Wednesday, September 12, 2007

படம்: ரோஜா
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல்: வைரமுத்து
பாடியவர்கள்: உன்னிமேனன், சுஜாதா

பல்லவி
======

பெ: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
ஆ: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
பெ: நதி நீர் நீயானால் கரை நானே
சிறு பறவை நீயானால உன் வானம் நானே
ஆ: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெ: இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

சரணம் 1
=======

ஆ: பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூக்கேட்பதில்லை
பெ: பெண் இல்லாத ஊரிலே கொடி தான் பூப்பூப்பதில்லை
ஆ: உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது
பெ: இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார்சொன்னது

ஆ: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெ: இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
ஆ: இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
பெ: மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
ஆ: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெ: இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

ச‌ரணம் 2
========

பெ: நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப்பூ திடுக்கென்று மலரும்
ஆ: நீ வெடுக்கென்று ஓடினால் உயிர்ப்பூ சருகாக உலரும்
பெ: இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ
ஆ: மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா எந்தன் மார்போடு வந்தாடுதோ

பெ: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
ஆ: இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
பெ: இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
ஆ: மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
பெ: நதி நீர் நீயானால் கரை நானே
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே

ஆ: புது வெள்ளை மழை பெ: இங்கு பொழிகின்றது
ஆ: இந்தக் கொள்ளை நிலா பெ: உடல் நனைகின்றது

ஆ: புது வெள்ளை மழை பெ: இங்கு பொழிகின்றது
ஆ: இந்தக் கொள்ளை நிலா பெ: உடல் நனைகின்றது

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 9/12/2007 12:15:00 AM | Permalink | 0 comments
Wednesday, September 05, 2007

படம்: வீராப்பு
பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, மதுஸ்ரீ
இசை: டி.இமான்
பாடல்: நா.முத்துக்குமார்

பல்லவி
======

பெ: ஹாஹ ஹாஹ ஹா ஆ ஆ....
ஆ: புலியைக் கிளி ஜெயிச்சா காதல் காதல்
   புயலைப் பூ ஜெயிச்சா காதல் காதல்
பெ: புலியைக் கிளி ஜெயிச்சா காதல் காதல்
    புயலைப் பூ ஜெயிச்சா காதல் காதல்
ஆ: இந்தக் காதலில் யாரும் விழுந்துவிட்டால்
   எழுந்திட மனசு இருக்குமா
   எழுந்தாலும் மனசு இருக்குமா
பெ: நீ என்னைப் பார்க்கையில் நான் எங்கோ பார்க்கிறேன்
ஆ:  நீ எங்கோ பார்க்கையில் நான் உன்னைப் பார்க்கிறேன்

சரணம்-1
=======

பெ: காதல் ஒரு கண்ணாடி ஆனால் இந்த கண்ணாடி
    தோன்றுவதை எல்லாம் காட்டுவது இல்லை
ஆ: உள்ளத்தைப் பூட்டி வைத்தாலும் இரு கண்களில்
   காட்டிக் கொடுக்கிறதே
   உனக்கும் எனக்கும் முன்னாலே நம் நிழல்கள்
   ஒன்றாய் நடக்கிறதே
பெ: ஓ கண்கள் பார்க்கும் போதிலே களவாடிப் போகுமே
   காதலைக் கட்டிடக் கயிறுகள் ஏதுமில்லை

ஆ: நீ என்னைப் பார்க்கையில் நான் எங்கோ பார்க்கிறேன்
பெ: நீ எங்கோ பார்க்கையில் நான் உன்னைப் பார்க்கிறேன்
ஆ: புலியைக் கிளி ஜெயிச்சா காதல் காதல்
   புயலைப் பூ ஜெயிச்சா காதல் காதல்

சரணம்-2
=======

பெ: ஆ ஹாஅ ஆ ஹா...
    நீ தந்த மயிலிறகை நெடுங்காலம் வைத்திருந்தேன்
    மீண்டும் அந்தக் காலம் மனதினில் ஓடும் ஆ ஆ ஆ
ஆ: ஓ உன்னைக் காணும் முன்னாலே அடி என்னை
    நானே வெறுத்து வந்தேன்
    உன்னைக் கண்ட பின்னாலே நான் புல்லையும்
    பூண்டையும் நேசிக்கிறேன்
பெ: ஓ தாய் தந்த சுவாசமும் தந்தை போல நெருக்கமும்
   உன்னிரு தோள்களில் சாய்கையில் உணருகிறேன்

ஆ: நீ என்னைப் பார்க்கையில் நான் எங்கோ பார்க்கிறேன்
பெ: நீ எங்கோ பார்க்கையில் நான் உன்னைப் பார்க்கிறேன்


ஆ: புலியைக் கிளி ஜெயிச்சா காதல் காதல்
பெ:ஆ புயலைப் பூ ஜெயிச்சா காதல் காதல்
ஆ: இந்தக் காதலில் யாரும் விழுந்துவிட்டால்
   எழுந்திட மனசு இருக்குமா
பெ: எழுந்தாலும் மனசு இருக்குமா
ஆ: நீ என்னைப் பார்க்கையில் நான் எங்கோ பார்க்கிறேன்
பெ: நீ எங்கோ பார்க்கையில் நான் உன்னைப் பார்க்கிறேன்
   ஆ ஆ.. ஆ ஆ ஆ ஆ...
   நான் உன்னைப் பார்க்கிறேன்

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 9/05/2007 01:06:00 AM | Permalink | 0 comments