Wednesday, May 24, 2006
படம் : கோடம்பாக்கம்
பாடியவர்கள் : ஹரீஷ் ராகவேந்திரா, ஹரிணி
இசை : சிற்பி

பல்லவி
======
ஆ: ரகசியமானது காதல் மிகமிக
ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம்தனை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகமனுபவிக்கும்
சுவாரசியமானது காதல் மிகமிக
சுவாரசியமானது காதல்

சரணம் - 1
==========
சொல்லாமல் செய்யும் காதல் கனமானது
சொல்லச் சொன்னாலும் சொல்வதில்லை மனமானது
சொல்லும் சொல்லைத் தேடித்தேடி யுகம் போனது
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது
வாசனை வெளிச்சததைப் போல அது சுதந்திரமானதுமல்ல
ஈரத்தை இருட்டினைப் போல அது ஒளிந்திடும் வெளிவரும் மெல்ல
(ரகசியமானது காதல்)

சரணம் - 2
=========
பெ கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது
கேட்கும் கேள்விக்காகத் தானே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது
நீரினை நெருப்பினைப் போல விரல் தொடுவதில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளைப் போல அதை உயிரினில் உணரணும் மெல்ல
(ரகசியமானது காதல்)

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/24/2006 09:50:00 AM | Permalink | 2 comments
Tuesday, May 23, 2006
படம் : கஜினி
பாடல் : நா.முத்துக்குமார்
பாடியவர்கள் : ஸ்ரீராம் பார்த்தசாரதி, பாம்பே ஜெயஸ்ரீ
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

பல்லவி
======
ஆ: சுட்டும் விழிச் சுடரே சுட்டும் விழிச் சுடரே
என் உலகம் உன்னைச் சுற்றுதே
சட்டைப் பையில் உன் படம் தொட்டுத் தொட்டு உரச
என் இதயம் பற்றிக் கொள்ளுதே
உன் விழியில் விழுந்தேன் விண்வெளியில் பறந்தேன்
கண் விழித்து சொப்பனம் கண்டேன் உன்னாலே
கண் விழித்து சொப்பனம் கண்டேன்
(சுட்டும் விழிச் சுடரே ...)

சரணம் - 1
=========
ஆ: மெல்லினம் மார்பில் கண்டேன்
வல்லினம் விழியில் கண்டேன்
இடையினம் தேடி இல்லை என்றேன்
பெ: தூக்கத்தில் உளறல் கொண்டேன்
தூறலில் விரும்பி நின்றேன்
தும்மல் வந்தால் உன் நினைவைக் கொண்டேன்
ஆ: கருப்பு வெள்ளைப் பூக்கள் உண்டா
உன் கண்ணில் நான் கண்டேன்
உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன் (உன் கண்கள்)
பெ: சுட்டும் விழிச் சுடரே..

சரணம் - 2
==========
பெ: மரங்கொத்திப் பறவை ஒன்று
மனங்கொத்திப் போனதென்று
உடல் முதல் உயிர்வரை தந்தேன்
ஆ: தீயின்றித் திரியும் இன்றி
தேகங்கள் எரியும் என்று
இன்று தானே நானும் கண்டு கொண்டேன்
பெ: மழை அழகா வெயில் அழகா
கொஞ்சும் போது மழை அழகு
கண்ணாலே கோபப்பட்டால் வெயில் அழகு (கண்ணாலே)
ஆ: சுட்டும் விழிச் சுடரே......

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/23/2006 07:05:00 AM | Permalink | 0 comments
Monday, May 22, 2006
படம் கன்னத்தில் முத்தமிட்டால்
பாடல் வைரமுத்து
பாடியவர் ஏ.ஆர். ரஹ்மான்
இசை ஏ.ஆர். ரஹ்மான்

பல்லவி
======
வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்ணில் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிறுமுதல் சிரிப்பில்
(வெள்ளைப் பூக்கள்)

பல்லவி - 1
==========
காற்றின் பேரசைவும் மழை பாடும் பாடல்களும்
ஒரு மெளனம் போல் இன்பம் தருமோ ஓஓஓஓஒ
கோடி கீர்த்தனமும் கவி கோர்த்த வார்த்தைகளும்
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ ஓஓ
ஆ ஹா ஹா ஹா
(வெள்ளைப் பூக்கள்..)


