவம்பர் 2013 புதன் மாலை 5 10 மணி (இந்திய நேரப்படி)
     நவி மும்பை | மகாராஷ்டிரா | இந்தியா

Labels: , , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 11/13/2013 03:47:00 AM | Permalink | 0 comments
Monday, November 11, 2013
படம்: தலைவா
பாடியவர்கள்: ஜி.வி.பிரகாஷ், சைந்தவி
பாடல் : நா. முத்துக்குமார்
இசை : ஜி.வி. பிரகாஷ்

சரணம்
--------------
ஆ: யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது
        காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
பெ: யார் எந்தன் வார்த்தை மீது மெளனம் வைத்தது
         இன்று பேசாமல் கண்கள் பேசுது
ஆ: நகராமல் இந்த நொடி நீள
        எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே
பெ: குளிராலும் கொஞ்சம் அனலாலும்
         இந்த நெருக்கம் தான் கொல்லுதே
ஆ:  எந்தன் நாளானது இன்று வேறானது
         வண்ணம் நூறானது வானிலே
        (யார் இந்த சாலையோரம்..)

பல்லவி 1
----------------
ஆ: தீரத் தீர ஆசை யாவும் பேசலாம்
        மெல்ல தூரம் விலகிப்  போகும் வரையில் தள்ளி நிற்கலாம்
பெ: என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம்
         இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொள்ளலாம்
ஆ:  என்னாகிறேன் இன்று ஏதாகிறேன்
பெ: எதிர் காற்றிலே சாயும் குடையாகிறேன்
ஆ: எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது
         அது பறந்தோடுது வானிலே
பெ: (யார் எந்தன் வார்த்தை மீது....)

பல்லவி 2
-----------------
ஆ: மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே
         அது மலையை விட்டு ஓடி வந்து சேரும் கடலிலே
பெ: வைரம் போலப் பெண்ணின் மனது உலகிலே
         அது தோன்றும் வரையில் புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே
ஆ:  கண் ஜாடையில் உன்னை அறிந்தேனடி
பெ:  என் பாதையில் இன்று உன் காலடி
ஆ:  நேற்று நான் பார்த்ததும் இன்று நீ பார்ப்பதும்
          நெஞ்சம் எதிர்பார்ப்பதும் ஏனடி
   
ஆ: யார் இந்த சாலையோரம்..
பெ: யார் எந்தன் வார்த்தை மீது...
ஆ: நகராமல்..
பெ: குளிராலும்..
ஆ: எந்தன் நாளானது இன்று வேறானது
         வண்ணம் நூறானது வானிலே


 -- மு. இராகவன் என்ற சரவணன்
    11 நவம்பர் 2013 திங்கள் இரவு 11 50 மணி (இந்திய நேரப்படி)
     நவி மும்பை | மகாராஷ்டிரா | இந்தியா

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 11/11/2013 10:40:00 AM | Permalink | 1 comments
Tuesday, October 09, 2012

படம்: தாண்டவம்
பாடல்: நா.முத்துக்குமார்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: சைந்தவி, சத்ய பிரகாஷ், ஜி.வி.பிரகாஷ் குமார்

சரணம்
========
உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும் போதும்  உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்

காதலாகிக் காற்றிலாடும்
ஊஞ்சலாய் நானாகிறேன்
காலம் தாண்டி வாழ வேண்டும்
வேறு என்ன கேட்கிறேன்

(உயிரின் உயிரே உனது விழியில்..)

பல்லவி 1
==========
சாயங்காலம் சாயும் நேரத்தில்
தோழி போல மாறுவேன்
சோர்ந்து நீயும் தூங்கும் நேரத்தில்
தாயைப் போலத் தாங்குவேன்

வேறு பூமி வேறு வானம் தேடியே நாம் போகலாம்
சேர்த்து வைத்த ஆசையாவும் சேர்ந்து நாமங்கு பேசலாம்
அகலாமலே அணுகாமலே இந்த நேசத்தை யார் நெய்தது
அறியாமலே புரியாமலே இரு நெஞ்சுக்குள் மழை தூவுது

(உயிரின் உயிரே உனது விழியில்..)


பல்லவி 2
==========
தண்டவாளம் தள்ளி இருந்தது
தூரம் சென்று சேரத்தான்
மேற்கு வானில் நிலவு எழுவது
என்னுள் உன்னைத் தேடத்தான்

ஐந்து வயதுப் பிள்ளை போலே உன்னை நானும் நினைக்கவா
அங்கும் இங்கும் கன்னம் எங்கும் செல்ல முத்தம் பதிக்கவா
நிகழ்காலமும் எதிர்காலமும்  இந்த அன்பெனும் வரம் போதுமே
இறந்தாலுமே இறக்காமலே இந்த ஞாபகம் என்றும் வாழுமே

(உயிரின் உயிரே உனது விழியில்..)


