Saturday, August 25, 2007

படம்: பள்ளிக்கூடம்
பாடியவர்: ஸ்ரீனிவாஸ், ஜனனி
இசை: பரத்வாஜ்

பல்லவி
=======

ஆ: இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா
(இந்த நிமிடம்)
இந்த மெளனம் இந்த மெளனம் இப்படியே உடையாதா
இந்த மயக்கம் இந்த மயக்கம் இப்படியே நீளாதா

பெ: இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே நீளாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா

சரணம்‍‍‍‍‍ 1
========

ஆ: ஞாபகப் பறவை ஓடுகள் உடைந்து
வெளியே தாவிப் பறக்கிறதே
நீயும் நானும் ஒன்றாய்த் திரிந்த‌
நாட்கள் நெஞ்சில் மிதக்கிறதே
பெ: ஆயிரம் சொந்தம் உலகில் இருந்தும்
தனிமை என்னைத் துரத்தியதே
உன்னைக் காணும் நிமிடம் வரைக்கும்
உடலே பொம்மையாய்க் கிடக்கிறதே
ஆ: இதயம் நொறுங்குகிறேன் இதையே விரும்புகிறேன்
இது போதும் பெண்ணே இறப்பேனே கண்ணே
பெ: ஓ ஆயிரம் காலம் வாழ்கிற‌ வாழ்க்கை
நிமிடத்தில் வாழ்ந்தேனோ
ஆ: இந்த நிமிடம் இந்த நிமிடம்...


சரணம் 2
========

ஆ: கிழ‌க்கும் மேற்கும் வ‌ட‌க்கும் தெற்கும்
ம‌னித‌ன் வ‌குத்த‌ திசையாகும்
உன்முக‌ம் இருக்கும் திசையே எந்த‌ன்
க‌ண்க‌ள் பார்க்கும் திசையாகும்
பெ: கோடையும் வாடையும் இலையுதிர் கால‌மும்
இய‌ற்கை வ‌குத்த‌ நெறியாகும்
உன்னுட‌ம் இருக்கும் கால‌த்தில் தானே
எந்த‌ன் நாட்க‌ள் உருவாகும்
ஆ: உந்த‌ன் நிழ‌ல‌ருகே ஓய்வுக‌ள் எடுத்திடுவேன்
இது காத‌ல் இல்லை இது காம‌ம் இல்லை
பெ: ஓ தேக‌த்தைத் தாண்டிய‌ மோக‌த்தைத் தாண்டிய‌
உற‌வும் இதுதானோ

பெ: இந்த‌ நிமிட‌ம் இந்த‌ நிமிட‌ம் இப்படியே உறையாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா
ஆ: இந்த‌ மெள‌ன‌ம் இந்த‌ மெள‌ன‌ம் இப்ப‌டியே உடையாதா
இந்த‌ ம‌ய‌க்க‌ம் இந்த‌ ம‌ய‌க்க‌ம் இப்ப‌டியே நீளாதா

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/25/2007 01:44:00 AM | Permalink | 0 comments
Wednesday, August 22, 2007
 
பாடலைப் பற்றிய குறிப்பு:
 
ஆனந்த விகடனில் இப்படத்தின் இயக்குநர் வசந்த் அளித்த பேட்டியில், "பாடலாசிரியார் நா.முத்துக்குமார் எழுதியிருக்கும் இந்தப்பாடல் இனிமேல் ஒரு அருமையான தாலாட்டுப் பாட்டாக விளங்கப்போகிறது" என்று. (வரிகள் அப்படியே நினைவில்லை).
 
 
படம்         : சத்தம் போடாதே
பாடியவர்: ஷங்கர் மஹாதேவன்
பாடல்      : நா.முத்துக்குமார்
இசை       : யுவன்ஷங்கர்ராஜா

பல்லவி
========

பெ: ஹே ஹே ஹே        ஆ: ஹே ஹே
பெ: ஹோ ஹோ ஹோ ஆ: ஹோ ஹோ
பெ: லா லா லா                 ஆ: ம்ஹீம் ம்ஹீம் (ஹே ஹே ஹே)

ஆ: அழகுக் குட்டிச் செல்லம் உன்னை அள்ளித் தூக்கும் போது
    உன் பிஞ்சுவிரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன்
    ஆளைக் கடத்திப் போகும் உன் கன்னக்குழியின் சிரிப்பில்
    விரும்பி மாட்டிக் கொண்டேன் நான் திரும்பிப் போக மாட்டேன்
    அம்மு நீ என் பொம்மு நீ மம்மு நீ என் மின்மினி
    உனக்குத் தெரிந்த மொழியிலே எனக்குப் பேசத் தெரியல‌
    எனக்குத் தெரிந்த பாஷை பேச உனக்குத் தெரியவில்லை
    இருந்தும் நமக்குள் இது என்ன புதுப்பேச்சு
    இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி

குழு: ஜிஞ்சலேஞ்ச ஜிஞ்சலேஞ்ச‌ ஜிஞ்சலி
    மஞ்சரிஞ்ச மஞ்சரிஞ்ச மஞ்சரி (அழகுக் குட்டிச் செல்லம்)

சரணம்‍‍‍-1
=======

ஆ: ரோஜாப்பூ கைரெண்டும் காற்றோடு கதைபேசும்
    உன் பின்னழகில் பெளர்ணமிகள் தகதிமிதா ஜதிபேசும்
    எந்த நேரம் ஓயாத அழுகை
    ஏனிந்த முட்டிக்கால் தொழுகை
    எப்போதும் இவன் மீது பால்வாசனை
    என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை
    எந்த நாட்டைப் பிடித்துவிட்டான் இப்படி ஓர்
    அட்டினக்கால் தோரணை தோரணை

குழு: ஜிஞ்சலிஞ்ச ஜிஞ்சலிஞ்ச ஜிஞ்சலி....
ஆ: அழகுக் குட்டிச் செல்லம்..

சரணம்‍-2
=======

ஆ: நீ தின்ற மண்சேர்த்தால் வீடொன்று கட்டிடலாம்
    நீ சிணுங்கும் மொழிகேட்டால் சங்கீதம் கற்றிடலாம்
    தண்டவாளம் இல்லாத ரயிலை
    தவழ்ந்த படி நீ ஓட்டிப் போவாய்
    வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்
    கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்
    ஒளிந்து ஒளிந்து போக்குக் காட்டி ஓடுகின்ற
    கண்ணனே புன்னகை மன்னனே

குழு: ஜிஞ்சலிஞ்ச..
ஆ, குழு: அழகுக் குட்டிச் செல்லம்..
ஆ: அம்மு நீ என் பொம்மு நீ.....
ஆ, குழு: ஜிஞ்சலிஞ்ச...
ஆ: அழகுக் குட்டிச் செல்லம்..
 
 

Labels: , , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/22/2007 11:27:00 PM | Permalink | 5 comments
Monday, August 20, 2007
படம்                  : சென்னை 600028
பாடியவர்கள்  : எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா
இசை                : யுவன்ஷங்கர்ராஜா
இயக்கம்          : வெங்கட்பிரபு
 
பல்லவி
======
ஆ: யாரோ யாருக்குள் இங்கு யாரோ
      யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
      விடையில்லா ஓர் கேள்வி
பெண் குழு: உயிர்க்காதல் ஒரு வேள்வி (யாரோ யாருக்குள்)
ஆ: காதல் வரம் நான் வாங்க
      கடைக்கண்கள் நீ வீச
      கொக்கைப் போல நாள்தோறும்
      ஒற்றைக்காலில் நின்றேன் கண்மணி
பெ: யாரோ யாருக்குள் இங்கு யாரோ
      யார் நெஞ்சை இங்குக் யார் தந்தாரோ
      விடையில்லா ஒரு கேள்வி
ஆண் குழு: உயிர்க்காதல் ஒரு வேள்வி
 
சரணம்-1
=======
பெ: ஊரை வெல்லும் தோகை நானே
      உன்னால் இங்கு தோற்றுப் போனேன்
      கண்ணால் யுத்தமே நீ செய்தாய் நித்தமே
ஆ: ஓஹோஹோ
      நின்றாய் இங்கு மின்னல் கீற்றாய்
      நித்தம் வாங்கும் மூச்சுக் காற்றாய்
      உன்னை சூழ்கிறேன் நான் உன்னை சூழ்கிறேன்
பெ: காற்றில் வைத்த சூடம் போலே
      காதல் தீர்ந்து போகாது
ஆ: உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி
      என்னால் வாழ ஆகாது அன்பே வா ஹே
ஆ: யாரோ
பெ: ஆஹா யாருக்குள் இங்கு யாரோ
ஆ: ம்ஹீம்.. யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
பெ: விடையில்லா ஒரு கேள்வி
ஆ: உயிர்க்காதல் ஒரு வேள்வி
 
சரணம்-2
=======
ஆ: உந்தன் ஆடை காயப்போடும்
      உங்கள் வீட்டுக் கம்பிக்கொடியாய்
      என்னை எண்ணினேன் நான் தவம் பண்ணினேன்
பெ: ஆஹாஹாஹா
      கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி
      கிட்டக் கிட்ட வந்தாய் துள்ளி
      எட்டிப் போய்விடு இல்லை ஏதோ ஆகிடும்
 ஆ: காதல் கொஞ்சம் பேசும்போது
       சென்னைத் தமிழும் செந்தேன் தான்
பெ: ஆசை வெள்ளம் பாயும்போது
      வங்கக்கடலும் வாய்க்கால் தான்
      அன்பே வா ஹா..
 