பல்லவி - 2
==========
எங்கு சிறு குழந்தை தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே
எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ
அங்கு கூவாயோ வெள்ளைக் குயிலே
(வெள்ளைப் பூக்கள்)

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/22/2006 07:26:00 AM | Permalink | 0 comments
Sunday, May 21, 2006
படம் : டும் டும் டும்
பாடியவர்கள் : சித்ரா சிவராமன், மால்குடி சுபா
இசை : கார்த்திக் ராஜா
இயக்கம் : அழகம்பெருமாள்

பல்லவி
======
மால்குடி சுபா:
அத்தான் வருவாக ஒரு முத்தம் கொடுப்பாக
என் அச்சம் வெக்கம் கூச்சம் அத அள்ளி ருசிப்பாக (அத்தான் வருவாக)
கதவ சாத்தினால் ஜன்னல் தெறப்பாக
ஜன்னல சாத்தத் தான் மனசில்லையே
உன்ன காணத்தான் ரெண்டு கண்களா
பிரம்மன் செஞ்சது சரியில்லையே
ஆண்: ஆமா.....
மால்குடி சுபா: பாலும் புதுத்தேனும் பாகும் கசப்பாக
அவுக தான் எனக்கு இனிப்பாக (அத்தான் வருவாக)
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆண்: சபாஷ் கொன்னுட்டேடிமா ஹோ ஹோ ஹோஹ்....

சரணம் - 1
=========
மால்குடி சுபா: அவுக வந்து நின்னாலே சரியாக் காது கேட்காது
முழுசாப் பார்வை தெரியாது ஒழுங்காப் பேச முடியாது
சித்ரா சிவராமன்: ஆக மொத்தம் காதல் என்ன குதூகலக் குத்தந்தான்
குதூகலக் குத்தத்துல கொழம்புது சித்தந்தான்
மால்குடி சுபா: ஒரு உலகம் எனக்காக
சித்ரா சிவராமன்: எனக்கு முன்னே இருப்பானே


சரணம் - 2
=========
ஆண் : ஆ ஆ ஆ ஆஆஆ
மால்குடி சுபா: அவுக என்ன சொன்னாங்க
அத நான் சொல்ல மாட்டேங்க ஏய்
அவங்க என்ன தந்தாக

அழகாப் பொத்தி வச்சேங்க
சித்ரா சிவராமன்: புத்தன் கூட காதலித்தா புத்தி மாறுவானே
போதி மர உச்சியில ஊஞ்சலாடுவானே
சிரிப்பீக அழுவீக கிறுக்காகத் திரிவீக

ஆண்: லா லா லலலல லா லா லலலல லாலா (லாலா)
மால்குடி சுபா: ஹே பேபி அத்தான் வருவானே
ஒரு முத்தம் கொடுப்பானே
உன் அச்சம் வெக்கம் கூச்சம்
அத அள்ளி ருசிப்பானே (அத்தான் வருவானே)
கதவ சாத்தினா ஜன்னல் திறப்பானே
ஜன்னல சாத்தத் தான் ம்ஹீம் ..வழியில்லையே
ஆண்: தோடா
மால்குடி சுபா: உன்னை காணத்தான் ரெண்டு கண்களா
பிரம்மன் செஞ்சது சரியில்லையே
பாலும் புதுத்தேனும் பாகும் கசப்பாக
அவுங்கத் தான் உனக்கு இனிப்பா.. ஸோ ஸ்வீட்.. (அத்தான் வருவானே)

ஆண்: ஓம் கிரீம் கிரீம் ஐஸ் கிரீம் கிரீம்
ஓம் கிரீம் கிரீம் ஐஸ் கிரீம் கிரீம்
ஓம் கிரீம் கிரீம் ஓம் ஐஸ் கிரீமாய நமஹ......