 -- மு. இராகவன் என்ற சரவணன்
     29 செப்டம்பர் 2012 சனிக்கிழமை பிற்பகல் 3 45 மணி இந்திய நேரப்படி

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 10/09/2012 05:46:00 AM | Permalink | 3 comments
Thursday, December 23, 2010

படம்: தென்மேற்குப் பருவக்காற்று
பாடல்: வைரமுத்து
பாடியவர்: சங்கர் மஹாதேவன்
இசை: என். ஆர். ரகுநாதன்

பல்லவி
=======

சின்னாஞ் சின்னாங் காட்டுல என்
குன்னாங் குருவி சிக்குமா
வண்ணாங் கரட்டில் பார்த்தது என்
வழியில் வந்து நிக்குமா

மூஞ்சி மூஞ்சி தெரிஞ்சது அட
முழுசா யாரு பார்த்தது
கள்ள நாட்டுச் சிறுக்கி தான் அவ
கண்ணைக் கண்டதும் வேர்த்தது

பேரைக் கேட்க நெனச்சேன் என்
புத்தி பெற‌ண்டு போச்சு
ஊரக் கேக்க நெனச்சேன் என்
உசுரு வத்திப் போச்சு

நீ பகையாளி அம்சமோ இல்லை
பங்காளி வம்சமோ
குத்தும் பாம்பாக‌ ஒளியாதே வாடி

(சின்னாஞ் சின்னாங் காட்டுல)
சரணம் 1
========

நீ வீதி தாண்டிப் போனாக் கூட
வேர்வையில் க‌ண்டு பிடிப்பேன்
நீ ப‌ர்தா போட்டுப் போனால் கூட‌
பார்வையில் க‌ண்டு பிடிப்பேன்

வ‌ற‌ட்டி த‌ட்டிய‌ த‌ட‌த்தைப் பார்த்தே
வ‌ய‌சைக் க‌ண்டு பிடிப்பேன்

ஒரு வ‌க்கைப் ப‌ட‌ப்பில் ஒளிஞ்சாக் கூட‌
வைர‌த்தைக் க‌ண்டு பிடிப்பேன்

அழ‌கில் க‌லைவாணி ஒரு அடையாள‌ம் தெரிய‌லையே
ம‌னசக்‌ க‌ள‌வாணி ஒரு துப்பேதும் தொல‌ங்க‌லையே

ஆண்டிப்ப‌ட்டிக் க‌ண‌வாய் அட‌ அங்க‌யும் பாத்தேன் இல்லை
தாண்டிக் குடிக்கி மேல‌ நான் தாண்டிப் பாத்தும் இல்லை
சரணம் 2
=========
காடு தின்னும் ந‌ரியோ முத‌லில்
க‌ழுத்தைத் தானே க‌வ்வும்
ஆவி தின்னும் அழ‌கு முத‌லில்
க‌ண்ணைத் தானே க‌வ்வும்

ப‌ட்டாம்பூச்சி அடிக்கும் ரெண்டு
க‌ண்ணு எப்ப‌டி ம‌ற‌க்கும்
உன்னை நொட்டாங்கையில் தொட்டாக் கூட‌
எட்டாம் நாளும் ம‌ண‌க்கும்

ர‌தியே எங்க‌ தொலைஞ்ச‌ நெஞ்சு ர‌வைக்கெல்லாம் வாடுத‌டி
கிளியே எங்க ப‌ற‌ந்த‌ என் கிடையாடும் தேடுத‌டி

தேனிச் சில்லா பூரா ஒனைத் தேடிப் பாப்பேன் வ‌ஞ்சி
உன் குடும்பி சிக்கின‌ பின்னே நான் குடிப்ப‌து தானே க‌ஞ்சி

(சின்னாஞ் சின்னாங் காட்டுல‌..)

=========================
மு இராக‌வ‌ன் என்ற‌ ச‌ர‌வ‌ண‌ன்
04 ந‌வ‌ம்ப‌ர் 2010 வியாழ‌ன் 6 48 மாலை இந்திய‌ நேர‌ப்ப‌டி
http://thiraippadap-paadal-varigal.blogspot.com

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 12/23/2010 10:19:00 AM | Permalink | 2 comments
Friday, September 18, 2009
படம்: ஆதவன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், சின்மயி
பாடல்: <தெரியவில்லை இதுவரை>

பல்லவி
‍‍‍‍‍‍‍‍‍=======
பெ: வாராயோ வாராயோ காதல் கொள்ள‌
பூவோடு பேசாத காற்று இல்ல‌
ஏனிந்தக் காதலும் நேற்று இல்ல‌
நீயே சொல் மனமே
ஆ: வாராயோ வாராயோ மோனாலிசா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள்தோறும் நான் உந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே என்னோடு வா தினமே

சரணம் 1
‍========
பெ: இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான் தான்
உன் கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன் தான்
ஆ: பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப் போல ஓடும்
உனைக் காதல் கண்கள் தேடும்
பெ: ஓ லை லை லை லை காதல் லீலை
செய் செய் செய் செய் காலை மாலை
ஆ: உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன்
இவனுடன் சேர்ந்தாடு சின்ட்ரெல்லா

பெ: வாராயோ வாராயோ காதல் கொள்ள..

சரணம் 2
========
ஆ: நீயே நீயே அந்த ஜுலியட்டின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்
பெ: தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக் குளிப்பாயே
ஆ: நீ நீ நீ நீ மை ஃபேர் லேடி
வா வா வா வா என் காதல் ஜோதி
பெ: நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார சுருதி நீ

ஆ: வாராயோ வாராயோ மோனாலிசா

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 9/18/2009 08:55:00 AM | Permalink | 2 comments