Wednesday, November 21, 2007
 
படம்: உன்னுடன்
இசை: தேவா
பாடியவர்: ஹரிஹரன்
பாடல்: வைரமுத்து
 
பல்லவி
=======
ஆ: கோபமா என் மேல் கோபமா
      பேசம்மா ஒரு மொழி பேசம்மா
      என் பாலைவனத்தில் உந்தன் பார்வை ஆறு வந்து பாய்ந்திடுமா
      உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன் ஜீவன் மெல்ல ஓய்ந்திடுமா
      உள்ளுயிரே உருகுதம்மா
பெ: ஆ ஆ ஆ
ஆ: கோபமா என் மேல் கோபமா...
 
சரணம் 1
==========
ஆ: உன் பார்வை வடிக்கின்ற பாலொளியில் என் வானம் விடியுமடி
     உன் பாதம் படிகின்ற சிறுதுகளில் என் ஆவி துடிக்குதடி
     கோபமா என் மேல் கோபமா
     என் மார்பு கீறடி பெண்ணே அதில்
     உன் முகம் தோன்றிடும் கண்ணே (என் மார்பு கீறடி)
     கண்கள் சாமரம் வீசிடுமா இல்லை
     காயத்தில் கத்தி வீசிடுமா
 
     (கோபமா என் மேல் கோபமா..)
 
சரணம் 2
==========
பெ: ஆ ஆ ஆ
ஆ: நான் கண்களைத் தொலைத்துப் பிறந்திருந்தால் இந்தக் காதல் துயரமில்லை
      நீ இன்னொரு கிரகத்தில் பிறந்திருந்தால் இந்த ஏக்கம் சிறிதுமில்லை
      கோபமா என் மேல் கோபமா
      என் கண்ணில் ஏனடி வந்தாய் என்
      காற்றை நீ கொள்ளை கொண்டாய் (என் கண்ணில்)
      மெளனங்கள் மொழிகளின் வேஷமம்மா
      மறு மொழி ஒன்று பேசிடம்மா

      கோபமா ஒரு மொழி பேசம்மா

      என் பாலைவனத்தில் உந்தன் பார்வை ஆறு வந்து பாய்ந்திடுமா
      உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன் ஜீவன் மெல்ல ஓய்ந்திடுமா
      உள்ளுயிரே உருகுதம்மா
     (கோபமா என் மேல் கோபமா...)
 

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 11/21/2007 05:57:00 AM | Permalink | 0 comments
Thursday, November 08, 2007

படம்: பொல்லாதவன்
இசை: ஜி.வி. பிரகாஷ் ('வெயில்' பட இசையமைப்பாளர்)
பாடியவர்கள்: கார்த்திக், பாம்பே ஜெயஸ்ரீ


பல்லவி
=======
ஆ: மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்சநேரம்
என் விழி எங்கும் பூக்காலம்
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே அய்யோ அது எனக்குப் பிடித்ததடி
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே அய்யோ பைத்தியமே பிடித்ததடி

பெ: மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்சநேரம்
என் விழி எங்கும் பூக்காலம்
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே அய்யோ அது எனக்குப் பிடித்ததடா

இரு: எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே அய்யோ பைத்தியமே பிடிக்குதடி

சரணம்-1
========
ஆ: முதன்முறை என் விரல் பூக்கள் பறித்தது தோட்டத்திலே
தலையணை உறையும் ஸ்வீட் ட்ரீம்ஸ் பறித்தது தூக்கத்திலே
காலைத் தேநீர் குழம்பாய் மிதந்தது சோற்றுக்குள்ளே
கிறுக்கன் என்றொரு பெயரும் கிடைத்தது வீட்டுக்குள்ளே

பெ: காதலே ஒருவகை ஞாபக மறதி கண்முன்னே நடப்பது மறந்திடுமே
வவ்வாலைப் போல் நம் உலகம் மாறித் தலைகீழாகத் தொங்கிடுமே
ஓ உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே அய்யோ அது எனக்குப் பிடித்ததடா

ஆ: எடை குறையுதே தூக்கம் தொலையுதே அய்யோ பைத்தியமே பிடிக்கிறதே

சரணம்-2
========
பெ: என் பேர் கேட்டால் உன் பேர் சொன்னேன் பதட்டத்திலே
பக்கத்து வீட்டில் கோலம் போட்டேன் குழப்பத்திலே
காதல் கவிதை வாங்கிப் படித்தேன் கிறக்கத்திலே
ஓ குட்டிப் பூனைக்கு முத்தம் கொடுத்தேன் மயக்கத்திலே
ஊ ஆ ஆ ஊ ஆ ஊ ஆ ஊ ஊ ஆ ரா ரே ரா ரே

ஆ: ஓஓஓ காதலும் ஒருவகை போதைதானே உள்ளுக்குள் வெறியேற்றும் பேய்போல
ஏனிந்தத்தொல்லை என்று தள்ளிப்போனால் புன்னகை செய்துகொஞ்சும் தாய்போல

பெ: உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே அய்யோ அது எனக்குப் பிடித்ததடா
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே அய்யோ பைத்தியமே பிடித்ததடா

ஆ: மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என்முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூக்காலம்

இரு: உடல் கொதிக்குதே உயிர் மிதக்குதே அய்யோ இது எனக்குப் பிடிக்குதடா
எடை குறையுதே தூக்கம் தொலையுதே அய்யோ பைத்தியமே பிடிக்குதடா

ஆ: ஆ ஆ ஆ ஆ .. ஆ ஆ ஆ ஆ..

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 11/08/2007 04:39:00 AM | Permalink | 0 comments