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/21/2006 11:25:00 AM | Permalink | 0 comments
Saturday, May 20, 2006
படம் : தம்பி
பாடல்: வைரமுத்து
பாடியவர்: உன்னிகிருஷ்ணன், ஹரிணி
இசை: வித்யாசாகர்

பல்லவி
-----------
பெ: அ அ ஆ அ அ ஆஆஆ
ஆ: அ அ ஆ அ அ ஆ
ஆ: சுடும் நிலவு சுடாத சூரியன்
ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா (எல்லாம்)
பெ: காதலித்துப் பார்... காதலித்துப் பார்..

சரணம் - 1
----------------
ஆ: இமையடித்தாலும் இதயம் வலிக்கும்
வலிகளில் கூட வாசனை இருக்கும்
குழு: காதலித்துப் பார்.. காதலித்துப் பார்..
பெ: நரம்புக்கு நடுவே நதிகள் நகரும்
நதியிருந்தாலும் நாவே உலரும்
ஆ: தப்பு எல்லாம் கணிதமாகும்
தவறு எல்லாம் புனிதமாகும்
பெ: பச்சைத் தண்ணீர் வெப்பமாகும்
எச்சில் பண்டம் அமிர்தமாகும்
ஆ: நான்கு உதடு பேசும் வார்த்தை முத்தமாகும்

பெ: சுடும் நிலவு சுடாத சூரியன்.

சரணம் - 2
-----------------
பெ: மழைத்துளி நமக்கு சமுத்திரமாகும்
சமுத்திரம் எல்லாம் துளியாய்ப் போகும்
குழு: காதலித்துப் பார்.. காதலித்துப் பார்..
ஆ: சத்தியக் காதல் என்னமும் செய்யும்
சந்திர ஒளியை ஆடையாய் நெய்யும்
பெ: தொட்ட பாகம் மோட்சமாகும்
மற்ற பாகம் காய்ச்சலாகும்
ஆ: தெய்வம் தூங்கி மிருகமாகும்
மிருகம் தூங்கி தெய்வமாகும்
பெ: தேடல் ஒன்றே வாழ்க்கை என்று தெரிந்து போகும்

ஆ: சுடும் நிலவு சுடாத சூரியன்

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/20/2006 04:27:00 AM | Permalink | 2 comments
Wednesday, May 17, 2006
படம் : ராம்
பாடியவர் : மதுமிதா
இசை : யுவன் ஷங்கர் ராஜா

பல்லவி
-----------
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையைக் கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
(விடிகின்ற பொழுது தெரிந்திடுமா)


சரணம் - 1
-------------
உன்னாலே எனக்குள் உருவான உலகம்
பூகம்பம் இன்றி சிதறுதடா
எங்கேயோ இருந்து நீதீண்டும் நினைவே
எனை இன்னும் வாழ சொல்லுதடா
தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல்
தொடப்போகும் நேரம் மரணத்தின் வாசல்
காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடுச்சே
மெல்ல மெல்ல என்னைக் கொல்லத் துணிஞ்சிடுச்சே
தீயில் என்னை நிற்கவைச்சு சிரிக்கிறதே
தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேட்கிறதே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ


சரணம் - 2
-------------
காட்டுத்தீ போல கண்மூடித்தனமாய்
என்சோகம் சுடர்விட்டு எரியுதடா
மனசுக்குள் சுமந்த ஆசைகளெல்லாம்
வாய்பொத்தி வாய்பொத்தி நகருதடா
யாரிடம் உந்தன் கதைபேச முடியும்
வார்த்தைகள் இருந்தும் மெளனத்தில் கரையும்
பச்சைநிலம் பாலைவனம் ஆனதடா
பூவனமும் போர்க்களமாய் மாறுதடா
காலம் கூடக் கண்கள் மூடிக் கொண்டதடா
உன்னை விடக் கல்லறையே பக்கமடா
(விடிகின்ற பொழுது தெரிந்திடுமா)

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/17/2006 10:32:00 AM | Permalink | 2 comments
Tuesday, May 16, 2006
படம் : ராம்
பாடியவர் : விஜய் யேசுதாஸ் , யுவன் ஷங்கர் ராஜா
இசை : யுவன் ஷங்கர் ராஜா