ஆ: யாரோ
பெ: ம்ஹீம் ஹீம்
ஆ: யாருக்குள் இங்கு யாரோ
பெ: ஆஹா ஹா
ஆ: யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
      விடையில்லா ஒரு கேள்வி
பெ: உயிர்க்காதல் ஒரு வேள்வி
ஆ: காதல் வரம் நான் வாங்க
      கடைக்கண்கள் நீ வீச
      கொக்கைப்போல நாள்தோறும்
      ஒற்றைக்காலில் நின்றேன் கண்மணி
பெ: யாரோ யாருக்குள் இங்கு யாரோ
      யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
      விடையில்லா ஒரு கேள்வி
ஆண் குழு: உயிர்க்காதல் ஒரு வேள்வி

Labels: , , , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/20/2007 05:56:00 AM | Permalink | 0 comments
Friday, August 17, 2007

படம்: பீமா
பாடியவர்கள்: மதுஸ்ரீ, ஹரிஹரன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

பல்லவி
=======

பெ: ரகசிய கனவுகள் ஜல் ஜல்
    என் இமைகளைக் கழுவுது சொல் சொல்
    இளமையில் இளமையில் ஜில் ஜில்
    என் இருதயம் நழுவுது செல் செல்
ஆ: முதல்பிழை போல் மனதினிலே விழுந்தது உனதுருவம்
    ஓ உதடுகளால் உனைப்படிப்பேன் இருந்திடு அரைநிமிடம்
    தொலைவது போல் தொலைவது தான் உலகில் உலகில் புனிதம்
குழு: இறகே இறகே மயிலிறகே வண்ண மயிலிறகே வந்து தொடுஅழகே
     தொடத் தொடக் குழைகிற சுகம் சுகமே
     கண் படப் படப் புதிர்களும் அவிழ்ந்திடுமே (இறகே இறகே)

சரணம்-1
========

பெ: மறுபடி ஒருமுறை பிறந்தேனே
    விரல்தொடப் புருவமும் சிவந்தேனே
    ஓ.. இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ
    சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ
ஆ: சுடும் தனிமையை உணர்கிற மரநிழல் போல எனை சூட
    நரம்புகளோடு குறும்புகள் ஆடும் எழுதிய கணக்கு
    எனதிரு கைகள் தழுவிட நீங்கும் இருதய சுளுக்கு

பெ: ரகசிய கனவுகள்   குழு: ஜல் ஜல்
பெ: என் இமைகளைக் கழுவுது  குழு: சொல் சொல்
பெ: இளமையில் இளமையில்  குழு: ஜில் ஜில்
பெ: என் இருதயம் நழுவுது செல் செல்

சரணம்-2
=========

ஆ: உயிரணு முழுவதும் உனைப் பேச உனைப்பேச
    இமை தொழும் நினைவுகள் அனல் வீச அனல் வீச
    ஓ நெனச்சாலே செவப்பாகும் மருதாணித் தோட்டம் நீ
    தலைவைத்து நான் தூங்கும் தலகாணிக் கூச்சம் நீ
பெ: எனதிரவினில் கசிகிற நிலவொளி நீயே படர்வாயே
    நெருங்குவதாலே நொறுங்கி விடாது இருபது வருடம்
    ஓ தவறுகளாலே தொடுகிற நீயும் அழகிய மிருகம்

ஆ: ரகசிய கனவுகள் ஜல் ஜல்…..
பெ: குயிலினமே குயிலினமே எனக்கொரு சிறகு கொடு
    முகிலினமே முகிலினமே முகவரி எழுதிக் கொடு
    அவனிடமே அவனிடமே எனது கனவை அனுப்பு
குழு: இறகே இறகே … (இறகே இறகே)

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/17/2007 08:18:00 AM | Permalink | 2 comments
Thursday, August 16, 2007
படம்: இந்தியன்
பாடல்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலா
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
 
