Monday, August 07, 2006
படம் : பாரிஜாதம்
பாடியவர்கள் : ஹரிசரண், ஸ்ருதி
இசை : தரண்

பல்லவி
======

பெ: உன்னைக் கண்டேனே முதல்முறை நான்
என்னைத் தொலைத்தேனே முற்றிலுமாய்த் தான்
(உன்னைக் கண்டேனே)
காதல் பூதமே என்னை நீயும் தொட்டாய்
ஹய்யோ ஹய்யய்யோ அச்சம் வருதே
தப்பிச் செல்லவே வழிகள் இல்லை இங்கே
ஹய்யோ ஹய்யய்யோ ச்சீ என்னவோ பண்ணினாய் நீயே
(உன்னைக் கண்டேனே முதல்முறை)
ஆ: எரிக்கிற மழையிது குளிர்கிற வெயிலிது
கொதிக்கிற நீரிது அணைக்கிற தீயிது
இனிக்கிற வலியிது இரும்புள்ள பூவிது
இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே
நிஜமுள்ள பொய்யிது நிறமுள்ள இருட்டிது
மெளனத்தின் மொழியிது மரணத்தின் வாழ்விது
அந்தரத்தின் கடலிது கட்டிவந்த கனவிது
அஹிம்சையில் கொல்வது கேள் பெண்ணே
பெ: ஏங்கினேன் நான் தேங்கினேன்
ஏனடா போதும் இம்சைகள்
வானமும் இந்த பூமியும் உந்தன் தோற்றமே
உன்பேர் சொன்னாலே உள்ளே தித்திக்குமே


சரணம் 1
========
பெ: காதல் கடிதம் அது கொஞ்சம் பேசும்
கண்ணோடு இருக்கும் பல கடிதம்
ஆ: பெண்ணே நானும் உன் கண்ணைப் படித்தேன்
புரியாமல் தவித்தேன் பொய்
சொல்லுதோ மெய் சொல்லுதோ
ஹோ காதல் எனைத் தாக்கிடுதே
பெ: சரிதான் என்னையும் அது சாய்த்திடுதே
ஆ: இரவில் கனவும் எனை சாப்பிடுதே
பெ: பொதுவாய் வயதில் இதில் தப்பிக்க யாருமில்லையே
(உன்னைக் கண்டேனே முதல்முறை)


சரணம் 2
========
பெ: ஏனோ இரவில் ஒருபாடல் கேட்டால்
உடனே என் உள்ளே நீ வருவாய்
ஆ: கோவில் உள்ளே கண்மூடி நின்றால்
உன் உருவம் தானே எந்நாளுமே நெஞ்சில்தோன்றுமே
நான் உன்னால் தான் சுவாசிக்கிறேன்
பெ: நான் உன் பேர் தினம் வாசிக்கிறேன்
ஆ: உயிரை விடவும் உனை நேசிக்கிறேஹேன்
பெ: கடவுள் நிலையை நம் கண்ணிலே காட்டிடும் காதல்
(உன்னைக் கண்டேனே)

பெ: உன்னைக் கண்டேனே முதல்முறை நான்
என்னைத் தொலைத்தேனே முற்றிலுமாய் தான்
காதல் பூதமே
ஆ: என்னை நீயும் தொட்டாய்
பெ: ஹய்யோ ஹய்யய்யோ
ஆ: அச்சம் வருதே
பெ: தப்பிச் செல்லவே வழிகள் இல்லை இங்கே
ஆ: ஹய்யோ ஹய்யய்யோ
பெ: ச்சீ என்னவோ பண்ணினாய் நீயே

ஆ: எரிக்கிற மழையிது குளிர்கிற வெயிலிது
கொதிக்கிற நீரிது அணைக்கிற தீயிது
இனிக்கிற வலியிது இரும்புள்ள பூவிது
இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே
நிஜமுள்ள பொய்யிது நிறமுள்ள இருட்டிது
மெளனத்தின் மொழியிது மரணத்தின் வாழ்விது
அந்தரத்தின் கடலிது கட்டிவந்த கனவிது
அஹிம்சையில் கொல்வது கேள் பெண்ணே

பெ: ஏங்கினேன் நான் தேங்கினேன்
ஏனடா போதும் இம்சைகள்
வானமும் இந்த பூமியும் உந்தன் தோற்றமே
உன்பேர் சொன்னாலே உள்ளே தித்திக்குமே

பெ: மனசுக்குள் ஏதோ சொல் சொல்
எதிரினில் வந்து நில் நில்
உயிருக்குள் ஏதோ ஜல் ஜல்
இது சரிதானா நீ சொல் (மனசுக்குள்)


Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/07/2006 07:09:00 AM | Permalink | 4 comments
படம் : நாளை
பாடியவர் : கார்த்திக்
இசை : கார்த்திக்ராஜா

பல்லவி
======
ஒருமாற்றம் உருமாற்றம்
இரு இதயத்தில் நடக்கிற தடுமாற்றம்
நடைமாற்றம் உடைமாற்றம்
இந்த நெருப்புக்குள் எப்படி நீரோட்டம்
நடந்து போகும் பாதையில் இரண்டுபக்கம் பூமரம்
மழையும் வெயிலும் கலந்தபின் வானவில்லாய் மாறிடும்
உலகமே புதிதாய்த் தோன்றும்

(ஒருமாற்றம் உருமாற்றம்)

சரணம் 1
========
நேற்றுவரை...
நேற்றுவரை வானத்தை நிமிர்ந்துபார்க்க நேரமில்லை
கண்கள்மூடிப் பார்த்தாலும் கனவுகள் கண்டதில்லை
முற்றுப்புள்ளி பக்கத்திலே முகவரி ஒன்று வருகிறதே
மூச்சுக்காற்று மொத்தத்திலே அர்த்தம் இன்று புரிகிறதே
புரிகிறதே ஓ ஓ ஓ ஓ

(ஒருமாற்றம் உருமாற்றம்)

சரணம் 2
========
பூமியிலே...
பூமியிலே யாருமிங்கு தனியாகப் பிறப்பதில்லை
வழித்துணைகள் வருகையிலே பயணங்கள் மறப்பதில்லை
கட்டாந்தரையில் இன்று ஒரு காலடிச்சுவடு தெரிகிறதே
வெட்டவெளியில் திரிந்தபின்னே வீட்டின் அருமை புரிகிறதே
புரிகிறதே ஓ ஓ ஓ ஓ

(ஒருமாற்றம் உருமாற்றம்)

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/07/2006 12:26:00 AM | Permalink | 2 comments