பல்லவி
---------
நிழலினை நிஜமும் பிரிந்திடுமா
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா
கருவறை உனக்கும் பாரமா அம்மா
மீண்டும் என்னை ஒருமுறை சுமப்பாயம்மா...
லாஹில்லா லாஹி லல்லல்லாலல்லா லாஹில்லா லாஹி லல்லல்லால்லா (லாஹில்லா..)
(நிழலினை நிஜமும் பிரிந்திடுமா)

சரணம் - 1
-------------
நடமாடும் சவமாய் நானிங்கே இருக்க
விதிசெய்த சதியா தெரியலம்மா
கடல்துப்பும் அலையும் கடலில்தான் சேரும்
அதுபோல என்னையும் சேர்த்துக்கம்மா
உன்பிள்ளை என்று ஊர்சொல்லும் போது
எனக்கே நான் யாரோ என்றாகிப் போனேன்
ஒத்த சொந்தம் நீயிருந்தால் போதுமம்மா
மொத்த பூமி எனக்கேதான் சொந்தமம்மா
பத்துமாசம் உள்ளிருந்தேன் பக்குவமா
பூமிக்குநான் வந்ததென்ன குத்தமம்மா ...
லாஹில்லா லாஹி லல்லல்லாலல்லா லாஹில்லா லாஹி லல்லல்லால்லா

சரணம் - 2
-------------
லாஹில்லா லாஹி லலல்லலா லாஹில்லா லாஹி ஏ ஏ லாஹி
திசையெல்லாம் எனக்கு இருளாகிக் கிடக்கு
எங்கேயோ பயணம் தொடருதம்மா
என்னோட மனசும் பழுதாகிப்போச்சு
சரிசெய்ய வழியும் தெரியலம்மா
சூரியன் உடைஞ்சா பகலில்ல அம்மா
ஆகாயம் மறைஞ்சா அகிலமே சும்மா
என்னைச் சுத்தி என்னென்னமோ நடக்குதம்மா
கண்டதெல்லாம் கனவாகிப் போயிடுமா
தூக்கத்திலே உன்னநானும் தொலைச்சேனம்மா...
தேடித்தர தெய்வம் வந்து உதவிடுமா ஆ ஆ ஆ
லாஹில்லா லாஹி லல்லல்லாலல்லா லாஹில்லா லாஹி லல்லல்லால்லா

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/16/2006 11:49:00 AM | Permalink | 3 comments
Monday, May 15, 2006
படம் : ராம்
பாடியவர் : கே. ஜே. யேசுதாஸ்
இசை : யுவன் ஷங்கர் ராஜா

பல்லவி
---------
ஆராரிராரோ நானிங்கே பாட
தாயே நீ கண்ணுறங்கு
என்னோட மடி சாய்ந்து (ஆராரிராரோ)
வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் ஸ்வர்க்கமே
வேதம் நான்கும் சொன்னதே
அதை நான் அறிவேனே..
அம்மா என்னும் மந்திரமே
அகிலம் யாவும் ஆள்கிறதே (ஆராரிராரோ)


சரணம் - 1
------------
வேரில்லாத மரம் போல் என்னை
நீ பூமியில் நட்டாயே
ஊர் கண் எந்தன் மேலே பட்டால்
உன் உயிர் நோகத் துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
நீ சொல்லித் தந்தாயே
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வழிநடத்திச் சென்றாயே
உனக்கே ஓர் தொட்டில் கட்டி
நானே தாயாய் மாறிட வேண்டும் (ஆராரிராரோ)


சரணம் - 2
------------
தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம்
நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிரல்லவா
காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியின் மேலே
சுழலாத பூமியும் நீ
இறைவா நீ ஆணையிடு
தாயே எந்தன் மகளாய் மாற (ஆராரிராரோ)

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/15/2006 10:54:00 AM | Permalink | 2 comments
முதல் பதிவு.. சோதனை முயற்சி....
 
posted by Raghavan alias Saravanan M at 5/15/2006 10:16:00 AM | Permalink | 1 comments