பல்லவி
======
ஆ: கப்பலேறிப் போயாச்சு சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
      நட்டநடு ராவாச்சு நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா
      விடியும் வரையில் போராடினோம் உதிரம் நதியாய் நீராடினோம்
      வைக்கல் எல்லாம் வாளாச்சு துக்கம் எல்லாம் தூளாச்சு கண்ணம்மா
      கண்ணம்மா.... நம்ம வாசல் தேடி சாரல் வரும் 
      மெதுவானம் தூவும் தூறல் வரும்
      வாழ்வில் சூழ்ந்த சோகம் யாவும் இப்ப (கப்பலேறிப் போயாச்சு)
 
சரணம் - 1
==========
 
பெ: வண்ணமான் வஞ்சிமான் நீர்க்கோலம் கண்களால் கன்னத்தில் போட
      இன்னுமா இன்னுமா போர்க்கோலம் இங்குநீ அங்குநான் போராட
      உனைக் கேட்டா என் நெஞ்சை அள்ளிக் கொடுத்தேன்
      தினம் நான் தான் என் அன்பே முள்ளில் படுத்தேன்
      நானோர் தீவாய் ஆனேன் வாவா அம்மம்மா நாளெல்லாம் 
      கானல் நீரைக் குடித்தேன்
 
ஆ: இப்ப (கப்பலேறிப் போயாச்சு)
 
சரணம் - 2
==========
ஆ: லாலா லாலா லாலலலலா லாலாலாலா லாலா லாலலலலா
      அன்னமே அன்னமே நான் சொல்லி வந்ததா தென்றலும் நேற்று
      உன்னையே உன்னையே நான் எண்ணி வெந்ததைச் சொன்னதா பூங்காற்று
      உந்தன் காலில் மெட்டி போல் கூட நடப்பேன்
      உந்தன் கண்ணுக்கு கண்ணீர் போல் காவல் இருப்பேன்
      மாலை சூடி தோளில் ஆடி கைதொட்டு மெய்தொட்டு 
      உன்னில் என்னைக் கரைப்பேன்
      இப்ப (கப்பலேறிப் போயாச்சு)

Labels: , , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/16/2007 10:56:00 AM | Permalink | 1 comments
Tuesday, August 14, 2007
படம்: உன்னாலே உன்னாலே
பாடியவர்கள்: ஹரிசரண், மதுஸ்ரீ
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்: பா.விஜய்

பல்லவி
======

ஆ: வைகாசி நிலவே வைகாசி நிலவே
மைபூசி வைத்திருக்கும் கண்ணில் நீ
பொய்பூசி வைத்திருப்பதென்ன
பெ: வெட்கத்தை உடைத்தாய் கைக்குள்ளே அடைத்தாய்
தண்ணீரை ஊற்று குளிர்ந்திட நான்
தள்ளாடித் தத்தளிக்கும் நேரம்
ஆ: விழியில் இரண்டு விலங்கு இருக்கு
அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு
என் ஜீவன் வாழும்வரை ஓ..
என் செய்வாய் நாளும் எனை ( வைகாசி நிலவே)

சரணம்-1
=======

ஆ: தூவானம் எனத் தூறல்கள் விழத்
தப்பான எண்ணம் நெஞ்சில் ததும்பிடுதே
பெ: கண்ணா நீ பொறு கட்டுக்குள் இரு
காதல் கைகூடட்டும்
அ: இதோ எனக்காக விரிந்தது இதழ் எடுக்கவா தேனே
பெ: கனி எதற்காகக் கனிந்தது அணில் கடித்திடத் தானே
அ: ஹோ.. காலம் நேரம் பார்த்துக் கொண்டா
காற்றும் பூவும் காதல் செய்யும்

ஆ: வைகாசி நிலவே..
பெ: ஹோ.. வெட்கத்தை உடைத்தாய்..

சரணம்-2
========

ஆ: நூலாடை என மேலாடை எனப்
பாலாடை மேனி மீது படரட்டுமா
பெ: நான் என்ன சொல்ல நீ என்னை மெல்லத்
தீண்டித் தீ வைக்கிறாய்
ஆ: அனல் கொதித்தாலும் அணைத்திடும் புனல் அருகினில் உண்டு
பெ: நனை நெருப்பாக இருக்கையில் எனைத் தவிப்பது கண்டு
ஆ: ஹோ.. மோகத்தீயும் தேகத் தீயும்
தீர்த்தம் பார்த்துத் தீராதம்மா

ஆ: வைகாசி நிலவே..
பெ: ஹோ.. வெட்கத்தை உடைத்தாய்..
ஆ: விழியில் இரண்டு விலங்கு இருக்கு
பெ: அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு
ஹோ. என் ஜீவன் வாழும் வரை
என் செய்வாய் நாளும் எனை (என் ஜீவன்).

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/14/2007 08:22:00 AM | Permalink | 2 comments