Tuesday, January 15, 2008
 
படம்: காளை
பாடியவர்: மதுஸ்ரீ
இசை: ஜி.வி.பிரகாஷ்
 
 
பல்லவி
======
 
எப்ப நீ என்னைப் பாப்ப
எப்ப என் பேச்சைக் கேப்ப
எப்ப நான் பேச கெட்ட பையா
 
எப்போடா கோபம் கொறையும்
எப்படா பாசம் தெரியும்
எப்ப நான் பேச கெட்ட பையா
 
(எப்ப நீ என்னைப்)
 
நிழலாக உந்தன் பின்னால் நடமாடுறேன்
நிஜமாக உந்தன் முன்னால் தடுமாடுறேன்
 
ஒரு செல்லா நாயாய் உந்தன் முன்னே வாலாட்டுறேன்
உன் செயலை எல்லாம் தூரம் நின்று பாராட்டுறேன்
என்னை ஒரு முறை நீயும் திரும்பிப் பார்ப்பாயா
 
ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ
 
 
சரணம்-1
========
 
கண்ணைக் கட்டிக்கொண்டு உன் பின்னால்
காலம் முழுவதும் வருவேனே
உந்தன் பாதையில் பயமில்லை நீ வா
 
மலையை சுமக்கிற பலமுனக்கு
மலரை ரசிக்கிற மனமுனக்கு
இனிமேல் போதும் நீ எனக்கு நீ வா
 
உன் துணை தேடி நான் வந்தேன் துரத்தாதேடா
உன் கோபம் கூட நியாயமென்று ரசித்தேனடா
 
நீ தீயாயிரு எனைத் திரியாய்த் தொடு
நான் ஒளி பெற்றே வாழ்வேனடா
 
அட என்னைத் தவிர எல்லாப் பேரும் ஆணாய் ஆனாலும்
நான் உனக்கு மட்டும் சொந்தம் என்றேன் என்ன ஆனாலும்
நீ இல்லை என்று சொல்லி விடேண்டா
 
எரிமலை கண்கள் ரெண்டு  பனிமலை இதயம் ஒன்று
உன்னிடம் கண்டேன் கெட்ட பையா
பூமியில் ஆம்பளை என்று உன்னை தான் சொல்வேன் என்று
வேறென்ன சொல்ல கெட்ட பையா
 
உன்னாலே அச்சமின்றி நான் வாழவே
உன்கிட்ட அச்சப்பட்டு ஏன் சாகுறேன்
 
இந்தப் பூமிப்பந்தை தாண்டிப்போக முடியாதுடா
உன் அருகில் நின்றால் மரணம் கூட நெருங்காதடா
என் நிலவரம் உனக்குப் புரியவில்லையா
 
குழு: ஓ ஓ ஓ ஓ
 

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 1/15/2008 06:33:00 AM | Permalink | 0 comments